Just In
- 24 min ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 2 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 3 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 4 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
Don't Miss!
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Movies அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்.. செம ட்விஸ்ட்!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டிரைவரில்லாமல் பறக்கும் கால் டாக்ஸி சேவை: துபாயில் முதல் முயற்சி
தானாக இயங்கும் பறக்கும் கால் டாக்ஸி சேவையை வரும் ஜூலை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்த துபாய் அரசு முயன்று வருகிறது.
தரையில் போய்க்கொண்டுயிருக்கும் வாகனங்கள் பல மேல பறந்துவிடும் என்பது 21ம் நூற்றாண்டின் ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சியாக பார்க்கப்பட்டது. இப்படி ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கக்கூடிய நாடாக அமெரிக்க, சீனா அல்லது ஜப்பான் போன்ற நாடுகளில் ஏதேனும் ஒன்றாகத்தான் இருக்கும் என்பது ஆட்டோமொபைல்இ உலகின் கணிப்பாக இருந்தது.
ஆனால் சமீபத்தில் இதுதொடர்பாக் வெளியான அறிவிப்பு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளாக இல்லாமல், ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் பறக்கும் கால் டாக்ஸிகளை விரைவில் துபாய் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வரும் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த பறக்கும் கால் டாக்ஸிக்காக பல டெலிஃபோர்ட் வசதியையும் கட்டமைத்து வருகிறது துபாய் அரசு. எண்ணை வளம் கொண்ட அரபு நாடுகள் பல பொருளாதார அளவில் மட்டுமில்லாமல், நாட்டிற்கு ஏற்றவாறான தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் முன்னிலை வகிக்கின்றன.
இந்த பட்டியலில் பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் முன்னிலை வகித்து வரும் துபாய், செயற்கையான நகரங்கள், உலகின் உயர கட்டிடம் மற்றும் அல்ட்ரா மார்டனான நகரங்கள் போன்றவற்றை கட்டுமானித்து அவ்வப்போது உலகை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.
நீர், நிலத்தில் அசாத்திய வளர்ச்சியை ஏற்படுத்து விட்ட துபாய் அடுத்ததாக வான்வெளியை குறிவைத்துள்ளது. இதன்படி, விரைவில் துபாயில் பறக்கும் கால்டாக்ஸி சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அனைத்து பறக்கும் கார் டாக்ஸிகளும், ஓட்டுநரின்றி தானாக இயங்கும் தொழில்நுட்பத்தின் வகையில் உருவாக்கப்படவுள்ளது.
சமீபத்தில் இதற்கான சோதனை ஓட்டத்தையும் துபாய் அரசு வெற்றிக்கரமாக செய்துபார்த்துள்ளது. சீனாவின் ட்ரான் உற்பத்தியாளர் ஈ-ஹாங் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பறக்கு கார் தொழில்நுட்பம் உயர்கம்பி வாகனமாக தயாராகியுள்ளது.
மேலும் உற்பத்தியாளர் ஈ-ஹாங் பெயருடன் 184 என்ற எண்ணை சேர்த்து ‘ஈ-ஹாங் 184' என துபாய் அரசு பறக்கும் காருக்கு பெயர் வைத்துள்ளது. பறக்கும் கார்களில் 8 பிரோப்பலர்கள் இடம்பெற்றிருக்கும், உடமைகள் ஆகியவற்றுடன் ஒரு பயணியை மட்டும் ஏந்த செல்ல வல்லமை கொண்ட வகையில் இந்த பறக்கும் கார்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
பயணிகள் எளிதாக பயன்படுத்தும் விதத்தில் இதற்கான ஸ்மார்ட் ஃபோன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பயணி தான் இறங்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டால், பறக்கும் கார் உடமைகளுடன் பயணியை ஏந்தி சென்று சேரவேண்டிய இடத்தில் இறக்கி விடும். ஒவ்வொரு பறக்கும் கார்களின் செயல்பாடுகள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்தில் பின்தொடரப்படும்.
முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் திறன் கொண்ட இந்த ஈ-ஹாங் 184 பறக்கும் கார்களை கடந்த 2013ம் ஆண்டிலிருந்து துபாய் அரசு உருவாக்கி வந்தது. 1.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த பறக்கும் கார்களை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால், அரைமணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
200 கிலோ எடை கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பறக்கும் கார்கள் ஒரு மணி நேரத்தில் 100 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய வேகம் கொண்டது.
துபாயின் இந்த பறக்கும் கால் டாக்ஸி சேவையை குறித்து ஃபோர்ப்ஸ் நிறுவனமும் பல செய்திகளை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவில் உள்கட்டமைப்புகளாக பயன்படுத்தும் தானியங்கி கால் டாக்ஸி போல் இல்லாமல், ஆபத்தை அறிந்து செயல்படும் விதத்தில் துபாய் பறக்கும் கார் திட்டத்தை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது.
இதன்மூலம் வானில் பறந்துகொண்டுயிருக்கும் போது ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், உடனே, சூழ்நிலையை உணர்த்து தரையிறங்கும் வகையில் இதனுடைய செயல்திறன் இருக்கும் என வடிவமைப்பாளர் ஈ-ஹாங் ஃபோர்ப்ஸ் நாளிதழுக்கு தெரிவித்துள்ளார். அதேபோல எஞ்சின் கோளாறு ஏற்பட்டாலும் உடனே இந்த பறக்கும் கார் திறனுடன் செயல்படும்.
பறக்கும் காரின் ஒவ்வொரு நகர்வும் அதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்தால் தொடர்ந்து கவனிக்கப்படும். இந்த மையத்தால், வானில் போக்குவரத்து தொடர்பான நகர்வுகளை அறிந்து காரை மாற்றி வழியில் இயக்கவும் முடியும். மேலும் விமானத்தின் சிக்னல்களை அறிந்து பறக்கும் கார்களின் செயல்பாடுகள் அதற்கான சோதனை மையத்தால் கண்கானிக்கப்படும்.
எதிர்கால போக்குவரத்தை கட்டமைப்பதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடக்கம் தான் இது. தொடர்ந்து போக்குவரத்து தொடர்பான வசதிகளை மேம்படுத்துவதில் பல்வேறு திட்டங்களை அந்நாடு உருவாக்கி வருகிறது.
இதில் முக்கியமாக 2030ம் ஆண்டிற்குள் துபாயில் 30 சதவீத வாகனங்கள் ஓட்டுநரின்றி தானாக இயங்கும் செயல்திறன் கொண்டவையாக இருக்கும் போன்றவை அந்நாட்டின் திட்டங்களில் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும் 200 ஆட்டோமேட்டிக் டாக்ஸிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தையும் துபாய் அரசு மேற்கொண்டுள்ளது. இவற்றுடன் துபாய் மற்றும் அபுதாபிக்கு இடையில் அதிவேக ஹைப்ப்ர்லூப் போக்குவரத்தை அந்நாட்டு அரசு தீவிரமாக கட்டமைத்தும் வருகிறது.
துபாய் அரசின் தற்போது கனவு திட்டமாக உள்ள பறக்கும் கார் டாக்ஸி சேவை வரும் ஜூலை மாதத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு நேரடியாக கொண்டு வர அந்நாட்டு அரசு துடிப்புடன் இயங்கு வருகிறது.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!