Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பெட்ரோல், டீசலை விட மின்சார ஆற்றல் தான் இந்தியாவிற்கு ஆபத்து... மெர்சிடிஸ் சொல்லும் உஷார்..!!
பெட்ரோல், டீசலை விட மின்சார ஆற்றல் தான் இந்தியாவிற்கு ஆபத்து... மெர்சிடிஸ் சொல்லும் உஷார்..!!
சுற்றுச்சூழலை காக்கவும், காற்று மாசுப்படுதலை குறைக்கவும் எதிர்கால வாகன துறையை மின்சார ஆற்றலுக்கு மாற்ற பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
வாகன புகை அதிகரிப்பை தடுக்க மின்சார ஆற்றலுக்கு மாறுவது தான் நிரந்தர தீர்வா..? என்ற விமர்சனம் எழுந்து வரும் சூழலில், அதற்கு எண்ணை ஊற்றுவது போல ரோலான்ட் ஃபால்ஜர் என்பவர் பேசியுள்ளார்.
Recommended Video
அதாவது இந்திய வாகன துறை மின்சார ஆற்றலுக்கு மாறினால் பெட்ரோல், டீசல் எரிவாயுக்களை விட அதிக காற்று மாசுவை அதிகரிக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார் இவர்.
இன்றைய ஆட்டோ துறையை பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கும் இந்தரோலான்ட் ஃபால்ஜர், யார் இவர் என்பது பலரது கேள்வியாக இருக்கும். இவர் தான் இந்தியாவில் இயங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கான தலைமை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி.
இந்தியாவில் 50% மின்சாரம் என்பது நிலக்கரியில் இருந்தே பெறப்படுகிறது. நிலக்கரி பெறுவதும் பெரிய காற்று மாசுவை உருவாக்கூடிய பணி தான். ஒரு காற்று மாசு குறைப்பாட்டில் இருந்து தான் மின்சார கிடைக்கிறது.
வாகன துறையை மின்சார ஆற்றலுக்கு மாற்றிவிட்டால், தேவையை மீறி, ஆட்டோ துறைக்கான மின்சாரத்தை அரசு கூடுதலாக உருவாக்க நேரிடும்.
அதற்காக நிலக்கரியின் தேவை பன்மடங்கு அதிகரிக்கும். அதன்காரணமாக காற்று மாசு கூடுமே தவிர குறையாது என்கிறார் ரோலான்ட் ஃபால்ஜர்.
மின்சார ஆற்றல் என்பது சுற்றுச்சூழலை பாதிக்காத முறையில் உருவாக்கப்பட்டால், மின்சார வாகன பயன்பாடு இந்தியாவில் வெற்றிக்கரமாக அமையும் என்பது இவரது கருத்து.
இந்தியாவில் 2030ம் ஆண்டிற்குள் வாகன துறை 100% மின்சார ஆற்றலுக்கு மாற்ற இந்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
எதன் அடிப்படையில் இந்த திட்டம் இந்தியாவில் சாத்தியப்படுத்தப்பட உள்ளது என்று கேள்வி எழுப்புகிறார் ஃபால்ஜர்.
குறிப்பாக மின்சார ஆற்றலுக்கு வாகன துறையை மாற்ற சரியான தொழில்நுட்பம் எது என இந்திய அரசு கண்டறிந்துள்ளதா..??
மணிக்கு 100 கி.மீ வேகம் தரக்கூடிய காரை உருவாக்க பல்வேறு நிலக்கரி அமைப்புகளை பெற்ற நிலங்கள் முற்றிலும் மாசாகக்கூடும்.
2030ம் ஆண்டிற்கு வாகன துறை அனைத்து மின்சார மயம் என்ற கொள்ளைக்கு ஏற்ப இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை தொடங்கியுள்ளது.
குறிப்பாக, நாசிக்கில் மின்சார வாடகை கார்கள் மற்றும் பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. பேட்டரி சார்ஜிங் நிலையங்களும் அங்கு அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் வாகன துறையில் ஜாம்பவான்களாக உள்ள நிறுவனங்கள், மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்களை தயாரிக்க களமிறங்கிவிட்டனர்.
இதில் குறிப்பாக டாடா, மஹிந்திரா மற்றும் மாருதி போன்ற நிறுவனங்கள் 2020ம் ஆண்டிற்குள் தங்களது மின்சார கார்களை வெளிக்கொண்டு வரும் முடிவில் உள்ளன.
இந்தியாவில் காற்று மாசு குறைபாடு டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரே தீர்வாக மின்சார வாகன பயன்பாடு மட்டுமே உள்ளது.
மின்சார வாகன கட்டமைப்பு காற்று மாசு குறைப்பாட்டிற்கு ஒரு தீர்வாக அமையும் என்பது அரசு உட்பட பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் தலைமை இயக்குநர் ரோலான்ட் ஃபால்ஜர் இந்திய அரசின் மின்சார வாகன கட்டமைப்பு மீது எழுப்பியுள்ள இந்த கேள்விகள், ஆட்டோ துறையில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!