Just In
- 32 min ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 1 hr ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 2 hrs ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 3 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
Don't Miss!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத வரி விதிப்பதா...?? டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை
ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத வரி விதிப்பதா...?? டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை..!!
ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு இந்தியாவில் 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தயாராகும் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்தியாவிலும் இந்த மோட்டார் சைக்கிளுக்கு என்றே பெரிய வாடிக்கையாளர் வட்டம் உண்டு.
வெளிநாடுகளில் தயாராகி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு மத்திய அரசு சுங்க வரி விதித்து வருகிறது.
அதனடிப்படையில் 800சிசி திறன் பெற்ற வாகனங்களுக்கு அதன் விலையிலிருந்து 60 சதவீத இறக்குமதி வரி வசூலிக்கப்படுகிறது.
800சிசி-க்கு மேற்பட்ட திறன் கொண்ட வாகனங்களுக்கு அவற்றின் விலையிலிருந்து 75 சதவீத இறக்குமதி வரி வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்க தயாரிப்புகளுக்கு மற்ற நாடுகளில் வசூலிக்கப்படும் வரி வதிப்பை குறித்து கருத்து கூறினார்.
Recommended Video
அமெரிக்காவின் தயாரிப்புகள் சில நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதை குறிப்பிட்ட நாடுகளும் உற்பத்தி செய்கின்றன. இந்நிலையில் குறிப்பிட்ட நாடுகளில் அமெரிக்கா நுழைவதற்கு ஏராளமான வரியை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.
தொடர்ந்து அவர், இந்தியாவில் ஹார்லிட் டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத இறக்குமதி வரி வசூலிக்கப்படுவதை குறித்து கருத்து தெரிவித்தார்.
இந்த பைக்குகளுக்கான இறக்குமதி வரியை குறைத்தால், இந்திய வாடிக்கையாளர்கள் அதிகளவில் ஹார்லி டேவிட்சன் வாகனங்களை வங்குவார்கள் என்றார்.
இந்தியாவில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டு அதன்மூலம் ஹார்லி டேவிட்சன் தயாரிப்புகள் பிரபலமானால், அதனால் உற்பத்தி பெருகும். இதன்மூலம் அமெரிக்கா அதிக வருவாய் ஈட்ட முடியும். இதை உணர்த்தவே டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசிய போது, இந்தியாவிலிருந்து இங்கே இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு அமெரிக்கா வரி வசூலிப்பது கிடையாது.
இறக்குமதி தொடர்பான வரி விதிப்பில் இந்தியா தனது நடைமுறையை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்தியாவில் உற்பத்தியாகும் வாகனங்களுக்கு அமெரிக்காவில் வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாடு தயாரிப்புகளுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் இறக்குமதி வரி அமெரிக்க அதிபர் டிரம்பை மிகுந்த டென்ஷன் ஆக்கியுள்ளது. அதை தற்போது வெளிப்படுத்தியும் உள்ளார்.
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி நிலைப்பாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சுக்கு இந்தியாவின் எதிர்வினையை அறிய, டொனால்டு டிரம்போடு ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளது.
டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது ?
அமெரிக்க அதிபர் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் விமானங்களை ஏர்ஃபோர்ஸ் ஒன் என்ற சங்கேத வார்த்தையில் குறிப்பிடுகின்றனர். அந்த விமானங்கள் பல்வேறு விசேஷ வசதிகளை கொண்டவை. இந்த நிலையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்கள் பழமை அடைந்து விட்ட காரணத்தால், அதன் பராமரிப்புப் பணிகள் மிகுந்த செலவீனமும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி உள்ளன.
இதையடுத்து, இரண்டு புதிய விமானங்கள் வாங்குவதற்கு போயிங் நிறுவனத்திடம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் டொனால்டு டிரம்ப் இந்த புதிய விமானங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆர்டரை ரத்து செய்ய வேண்டும் என்று அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரும் பணக்காரரான டொனால்டு டிரம்ப் வசம் ஏற்கனவே சொந்த விமானம் இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட அவர் தனது சொந்த விமானத்தை பிரச்சார வாகனம் போன்று மாறுதல்களை செய்து பயன்படுத்தினார்.
இந்த நிலையில், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் இல்லாவிட்டால் கூட டொனால்டு டிரம்ப் தனது விமானத்தையே அதிகாரப்பூர்வ விமானமாக பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால்தான் புதிய விமானங்களுக்கான ஆர்டரை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆயினும், அவர் முடிவு சாத்தியப்படுமா என்பதை இந்த செய்தியை படித்து முடிக்கும்போது நீங்களே உணர்ந்துகொள்ள முடியும். ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருக்கும் சில விசேஷ பாதுகாப்பு வசதிகள் டொனால்டு டிரம்ப் விமானத்தில் இல்லை. இரு விமானங்களுக்கும் இடையிலான வித்தியாசங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டொனால்டு டிரம்ப் பயன்படுத்தி வரும் விமானம் போயிங் 757-200 என்ற ரகத்தை சேர்ந்தது. தற்போது உற்பத்தியில் இல்லை. கடந்த 1991ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானம் 25 ஆண்டுகள் பழமையானது. சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலை மதிப்புடையது.
மறுபுறத்தில் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் எவ்வாறெல்லாம் டொனால்டு டிரம்ப் விமானத்தை விஞ்சுகிறது என்பதை பார்க்கலாம். தற்போது இரண்டு போயிங் 747-200 பி மாடல் விமானங்கள்தான் அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ விமானங்களாக பயன்படுத்தப்படுகின்றன. ஒரு விமானம் 26 ஆண்டுகள் பழமையானது. மற்றொன்று 25 ஆண்டுகள் பழமையானது.
சாதாரண போயிங் 757 விமானத்தில் 200 பயணிகள் வரை செல்ல முடியும். ஆனால், டொனால்டு டிரம்பிற்கு சொந்தமான போயிங் 757 விமானம் பல்வேறு கஸ்டமைஸ் வசதிகளுடன் தனி நபர் பயன்பாட்டு விமானமாக மாற்றப்பட்டுள்ளது. 43 பேர் செல்வதற்கான வசதி கொண்டது. ஆனால், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் 70 பேர் வரை செல்ல முடியும்.
டொனால்டு டிரம்பின் போயிங் 757 விமானத்தை ஒரு மணி நேரம் இயக்குவதற்கு 8,000 டாலர்கள் செலவு பிடிக்கும். ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தை ஒரு மணிநேரம் இயக்குவதற்கு 1.79 லட்சம் டாலர்கள் செலவாகிறது.
டொனால்டு டிரம்ப் விமான்ததில் இரண்டு ரோல்ஸ்ராய்ஸ் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதிகபட்சமாக மணிக்கு 980 கிமீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 7,100 கிமீ தூரம் வரை பயணிக்கும்.
ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானங்களாக பயன்படுத்தப்படும் போயிங் 747-200 பி விமானத்தில் 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மணிக்கு 1,128 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. ஆனால், சராசரி வேகம் இதைவிட சற்றே குறைவாக இருக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 12,150 கிமீ தூரம் வரை பறக்கும்.
டொனால்டு டிரம்ப் விமானத்தில் படுக்கை வசதி, 53 இன்ச் திரை டிவி பொருத்தப்பட்ட பொழுதுபோக்கு அறை, சாப்பாட்டுக்கூடம், குளியல் அறை போன்ற வசதிகள் உள்ளன. வாஷ் பேஸின், திருகு பம்புகள் மற்றும் சீட்பெல்ட் பட்டைகள் தங்க நிற முலாம் பூசப்பட்டவை.
மறுபுறத்தில் அமெரிக்க அதிபர் பறக்கும் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் படுக்கை அறைகள், உடற்பயிற்சி கூடம், அலுவலக அறை, ஆலோசனைக் கூடம், சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், ரத்த வங்கி, சாப்பாட்டுக் கூடம் உள்ளிட்ட பல சிறப்பு வசதிகள் உள்ளன.
இந்த விமானத்தில் 80 தொலைதொடர்பு சாதனங்கள் உள்ளன. பெரும்பாலானவை எதிரிகள் அல்லது வெளியாட்கள் இடைமறித்து கேட்க முடியாத வசதி கொண்டது. அதாவது, பறக்கும்போதே ராணுவத்திற்கும், அரசு உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கும், கட்டளை பிறப்பிதற்கும் ஏதுவானதாக இருக்கும்.
ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானங்களில் ஏவுகணை எதிர்ப்பு வசதி, ரேடார் செயலிழப்பு கருவிகள், பறக்கும்போதே நாட்டு மக்களுக்கு அதிபர் உறை நிகழ்த்துவதற்கான ஸ்டூடியோ, அணுகுண்டு தாக்குதல்களின்போது பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விசேஷ கட்டமைப்பு என பாதுகாப்பு அம்சங்களின் பட்டியல் நீள்கிறது.ஆனால், டிரம்ப் விமானத்தில் இந்த பாதுகாப்பு வசதிகள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
அவசர சமயங்களில் தொடர்ந்து பறக்க நேர்ந்தாலும் எரிபொருள் பற்றிய பிரச்னை இல்லை. பறக்கும்போதே வேறு விமானத்திலிருந்து அமெரிக்க அதிபரின் விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப முடியும். ஆனால், இந்த வசதி டொனால்டு டிரம்ப் விமானத்தில் இல்லை.
டொனால்டு டிரம்பின் விமானம் 30 மில்லியன் டாலர்கள் விலை மதிப்பு கொண்டது. ஆனால், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானங்கள் ஒவ்வொன்றும் 325 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டது.
இந்த நிலையில், புதிதாக வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்ட இரண்டு விமானங்களும் 2024ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. இரண்டு விமானங்களும் 2.7 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எப்படி பார்த்தாலும், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு டொனால்டு டிரம்ப் தனது சொந்த விமானத்தை பயன்படுத்துவது ஆபத்து மிக்கதாகவே இருக்கும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆனால், டிரம்ப் என்ன செய்யப் போகிறார் என்பது அடுத்த மாதம் தெரிந்துவிடும்.
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!