ஹோலி பண்டிகை: வாகன ஓட்டிகளிடம் போலீஸ் தீவிர சோதனை
வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை நேற்று கோலாகலமாகவும், வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகையின்போது மது அருந்திவிட்டு வரும் வாகன ஓட்டிகளை பிடிப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பிலும், சோதனைகளையும் நடத்தினர்.
மும்பையிலும் வாகன ஓட்டிகளிடம் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டது. ஹோலி வண்ணப் பூச்சுக்களுடன் வந்த இளைஞர் ஒருவரை மடக்கிய போலீஸ் அதிகாரி வாயை ஊதச் சொல்லி சோதனை நடத்தும் காட்சி. பாவம், ப்ரீத் அனலைசர் கருவி இல்லை போலும். இது சட்டப்படி சரியா?

சீருடையுடன் பணியில் இருக்கும் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனையிட அனுமதி உண்டு. ஆனால், ஒருவரை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது கருதினால் அதற்குரிய கருவிகள் இருந்தால் மட்டுமே சோதனையிட வேண்டும். அப்படியில்லையெனில், அருகிலுள்ள போலீஸ் நிலையங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றே சோதனை நடத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








