டோல்கேட் கட்டணம் கட்டிய ஆத்திரத்தில் பேரிகாட்டை காரில் இடித்து கொண்ட சென்ற வாலிபர்
மஹாராஷ்டிரா மாநிலத்தில் டோல்கேட்டில் நடந்த மோதலால் ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் தன் கார் முன்னே பேரிகாட்டை இடித்து கொண்டு வேகமாக செல்லும் வீடியோ சமூக வலதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் டோல்கேட்டில் நடந்த மோதலால் ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் தன் கார் முன்னே பேரிகாட்டை இடித்து கொண்டு வேகமாக செல்லும் வீடியோ சமூக வலதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டில் கட்டணம் கட்டுவது குறித்து மோதல் ஆங்காங்கே நடந்து தான் வருகிறது.

ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வகையான மோதல்களில் ஈடுபடுகின்றனர். சிலர் வாக்குவாதத்திலும் சிலர் கைகளப்பிலும் கூட ஈடுபடுகின்றனர். ஆனால் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு வித்தியாசமான வகையில் இந்த மோதல் நடந்துள்ளது.

அதாவது மஹாராஷ்டிரா மாநிலம் வாஷி அருகே உள்ள நெடுஞ்சாலையில் டோல்கேட்டில் மாருதி டிசையர் காரில் வந்தவருக்கும் டோல் கேட்டில் கட்டணம் வசூலித்தவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

அந்த ஆத்திரத்தில் அவர் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேரிகாட்டை தனது வாகனத்தின் முன்னால் ரோட்டில் வெகுதூரம் வேகமாக வந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
அந்த வீடியோவின் மூலம் அவர் டோல்கேட்டில் நடந்த தகராறு காரணமாகவே இவ்வாறு நடந்து கொண்டார் என்று உறுதியாகாவிட்டாலும். இந்த வீடியோ குறித்து இவ்வாறே மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

இதே போன்று கடந்த 2018 புத்தாண்டு கொண்டாடத்தின் போதும் சென்னையில் உள்ள காமராஜர் சாலையிலும், கோட்டூர்புரம் பகுதியிலும் இவர் ரோட்டில் போலீஸ் வைத்திருந்த பேரிக்காட்டை பைக்கில் செல்லும் போது இழுத்து கொண்ட சென்றனர்.

இந்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ்அப் என வைரலாக பரவிய நிலையில் பைக்கில் பேரிகாட்டை இழுத்து சென்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அதில் ஒருவர் தான் செய்தது தவறு என்றும் இது போன்ற செயலில் இனி செய்ய மாட்டேன் என வீடியோ பதிவு செய்திருந்தார்.

முன்னதாக அவர் பேரிக்காட்டை இழத்து சென்றதை வீர தீர செயல் என்று பேசி செல்பி வீடியோ ஒன்றை பதிவிட்டுருந்தார். அதன் மூலமே போலீசார் அவரை எளிதாக கைது செய்தனர்.

இவ்விரு சம்பவங்களும் மிக ஆபத்தானவை மஹாராஷ்டிரா சம்பவத்தை பொருத்தவரை அவர் காரில்செல்லும் போது அந்த பேரிகாட் நேராக இருந்ததால் விபத்துக்கள நிகழவில்லை. ஆனால் அது சரிந்து கீழே விழுந்திருந்தால் கார் அதன் மீது ஏறி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.

அதேபோல சென்னை சம்பவத்திலும் அவர்கள் இழுத்து சென்ற பேரிகாட் ஏதாவது ஒரு பொருளில் மாட்டியிருந்தால் அது அவர்களை பைக்கில் இருந்து இழுத்து போட்டு பெரும் விபத்தை ஏற்படுத்தியிருந்திருக்கும்.

மக்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் இவ்வாறான சம்பவங்களை நிகழ்த்துபவர்களை போலீசார் கடுமையாக தண்டிக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியிலும் கோரிக்கைகள் எழுத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications