மாருதி ஸ்விஃப்ட் காரை அப்பளமாக்கிய மெர்சிடிஸ் பென்ஸ்... மதுபோதை இளைஞரின் வெறிச்செயல்..!!

மாருதி ஸ்விஃப்ட் காரை அப்பளமாக்கிய மெர்சிடிஸ் பென்ஸ்... மதுபோதை இளைஞரின் வெறிச்செயல்..!!

By Azhagar

டெல்லியின் பிரதான சாலை ஒன்றில் மதுபோதையில் மெர்சிடிஸ் பென்ஸ் காரை ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் எதிரே வந்த மாருதி ஸ்விஃப்ட் கார் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தினார்.

இரவு நேரம் அதிகரிக்கும் சாலை விபத்துகளால் கலக்கத்தில் டெல்லி..!!

டெல்லியில் கனாக்ட் பகுதியில் உள்ள மது விடுதியில் இருந்து இரவு 11 மணிக்கு மேல் 19 வயதான துருவ் பாக்லா என்ற இளைஞர் தனது மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் மாடல் காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

இரவு நேரம் அதிகரிக்கும் சாலை விபத்துகளால் கலக்கத்தில் டெல்லி..!!

இளைஞர் துருவுடன் கரன் ஜெயின் என்கிற அவரது நண்பரும் அதே காரில் உடனிருந்தார். கரணை உட்கார வைத்து வீடு திரும்ப காரை ஓட்டி சென்றார் துரூவ் பாக்லா.

இரவு நேரம் அதிகரிக்கும் சாலை விபத்துகளால் கலக்கத்தில் டெல்லி..!!

இருவரும் சாலையில் சென்றுகொண்டு இருந்த போது, ஒரு பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருப்பதை பார்த்தனர்.

Recommended Video

2017 Mercedes-Benz GLC AMG 43 Coupe Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
இரவு நேரம் அதிகரிக்கும் சாலை விபத்துகளால் கலக்கத்தில் டெல்லி..!!

மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் கார் வருவதை பார்த்த காவலர்கள், காரை நிறுத்தும்படி சமிஞ்கை காட்டினர்.

முதலில் காரை நிறுத்திய துரூவ், மது அருந்தி இருந்ததன் காரணமாக காரை வேகமாக இயக்க முயன்றார்.

இரவு நேரம் அதிகரிக்கும் சாலை விபத்துகளால் கலக்கத்தில் டெல்லி..!!

சோதனை சாவடியை அடைய 100 மீட்டர்கள் முன்பே துரூவ் காரை திருப்ப முயல, அதே பகுதியில் வந்துகொண்டு இருந்த மாருதி ஸ்விஃப்ட் மீது பென்ஸ் சி-கிளாஸ் கார் பெருத்த சத்தத்துடன் மோதி, சாலையில் அப்புறத்தில் ஏறிச்சென்று நின்றது.

இரவு நேரம் அதிகரிக்கும் சாலை விபத்துகளால் கலக்கத்தில் டெல்லி..!!

இதை சற்றும் எதிர்பாராத சி-கிளாஸ் காரில் இருந்த துரூவ் மற்றும் கரன், நிலைகுலைந்து போயினர். விபத்தை பார்த்த காவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இரவு நேரம் அதிகரிக்கும் சாலை விபத்துகளால் கலக்கத்தில் டெல்லி..!!

மெர்சிடிஸ் மோதிய ஸ்விஃப்ட் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமாகி இருந்தது. பெரும் விபத்தாக தோன்றியது. ஸ்விஃப்ட் காரில் வந்தவர்கள் நிலை என்ன என்று பார்த்தனர் போலீசார்.

இரவு நேரம் அதிகரிக்கும் சாலை விபத்துகளால் கலக்கத்தில் டெல்லி..!!

ஸ்விஃப்ட் காரில் இருந்த ஏர்பேகுகள் துரிதமாக வேலை செய்திருந்ததால், உயிர்பலியாவது தடுக்கப்பட்டது. அதை ஓட்டி வந்தவர் திஹார் சிறைசாலையின் முன்னாள் பொது இயக்குநர் என்பது தெரியவந்தது.

இரவு நேரம் அதிகரிக்கும் சாலை விபத்துகளால் கலக்கத்தில் டெல்லி..!!

படுகாயங்களுடன் மீடக்கப்பட்ட அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இரவு நேரம் அதிகரிக்கும் சாலை விபத்துகளால் கலக்கத்தில் டெல்லி..!!

பெரும் விபத்து நடக்க இருந்தது தடுக்கப்பட்டு இருந்தாலும், மெர்சிடிஸ் சி-கிளாஸ் காரை ஓட்டு வந்த துரூவ் பாக்லாவை போலீசார் கைது செய்தனர்.

இரவு நேரம் அதிகரிக்கும் சாலை விபத்துகளால் கலக்கத்தில் டெல்லி..!!

மேலும் துரூவ் மற்றும் கரன் ஆகியோரிடம் நடத்திய மருத்துவ சோதனையில் அவர்கள் இருவரும் மது அருந்திவிட்டு காரை ஓட்டியது உறுதியானது.

இரவு நேரம் அதிகரிக்கும் சாலை விபத்துகளால் கலக்கத்தில் டெல்லி..!!

டெல்லியின் காவல் பொது ஆய்வாளர் இந்த விபத்து குறித்த வழக்கை துரூவ் பாக்லாவிற்கு எதிராக பதிவு செய்தார்.

இருப்பினும் தற்போது துரூவ் மற்றும் கரன் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரம் அதிகரிக்கும் சாலை விபத்துகளால் கலக்கத்தில் டெல்லி..!!

டெல்லியில் அதிகரித்து வரும் இதுபோன்ற விபத்துகளை தடுக்க, அரசும், காவல்துறையும் இன்னும் கடுமையான போக்குரத்து விதிமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும் என அந்நகர மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Drunken Youth Rams Mercedes Benz C Class into Maruthi Swift while avoiding Traffic Police. Clickk for the Details...
Story first published: Thursday, August 17, 2017, 17:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X