Just In
- 2 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 2 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 3 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 3 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டோல்கேட் கட்டணம் கட்டிய ஆத்திரத்தில் பேரிகாட்டை காரில் இடித்து கொண்ட சென்ற வாலிபர்
மஹாராஷ்டிரா மாநிலத்தில் டோல்கேட்டில் நடந்த மோதலால் ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் தன் கார் முன்னே பேரிகாட்டை இடித்து கொண்டு வேகமாக செல்லும் வீடியோ சமூக வலதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் டோல்கேட்டில் நடந்த மோதலால் ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் தன் கார் முன்னே பேரிகாட்டை இடித்து கொண்டு வேகமாக செல்லும் வீடியோ சமூக வலதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டில் கட்டணம் கட்டுவது குறித்து மோதல் ஆங்காங்கே நடந்து தான் வருகிறது.
ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வகையான மோதல்களில் ஈடுபடுகின்றனர். சிலர் வாக்குவாதத்திலும் சிலர் கைகளப்பிலும் கூட ஈடுபடுகின்றனர். ஆனால் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு வித்தியாசமான வகையில் இந்த மோதல் நடந்துள்ளது.
அதாவது மஹாராஷ்டிரா மாநிலம் வாஷி அருகே உள்ள நெடுஞ்சாலையில் டோல்கேட்டில் மாருதி டிசையர் காரில் வந்தவருக்கும் டோல் கேட்டில் கட்டணம் வசூலித்தவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அந்த ஆத்திரத்தில் அவர் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேரிகாட்டை தனது வாகனத்தின் முன்னால் ரோட்டில் வெகுதூரம் வேகமாக வந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
அந்த வீடியோவின் மூலம் அவர் டோல்கேட்டில் நடந்த தகராறு காரணமாகவே இவ்வாறு நடந்து கொண்டார் என்று உறுதியாகாவிட்டாலும். இந்த வீடியோ குறித்து இவ்வாறே மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.
இதே போன்று கடந்த 2018 புத்தாண்டு கொண்டாடத்தின் போதும் சென்னையில் உள்ள காமராஜர் சாலையிலும், கோட்டூர்புரம் பகுதியிலும் இவர் ரோட்டில் போலீஸ் வைத்திருந்த பேரிக்காட்டை பைக்கில் செல்லும் போது இழுத்து கொண்ட சென்றனர்.
இந்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ்அப் என வைரலாக பரவிய நிலையில் பைக்கில் பேரிகாட்டை இழுத்து சென்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அதில் ஒருவர் தான் செய்தது தவறு என்றும் இது போன்ற செயலில் இனி செய்ய மாட்டேன் என வீடியோ பதிவு செய்திருந்தார்.
முன்னதாக அவர் பேரிக்காட்டை இழத்து சென்றதை வீர தீர செயல் என்று பேசி செல்பி வீடியோ ஒன்றை பதிவிட்டுருந்தார். அதன் மூலமே போலீசார் அவரை எளிதாக கைது செய்தனர்.
இவ்விரு சம்பவங்களும் மிக ஆபத்தானவை மஹாராஷ்டிரா சம்பவத்தை பொருத்தவரை அவர் காரில்செல்லும் போது அந்த பேரிகாட் நேராக இருந்ததால் விபத்துக்கள நிகழவில்லை. ஆனால் அது சரிந்து கீழே விழுந்திருந்தால் கார் அதன் மீது ஏறி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.
அதேபோல சென்னை சம்பவத்திலும் அவர்கள் இழுத்து சென்ற பேரிகாட் ஏதாவது ஒரு பொருளில் மாட்டியிருந்தால் அது அவர்களை பைக்கில் இருந்து இழுத்து போட்டு பெரும் விபத்தை ஏற்படுத்தியிருந்திருக்கும்.
மக்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் இவ்வாறான சம்பவங்களை நிகழ்த்துபவர்களை போலீசார் கடுமையாக தண்டிக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியிலும் கோரிக்கைகள் எழுத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!