காரில் தூசியை துடைத்து துடைத்து ஓவியமாக்கும் வித்தகர்
காரை பராமரிப்பது என்பது மிக கடினமான காரியமாக பலருக்கு இருக்கிறது. வாரம் ஒருமுறையாவது காரை கழுவி சுத்தப்படுத்தினால்தான் அது கார் போன்று இருக்கும். இல்லையேல் அது காயலாங்கடை பொருள் போல மாறிவிடும்.
இந்த நிலையில், தூசிப் படிந்து நிற்கும் கார்களில் கலை நயமிக்க ஓவியங்களை மிக நுணுக்கமாக வரைந்து அசத்துகிறார் ரபேல் வய்சோவ் என்ற இந்த ஓவியர். அசெர்பெய்ஜன் நாட்டை சேர்ந்த இவர் வெறும் விரல்களால் வித்தை காட்டுகிறார். தூசியை தட்டி தட்டி அவர் வெறும் விரல்களால் உருவாக்கிய ஓவியங்களை ஸ்லைடரில் காணலாம்.

தூரிகை இல்லை
கையில் தூரிகை இல்லை, எந்தவொரு கருவியும் இல்லை. ஆனால், தூசியை வெறும் விரலால் துடைத்து துடைத்து தோரணங்களையும், நகரங்களையும் கண் முன்னே கொண்டு வருகிறார் ரபேல்.

குறுகிய நேரம்
மிக குறுகிய நேரத்தில் இந்த கார் ஓவியத்தை அவர் வரைந்து பார்ப்போரை அசத்துகிறார்.

நுணக்கம்
குறுகிய நேரத்தில் வரையும் இந்த ஓவியம் மிக நேர்த்தியாகவும், நுணக்கமாகவும் இருப்பது பார்ப்போரை வியக்க வைக்கிறது.

ஆற்றல்
நகரத்தையும், அதில் விமானம் பறப்பது போலவும் வரைந்துள்ள இந்த ஓவியத்தை மிக சொற்ப நேரத்தில் இதை பதிவு செய்த போட்டோகிராபருக்காக அவர் வரைந்து காட்டியுள்ளார்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இந்த ரபேலுக்கு விரலே ஆயுதமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications








