Just In
- 27 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 33 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கொரோனா அச்சம்... ஃபோர்டு, டெஸ்லா, ஜிஎம் நிறுவனங்கள்மீது ட்ரம்ப் புகார்...
கொரோனா அச்சம் தீவிரமடைந்து வருகின்ற நேரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களான ஜிஎம், டெஸ்லா, ஃபோர்டு ஆகியவை மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
கொரோனா பீதியால் உலக நாடுகள் அனைத்தும் உரைந்து கிடப்பதை நம்மால் காண முடிகின்றது. இந்த பீதி நியாயமானதுதான். ஏனென்றால், உயிர் கொல்லி வைரஸான இந்த கொரோனா ஒருவரிடத்தில் மற்றொருவருக்கு மிக எளிதில் பரவும் தன்மையைக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, நோய் தொற்று உடையவரிடம் நெருங்கி பழகுவது மற்றும் அவர் இரும்பும்போது அல்லது தும்பும்போது அருகில் இருப்பதன் மூலமாகவே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுகின்றது.
கொரோனா தொற்றுடைய நபர்களை பல்வேறு பாதுகாப்பு கவசங்களுடன் கையாண்ட மருத்துவர்கள் பலர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே, கொரோனாவின் அதி தீவிரத்திற்கு சான்றாக இருக்கின்றது. ஆனால், இந்திய மக்கள் பலர் இந்த வைரஸின் அபாயத்தைப் பற்றி அறியாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, அவர்கள் கோடை விடுமுறையைக் கழிப்பதைப் போன்று ஜாலியாக சுற்றித் திரிந்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்த வைரஸ் தொற்று ஏற்படுமேயானால் மிக முக்கியமாக மனிதனுடைய சுவாச மண்டலத்தையே முதன்மை இலக்காக வைத்து தாக்கும். ஆகையால், அவர்கள் சுவாசிப்பதற்கு கடும் அவதிக்குள்ளாவார்கள். இதற்கு செயற்கை சுவாச கருவிகளான வென்டிலேட்டர்கள் மட்டுமே தீர்வாக உள்ளது. ஆனால், இந்த வென்டிலேட்டர் அம்சம் பல மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளிலேயே மிகக் குறைவாகதான் இருக்கின்றன.
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் இதே நிலைதான் தற்போது காணப்படுகின்றது. ஆகையால், அந்தந்த நாடுகளில் இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் வென்டிலேட்டர்களைத் தயாரிக்குமாறு அந்நாட்டு அரசுகள் உதவி கரம் நீட்டியிருக்கின்றன.
இதே நடவடிக்கையில்தான் அமெரிக்க அரசும் அண்மையில் களமிறங்கியது. இதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் உதவியை நாடினார்.
ஆனால், உத்தரவு வழங்கி சில காலங்களாகியும் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு ஆகிய நிறுவனங்கள் இன்னும் வென்டிலேட்டர்கள் தயாரிப்பதில் தாமதம் செய்து வருவதாக சமீபத்திய டுவிட்டர் பதிவின்மூலம் ட்ரம்ப் புகார் தெரிவித்துள்ளார். மேலும், உடனடியாக கைவிடப்பட்ட ஆலைகளை திறந்து பணியாற்றவும் அதில் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, "ஜெனரல் மோட்டார்ஸ் உடனடியாக ஓஹியோவில் கைவிடப்பட்ட லார்ட்ஸ்டவுன் ஆலையை திறந்து வென்டிலேட்டர்களை தயாரியுங்கள். ஃபோர்டு, வென்டிலேட்டர்களை வேகமாக தயாரியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து மற்றொரு பதிவில் விரைவில் பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து உங்களில் யார் நல்லவர் என்பதை நிரூபியுங்கள் என ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களுக்கு அவர் கூறியிருக்கின்றார்.
கொரோனா வைரஸ் அதிக நெருக்கடியை ஏற்படுத்த ஆரம்பித்தபோது வென்டிலேட்டர்களைத் தயாரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களுக்கு கடந்த 22ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இதற்கான அனைத்து உலோகப் பொருட்களையும் வழங்க மற்ற நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டது. இருப்பினும் தற்போது வரை கால தாமதம் ஏற்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆதங்கத்தின் வெளிப்பாடகவே அவர் டுவிட்டரில் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார். அதேசமயம், அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் டெஸ்லா நிறுவனம், வென்டிலேட்டர்களை தயாரிப்பதற்காக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ள நியூயார்க் ஆலையை திறப்பதற்கான முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.
முன்னதாக, அதன் பணியாளர்களுக்கு கொரோனா ஆய்வு செய்து, இதன் பின்னரே பணியைத் தொடங்க இருப்பதாக அது தெரிவித்தது.
தொடர்ந்து, பணியின்போது ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கிருமி நாசினிகளை வழங்கவும் அது திட்டமிட்டுள்ளது.
இதேமாதிரியான இக்கட்டான சூழ்நிலை இந்தியாவிலும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இம்மாதிரியான நிலையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன ஊழியர்கள் வெறும் 48 மணி நேரத்தில் மிகவும் மலிவு விலைக் கொண்ட புரோட்டோ டைப்பிலான வென்டிலேட்டர்களைத் தயார்செய்து அசத்தினர். இது விரைவில் தயாரிப்பிற்கு செல்லப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350