Just In
- 57 min ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 1 hr ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 2 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 9 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எரிபொருள் நிலையத்தில் ஓட்டுனர் செய்த நகைச்சுவை... காணொளியை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்
எரிபொருள் நிலையத்தில் ஓட்டுனர் செய்த நகைச்சுவையின் காணொளி சமூக வலை தளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது மின்சார கார்கள் மக்கள் மத்தியில் வெகு வேகமாக பிரபலமாகி வருகின்றன. பெட்ரோல், டீசல் கார்களை இயக்குவதற்கு ஆகும் செலவை விட மின்சார கார்களை இயக்குவதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. அத்துடன் மின்சார கார்களால், சுற்றுச்சூழலுக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது.
இதனால்தான் மின்சார கார்களை பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தியாவில் இன்னும் மின்சார கார்கள் அவ்வளவாக பிரபலமடையவில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில், அதிக அளவிலான மின்சார கார்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. அதற்காக அங்கு வசித்து கொண்டுள்ள அனைவருக்கும் மின்சார கார்கள் பற்றிய விழிப்புணர்வு வந்து விட்டது என சொல்ல முடியாது.
அமெரிக்காவில் அனைத்து மக்களுக்கும் இன்னும் மின்சார கார்கள் நன்கு பழக்கப்படவில்லை என்பதை நிரூபிக்கும் வகையிலான ஒரு சம்பவம் லாஸ் வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்துள்ளது. லாஸ் வேகாஸில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்திற்கு, கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர், டெஸ்லா மாடல் 3 (Tesla Model 3) காரில், இளைஞர் ஒருவர் வந்தார்.
அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிக பிரபலமான மின்சார கார்களில் ஒன்றுதான் மாடல் 3. உலகின் பல்வேறு நாடுகளிலும் டெஸ்லா மாடல் 3 மின்சார கார் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்தியாவில் கூட டெஸ்லா மாடல் 3 மின்சார காரை பற்றி பலரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
ஆனால் லாஸ் வேகாஸ் நகரை சேர்ந்த அந்த இளைஞரோ, அது மின்சார கார் என்பதை அறியாமல், அதற்கு பெட்ரோல் நிரப்ப முயன்றார். அமெரிக்காவின் எரிபொருள் நிலையங்களில், பணத்தை செலுத்தி விட்டு, நாமே எரிபொருள் நிரப்பி கொள்ளும் வசதி உள்ளது. ஊழியர்கள் இருக்க மாட்டார்கள். இதன்படி அந்த இளைஞர் பணத்தை செலுத்தி விட்டு, பெட்ரோல் நிரப்புவதற்கான குழாயை கையில் எடுத்தார்.
ஆனால் காரில் பெட்ரோல் நிரப்புவதற்கான வசதி எதுவும் இல்லை. இதனால் தடுமாறிய அந்த இளைஞர் கார் முழுவதையும் சுற்றி சுற்றி பார்த்தார். பின்னர் கைப்பேசியை எடுத்து கூகுள் உதவியுடன் இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டறிய முயன்றார். அப்போதுதான் இது மின்சார கார் என்பதும், இந்த காரை இயக்குவதற்கு பெட்ரோல் நிரப்ப தேவையில்லை என்பதும் அவருக்கு தெரியவந்தது.
இதன்பின் தனது தவறை உணர்ந்து கொண்டு அவர் அங்கிருந்து கிளம்பி விட்டார். அவருக்கு பின்னால் இருந்த சிலர் இந்த சம்பவங்களை எல்லாம் காணொளியாக பதிவு செய்தனர். தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் அந்த காணொளியை நீங்கள் கீழே காணலாம். இந்த காணொளியை பார்க்கும் பலரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.
ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம், பெண் ஒருவர் தனது டெஸ்லா மாடல் எஸ் (Tesla Model S) மின்சார காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்றார். அந்த காணொளியும் சமூக வலை தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2 நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள், காரின் உரிமையாளர்களா? என்பது தெரியவில்லை. அவர்கள் காரின் உரிமையாளர்களாக இருக்கலாம் என சமூக வலை தளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூட அவர்கள் காரை வாங்கி வந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அப்படி இருக்கும் பட்சத்தில், மின்சார கார் என்பது தெரியாமல் அவர்கள் இப்படி நடந்து கொண்டிருக்கலாம். எது எப்படியோ, காணொளி பலருடைய கவனத்தையும் ஈர்த்ததால், மின்சார காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற அந்த இளைஞர், தற்போது சமூக வலை தளங்களில் நன்கு பிரபலமாகி விட்டார்.
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...