குடிப்போதையில் இராணுவத்திடமே சண்டையிட்ட இளம் ‘குடி’மகள்!! மொத்த சாலையும் அலங்கோலமாகியது - வீடியோ!
கடந்த செப்.8 ஆம் தேதி, மத்திய பிரதேச மாநிலத்தில் குடிப்போதை பெண் ஒருவரால் இராணுவத்தின் மாருதி ஜிப்ஸி நிறுத்தப்பட்டு, தகராறுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் கடந்த புதன்கிழமை மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிப்போதையில் சாலையில் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோவினை தான் கீழே காண்கிறீர்கள்.
இந்த வீடியோ அந்த இராணுவத்தின் மாருதி ஜிப்ஸி வாகனத்தை நிறுத்துவதில் இருந்து தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால் இந்த பெண் எவ்வாறு சாலையில் நடந்து கொண்டு இருந்தார் என்பது தெரியவில்லை. இந்திய இராணுவத்தின் வாகனத்தை மடக்கியவர், அதனை சேதமும் படுத்தியுள்ளார்.

போலீஸார் வந்து கைது செய்யும் வரையில் அந்த பெண் தொடர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக தான் இருந்துள்ளார். அந்த பெண் முழுக்க குடிப்போதையில் இருந்ததாக சம்பந்தப்பட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர். குவாலியரில் பண்டவ் காவல் நிலையத்திற்கு முன்பாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

போலீஸார் விசாரித்ததில் அந்த பெண்ணின் பெயர் கோஹிமா மெஹ்ரா. இந்த இராணுவ ஜிப்ஸி வாகனம் மட்டுமின்றி அந்த சாலை வழியாக சென்ற அத்தனை வாகன ஓட்டிகளுக்கும் எந்தவொரு காரணமும் இல்லாமல், குடிப்போதையில் இடையூறாக நடந்து கொண்டுள்ளார்.

ஜிப்ஸியின் முன்பக்க ஹெட்லைட்டை அந்த பெண் சேதப்படுத்தியதால் உள்ளே இருந்த ஓட்டுனர் வெளியே வந்து அவரை சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் அதன்பின்பு தான் இன்னும் அந்த பெண் ஆக்ரோஷத்துடன் நடந்துக்கொண்டார். இந்த சம்பவம் அங்கு காவல் நிலையத்திற்கு முன்பாகவே பெரிய கூட்டத்தை கூட்டிவிட்டது.

வாகன ஓட்டிகளுடன் நின்று வேடிக்கை பார்த்தவாறும், செல்போனில் வீடியோ பிடித்தவாறும் இருந்தவர்களையும் அவர் தரக்குறைவாக பேச ஆரம்பித்தார். அதன்பின்பே அருகில் இருந்த காவல் நிலையத்தில் இருந்து பெண் காவலர் ஒருவர் வந்து அந்த பெண்ணை அழைத்து சென்றார்.

ஆரம்பத்தில் போலீஸார் என்று தெரிந்த பின்பும் கூட அந்த பெண் தனது சேட்டைகளை நிறுத்தியப்பாடில்லை. இருப்பினும் அந்த பெண் காவலர் வலுக்கட்டாயமாக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு சென்று பரிசோதித்து பார்த்ததில் அவர் மிகவும் அதிகமாக மது குடித்திருப்பது தெரியவந்தது.

பொது இடத்தில் சட்ட ஒழுங்கை சீர்க்குலைத்ததற்காக அப்காரி சட்டம் 34-இன் கீழ் கோஹிமா மெஹ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மெஹ்ராவின் இரு நண்பர்கள் வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்திற்கு வந்து அவரை அழைத்து சென்றதாக செய்திகள் கூறுகின்றன.

இவர்கள் மூலமாக இந்த பெண் டெல்லியை சேர்ந்தவர் என்பதும், அருகில் உள்ள ஓட்டலில் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகளவில் மது அருந்தியவர் பின்பு சட்ட ஒழுங்கிற்கு இடையூறாக நடு ரோட்டில் இறங்கியுள்ளார் என்பதும் தெரியவந்தது. ஆரம்பத்தில் தான் டெல்லியை சேர்ந்தவள் என போலீஸாரிடம் கூறிய கோஹிமா மெஹ்ரா, அதன்பின் இல்லை... இல்லை தான் ஹரியானாவை சேர்ந்தவள் என்றுள்ளார்.

ஆனால் போலீஸார் வழங்கிய செல்லானில் இவரது முகவரி ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பது போல் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிப்போதையில் வாகனம் ஓட்டுவதும், அல்லது பொது இடத்தில் மற்றவர்களுக்கு இடையூறாக நடந்துக்கொள்வதும் குடித்திருப்பவருக்கு மட்டுமின்றி, சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் & பாதசாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

இதற்கு மத்திய பிரதேசம், குவாலியரில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்வே சான்று. ஒருவேளை இந்த பெண் அளவாக குடித்திருந்தால் அத்தனை ஆண்களுக்கு முன் தன்னை அசிங்கப்படுத்தி கொள்ளாமல் இருந்திருப்பார். இதனால் போலீஸ் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது.

மது அருந்தும் அனைவரும் இவ்வாறான சம்பவங்களில் ஈடுப்படுவதில்லை. சிலருக்கு சூழ்நிலை அவ்வாறு அமைந்துவிடுகிறது. கோஹிமா மெஹ்ராவும் இவ்வாறு குடிப்போதையில் நடந்து கொண்டதற்கும் காரணங்கள் இருக்கலாம். இந்த சம்பவத்தில் இராணுவ ஜிப்ஸி வாகனத்தின் முகப்பு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதே தவிர்த்து, இந்த சம்பவத்தினால் இந்த பெண்ணிற்கு ஏதாவது காயம் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








