Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 4 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Movies அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஓட்டுநர் உரிமத்திற்கான டெஸ்ட் தற்காலிகமாக ரத்து... குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பிய ஆர்டிஓ!
புதிதாக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் டெஸ்ட் டிரைவ் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
கொரோனா வைரஸ் ஒமிக்ரான் எனும் அவதாரத்தில் மீண்டும் இந்த உலகை அச்சுறுத்த தொடங்கி இருக்கின்றது. இந்தியாவில் மிக குறைவாக தென்பட்டு வந்த வைரஸ் தொற்று விகிதம் தற்போது பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் மக்கள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
இதன் விளைவாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு மற்றும் பள்ளி, கல்லூரி விடுமுறை என பல விதமான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த நிலையிலேயே ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பத்திருப்பவர்களுக்கு ஆப்பு வைக்கக் கூடிய ஓர் தகவல் வெளி வர தொடங்கியிருக்கின்றது.
ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் டெஸ்ட் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசே வெளியிட்டிருக்கின்றது. தற்போது தலைநகர் டெல்லியில் 10,665 புதிய வைரஸ் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாநிலத்தில் தற்போது 23,307 பேர் வைரஸ் பாதிப்புடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆகையால், இந்தியாவில் வேகமாக கொரோனா வைரஸ் மூன்றாம் அலைக்கு பாதிக்கப்பட்டு வரும் இந்திய நகரங்களில் ஒன்றாக டெல்லி மாறியிருக்கின்றது.
இந்த நிலையைக் கருத்தில் கொண்டே வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக டெல்லி ஆர்டிஓ அலுவலகங்களில் தற்காலிக ஓட்டுநர் உரிமத்திற்கான டெஸ்ட்டுகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த தகவல் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்து காத்திருந்தோர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கின்றது.
வைரஸ் பரவல் அதி-விரைவில் பரவிக் கொண்டிருக்கின்ற வேலையில் இந்த நடவடிக்கையை டெல்லி அரசு துரிதமாக எடுத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற தொடங்கியிருக்கின்றது. அதேவேலையில், சிலரை இந்த தகவல் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. இன்று ஓட்டுநர் உரிமத்திற்கான டெஸ்டிற்கு தயாராக இருந்தவர்களையே இத்தகவல் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆம், டெஸ்ட் ரத்து அறிவிப்பான இன்று (ஜனவரி 06) முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. இதுகுறித்த அறிவிப்பை மாநிலத்தின் இணை ஆணையர் நவ்கேந்த்ரா குமார் சிங் வெளியிட்டார். இதுகுறித்த அறிவிப்பு விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.
தலைநகர் டெல்லியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த அதிரடி நடவடிக்கை நாட்டின் பிற மாநிலங்களில் மேற்கொள்ளப்படலாம் என அஞ்சப்படுகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அடுத்து வரும் காலங்களில் இந்த கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்