Just In
- 19 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பொது இடத்தில் புகைப்பிடித்ததை தட்டிக்கேட்ட வாலிபரை காரை ஏற்றி கொன்ற குடிகார வக்கீல்!
பொது இடத்தில் புகைப்பிடித்தவரை தட்டிக் கேட்ட வாலிபர் காரை ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில், மருத்துவமனை வளாகம் அருகே புகைப்பிடித்தவரை தட்டிக் கேட்ட வாலிபர் காரை ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் குர்ப்ரீத் சிங்[21]. இவர் புகைப்பட கலை துறை படிப்பை பயின்று வருகிறார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியூரிலிருந்து வரும் நோயாளிகள் மருத்துவமனை வரும்போது படும் அவஸ்தைகள் மற்றும் அங்கு இருக்கும்போது அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து ஒரு ஆவணப் படம் எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்து வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதன் பிறகு தனது நண்பர் மணீந்தர் சிங்குடன் அங்குள்ள ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு நின்றிருந்த ஒருவர் சிகரெட் பிடித்தபடி நின்றிருக்கிறார். அவர் விட்ட சிகரெட் புகை இவர்களது முகத்தில் தொடர்ந்து பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அவரிடம் பொது இடத்தில் புகைப்பிடிக்க வேண்டாம் என்று குர்ப்ரீத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அவர் குடிபோதையில் இருந்ததால், குர்ப்ரீத் சொன்னதை கேட்டாமல் தொடர்ந்து புகை விட்டபடி இருந்துள்ளார்.
இதனால், அவரிடம் சற்று கடுமையாக புகை பிடிப்பதை நிறுத்துமாறு குர்ப்ரீத் சிங் கூறியதாக தெரிகிறது. புகைப்பிடித்தவர் குடிபோதையில் இருந்ததாலும், கடுமையாக பேசியதாலும், அந்த இடத்தை விட்டு குர்ப்ரீத் சிங்கும், அவரது நண்பர் மணீந்தர் சிங்கும் நகர்ந்துள்ளனர்.
மேலும், தங்களது மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது, புகைப்பிடித்தவர் தனது ஃபோர்டு காரில் அவர்களை தொடர்ந்து விரட்டி வந்ததுள்ளார். மேலும், அதிவேகத்தில் வந்து இருவர் சென்ற மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளார்.
இதில், மோட்டார்சைக்கிளில் பயணித்த குர்ப்ரீத் சிங்கும், மணீந்தரும் படுகாயமடைந்தனர். மேலும், அப்போது அவ்வழியாக சென்ற ஓலா வாடகை கார் மற்றும் வாகனங்கள் மீது அந்த ஃபோர்டு ஃபிகோ கார் மோதி இருக்கிறது.
இந்த பயங்கர சம்பவத்தில் படுகாயமடைந்த குர்ப்ரீத் சிங் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் அமர்ந்திருந்த மணீந்தர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஓலா கார் ஓட்டுனர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய காரையும், அதன் உரிமையாளரையும் கைது செய்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் ரோஹித் கிருஷ்ணா மஹந்தா என்று தெரிய வந்தது. அவர் குடிபோதையில் இருந்ததும் உறுதியானது.
இவர் அஸ்ஸாம் அரசு துறை ஒன்றில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவர் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இந்த நிலையில், கோமா நிலையில் இருந்த குர்ப்ரீத் சிங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் மஹந்தா மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை மீண்டும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source: Hindustan Times
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?