Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உயிர்களை குடிக்கும் ஓவர்ஸ்பீடு: நரகமான நகர சாலைகள்!
சென்னையில் சொகுசு கார்கள் மற்றும் சூப்பர் கார்களால் ஏற்பட்டு வரும் தொடர் விபத்துக்களால் இரவு நேரங்களில் சாலையில் செல்வோரின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. ஆடி கார் ஐஸ்வர்யா, நடிகர் அருண் விஜய் போன்றவர்கள் குடிபோதையில் ஏற்படுத்திய விபத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதைத்தொடர்ந்து, வழக்கம்போல் குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கின. அதிசக்திவாய்ந்த கார்களை வாங்குவோர்க்கு, பாதுகாப்பாக காரை இயக்குவதற்கான பயிற்சிகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் அதிகாலை சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில், தாறுமாறாக வந்த போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோரிக்ஷாக்கள் மீது மோதியதில், ஒருவர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். மேலும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 12 ஆட்டோரிக்ஷாக்களும் கடுமையாக சேதமடைந்தன.
இந்த கோர சம்பவம் தொடர்பாக காரை ஓட்டி வந்த விகாஸ் ஆனந்த் மற்றும் அவருடன் காரில் வந்த அவரது நண்பர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காரை ஓட்டி வந்த விகாஷ் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், போர்ஷே காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய விகாஸ் ஆனந்த் [22] பிரபல கார் பந்தய வீரர். ஆம், கடந்த மாதம் நிறைவுற்ற MRF Formula 1600 கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர்.
இந்த வெற்றியின் மூலமாக உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்காவின் இன்டிகார் கார் பந்தயத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பையும் இவர் பெற்றிருக்கிறார். எதிர்காலத்தில் சிறந்த கார் பந்தய வீரராக விகாஸ் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சொகுசு கார்களை ஓட்டுவோருக்கு தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், அதிசக்திவாய்ந்த கார்களை ஓட்டுவதில் வல்லவரான விகாஸ் ஆனந்தே இவ்வாறு ஒரு கோர விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். காரில் இருந்த ஏர்பேக்குகள் சரியான நேரத்தில் விரிந்ததால் இருவரும் உயிர் தப்பிவிட்டனர்.
டிராக்கில் ஓட்டுவது போன்றே, தனது ஓட்டும் திறனை சாதாரண சாலையில் காட்ட முயன்றதும், குடிபோதையும் அவரது கண்ணை மறைத்துவிட்டது. இதற்கு ஒருவரின் உயிர் பலிவாங்கப்பட்டு விட்டது. அத்துடன், பலர் காயத்துடனும், தங்களது தினசரி வாழ்வாதாரமாக இருந்த ஆட்டோரிக்ஷாக்களையும் பறிகொடுத்து நிற்கின்றனர்.
குடிபோதையில் காரை ஓட்டி இரண்டு உயிர்களை பறித்ததோடு, தனது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி நிற்கிறார் விகாஸ். குடிபோதையும், சமூக பொறுப்பின்மையும் தற்போது சாலையில் செல்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லி, மும்பை, சென்னை என அனைத்து மெட்ரோ நகரங்களின் கலாச்சார மாற்றத்தால், இரவு மது விருந்துகளின் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. இவ்வாறான இரவு மது விருந்துகளே இதுபோன்ற சூப்பர் கார் விபத்துக்களுக்கு வழிகோலுகின்றன. இதில், பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான்.
இதுபோன்ற மது விருந்துகளில் குடிப்பவர்களை கார் ஓட்ட அனுமதிக்காமல் இருப்பதற்கான கட்டுப்பாடுகளையும், மாற்று ஏற்பாடுகளையும் செய்ய மது விடுதிகளுக்கு அறிவுறுத்துவதம் அவசியம்.
இதுபோன்ற வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டால் மட்டுமே, சாலையில் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வழிபிறக்கும். அத்துடன் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல இளைஞர்கள் சமூக பொறுப்பை உணர்ந்து சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்படுவதும் அவசியம்.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!