போலீஸ் பைக்கை திருடி வேடிக்கை செய்த போதை ஆசாமி; படாதபாடுப்பட்ட பைக்கை தொலைத்த காவலர்..!!
போலீஸ் பைக்கை திருடி வேடிக்கை செய்த போதை ஆசாமி; படாதபாடு பட்ட பைக் தொலைத்த காவலர்..!!
கர்நாடகாவில் போக்குவரத்து காவலர் ஒருவர் முன்னிலையில் போதையால் தள்ளாடிய இளைஞர் ஒருவர் செய்த செயல் இன்று இந்தியளவில் சிரிக்கும் சென்சேஷன் ஆகியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் சிக்மங்களூர் அருகில் உள்ள பகுதி தான் ஹாசன். இங்கு போக்குவரத்து காவலரை அலைக்கழித்த போதை ஆசாமி ஒருவர் இந்தியளவில் வைரலாகி உள்ளார்.

சமூக வலைதளங்களில் பரபரப்பான செய்தியாக மாறியுள்ள இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அதை பார்க்கும் நமக்கு குபீர் என்று சிரிப்பு வருவதை அடக்க முடியவில்லை. அந்த வீடியோவின் மூலம் கிடைத்த செய்தியை தொடர்ந்து படியுங்கள்

ஹாசன் பகுதியில் போக்குவரத்தை கட்டுபடுத்திக்கொண்டு இருந்த காவலரின் பைக்கை, அந்த வழியாக சென்ற போதை ஆசாமி திருடிக்கொண்டு தள்ளாடியவாறே ஓட்டி செல்கிறார்.

இதை சம்பவத்தை பார்த்த இரு இளைஞர்கள் அந்த போதை ஆசாமியின் நடவடிக்கைகளை பின்பக்கமாக இருந்து தங்களது செல்ஃபோனில் படம் பிடித்துக்கொண்டே பைக்கில் பின் தொடங்கின்றனர்.

அந்த இளைஞர்கள், போதை ஆசாமியிடம் பைக் யாருடையது என்றும், எதற்காக திருடினீர்கள் என்றும் கேட்கிறார்கள்.
அதற்கு அவர், அது காவலரின் பைக் என்றும், அதை அவருக்கு தெரியாமல் திருடி வந்தாக போதை ஆசாமி சிரிப்புடன் சொல்கிறார்.
இதை படம்பிடித்த இரு இளைஞர்களும் சிரிக்க, அந்தபோதை ஆசாமி பைக்கை முன்னே ஓட்டி செல்கிறார்.

உடனே பின்னே பைக்கை பறிக்கொடுத்த போக்குவரத்து காவலர், போதை ஆசாமியை கத்தியவாறே மற்றொருவருடன் பைக்கில் பின் தொடர்கிறார்.

இதை பார்க்கும் இரு இளைஞர்களும் செல்ஃபோனில் இந்த காட்சிகளை படம் பிடிக்க தொடங்குகிறார்கள். மேலும் அந்த போதை ஆசாமி காவலரின் தொப்பியையும் தலையில் அணிந்துக்கொண்டு சாலையில் கத்திக்கொண்டே செல்கிறார்.

ஒரு சிக்னல் நிறுத்தம் வர, போதை ஆசாமி பைக்கை மெதுவாக ஓட்டுகிறார், அதை பயன்படுத்திக்கொண்டு பின்னே வரும் காவலர், தனது பைக்கையும், போதை ஆசாமியையும் கையும் களவுமாக பிடித்து விடுகிறார்.

திருடிய குற்றத்திற்காக போலீசாரிடம் மாட்டிவிட்டோமே என்றுக்கூட உணர முடியாத நிலையில் உள்ள அந்த போதை ஆசாமி, காவலரின் கையில் பிடிப்பட்டவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த என்று கத்துகிறார்.

பரபரப்பான சாலையில் இந்த சம்பவத்தை பார்க்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் ரஜினிகாந்த பெயரை சொன்னவுடன் குபீர் என்று சிரித்து விடுகின்றனர்.

பிறகு பைக்கை கைப்பற்றிய காவலர், போதை ஆசாமியை பிடித்து இழுத்து நிறுத்துகிறார். அவருக்கு உதவியாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்களும் பிடித்துக்கொள்கின்றனர்.

இத்துடன் அந்த வீடியோ நிறைவு பெறுகிறது. பார்க்க பார்க்க சிரிப்பை ஏற்படுத்தும் இந்த வீடியோ இந்தியளவில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் செய்தியாகி வைரலாகி வருகிறது.
இத்துடன் அந்த வீடியோ நிறைவு பெறுகிறது. பார்க்க பார்க்க சிரிப்பை ஏற்படுத்தும் இந்த வீடியோ இந்தியளவில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

ஆனால் அதற்கு பிறகு அந்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டாரா. காவலர் என்ன செய்தார் என்பதெல்லாம் தெரியவில்லை. இந்த வீடியோவை பார்க்கும் போது ஒரே ஒரு செய்தி மட்டும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது.

மது உடல் நலத்திற்கு தீங்கு, கேடானது. அதை அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டிசெல்வது மேலும் ஆபத்தானது. போக்குவரத்து சட்டத்திற்கு எதிரானது.


Click it and Unblock the Notifications








