டிரைவரே இல்லாமல் ஓடும் குட்டி "சிட்டி" வண்டி! ரிமோர்ட் கண்ட்ரோல் எல்லாம் கிடையாதுங்க!

நன்கு அறியப்பட்ட தொழிலதிபரும் RPG குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் கோயங்கா, சமூக ஊடகங்களில் அடிக்கடி சுவாரஸ்யமான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், மும்பையில் உள்ள CEAT தொழிற்சாலையில் டிரைவர் இல்லாத வாகனத்தை காண்பிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டார். இந்த சிறிய எலெக்ட்ரிக் வாகனம், டயர்களால் நிரம்பிய பெரிய டிராலியை இழுத்துச் செல்லும் காட்சி அதன் அற்புதமான திறனை வெளிப்படுத்துகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்

49 விநாடிகள் நீளமுள்ள இந்த வீடியோ, டிரைவர் இல்லாத டோ டிராக்டர் தொழிற்சாலையில் டயர்களை எடுத்துச் செல்வதைக் காட்டுகிறது. இது இழுக்கும் டிராலியில் சுமார் 16 டயர்கள் இருப்பதைக் காணமுடிகிறது இவை பேருந்துகள் அல்லது லாரிகள் போன்ற பெரிய வணிக வாகனங்களுக்கானவையாக இருக்கலாம். கோயங்கா இந்த காட்சியை இன்ஸ்டாகிராமில் "ஓட்டுநர் இல்லாத வாகனம் எங்கள் CEAT தொழிற்சாலையில்..." என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார்.

CEAT இன் ஸ்மார்ட் தொழிற்சாலை செயற்கை நுண்ணறிவு (AI), மிஷின் லர்னிங் மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் ஆகியவற்றைப் போன்ற முன்னணி தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இந்த புதுமைகள் பணியாளர்களின் சம்பந்தம் தேவைப்பட்ட பணிகளை ஆட்டோமெட் செய்தன் மூலம் திறனை மேம்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்துகின்றன. வீடியோவில் உள்ள டிரைவர் இல்லாத வாகனம் இந்த முன்னேற்றங்களை உதாரணமாகக் காட்டுகிறது.

இந்த வாகனம் முழுவதுமாக டிரைவர் இல்லாமல் இயங்கினாலும், இது ரிமோட் கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது தொழிற்சாலையில் முன்பே அமைக்கப்பட்ட பாதையைப் பின்பற்றுகிறதா என்பது தெளிவாக இல்லை. இரண்டு முறைகளும் நவீன உற்பத்தி ஆலையில் செயல்பாடுகளை விரைவுபடுத்துதற்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.

ஏப்ரல் 18 அன்று வெளியிடப்பட்டதிலிருந்து இந்த வீடியோ கணிசமான கவனத்தைப் பெற்றுள்ளது. இதற்கு 132,000 வியூகள் கிடைத்துள்ளன மற்றும் 2,700 லைக்குகள் கிடைத்துள்ளன. கூடுதலாக, இது 217 பயனர்களால் ரிட்வீட் செய்யப்பட்டு 291 கருத்துகளைப் பெற்றுள்ளது. AI தொழில்நுட்பத்திற்கான பாராட்டுகள் முதல் ஆட்டோமேட் காரணமாக வேலை இழப்பு பற்றிய கவலைகள் வரை எதிர்வினைகள் வேறுபடுகின்றன.

சிலர் இந்த வீடியோவில் காட்டப்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களை பாராட்டினர், மற்றவர்கள் மனித தொழிலாளர்களை மிஷின்களை கொண்டு மாற்றுவது பற்றி கவலை தெரிவித்தனர். AI இன் வேலைவாய்ப்பு மீதான தாக்கம் பற்றிய பரந்த சமூக கவலைகளை இந்த விவாதம் பிரதிபலிக்கிறது. இது தற்போது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது

CEAT இல் ஓட்டுநர் இல்லாத தொழில்நுட்பத்தின் இந்த செயல்பாடு அதன் சாத்தியமான நன்மைகளையும் சவால்களையும் எடுத்துக்காட்டுகிறது. ஆட்டோமெட் வாகனங்கள் தொடர்ந்து வளர்ந்து வருவதால், தொழில்கள் திறன் மேம்பாடுகளை பணியாளர்களின் தாக்கத்துடன் சமநிலைப்படுத்த வேண்டும். இது இந்தியாவில் சமீப நாட்களாக மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆட்டோமெட்டிக் வாகனங்களின் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. சியட் போன்ற நிறுவனங்களில் இது போன்ற வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது நிச்சயம் வரவேற்க்கதக்கது தான். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இப்படியான ஆட்டோமெட்டிக் வாகனங்களை இந்தியாவில் பொது சாலைக்கு கொண்டு வர தீவிரமாக முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, April 21, 2025, 13:05 [IST]
English summary
Harsh Goenka recently shared a video of a driverless vehicle operating at CEAT's Mumbai factory, showcasing advancements in AI and automation technology. The public's mixed reactions highlight concerns about job displacement versus the benefits of increased efficiency.
மேலும்... #india #technology
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X