மோடி அரசுக்குக் குவியும் பாராட்டு... எலெக்ட்ரிக் வாகன தர கட்டுப்பாடு விஷயத்தில் மத்திய அரசு நல்ல முடிவு...
அக்1ம் தேதி முதல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தரக்கட்டுப்பாடுகள் நடை முறைக்கு வருகிறது தொடர்ந்து நடந்த எலெக்ட்ரிக் வாகன தீ விபத்து சம்பவத்தால் இது நிகழ்ந்துள்ளது. இது குறித்த முழுமையான தகவல்களைக் கீழே காணுங்கள்.

சமீப காலமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்களுக்கு மோகம் அதிகமாகி வருகிறது. அதுவும் முக்கியமாக ஸ்கூட்டர் செக்மெண்டில் பல தொழிற்நுட்ப வசதிகளுடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்கெட்டில் அறிமுகமாகியுள்ள நிலையில் மக்கள் பலர் இந்த வாகனங்களை அதிகம் விரும்பி வாங்கி வருகின்றனர். இன்றை நிலையில் இந்த செக்மெண்டில் இந்தியாவில் ஹீரோ எலெக்ட்ரிக், ஓலா, ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் இருக்கிறது. இது போக ஏத்தர், ஓகினவா, டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களும் நல்ல வளர்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் இந்தாண்டு மார்ச் மாதம் துவங்கி மே மாதம் வரை இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஓலா எலெக்ட்ரிக், ஓகினாவா, ப்யூர் இவி ஆகிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடித்து எரித்த சம்பவம் பல நடந்தது. இந்த சம்பவத்தால் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் தயக்கம் ஏற்பட்டது. பலர் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கும் முடிவுகளைத் தள்ளி வைத்தனர்.

இதற்கிடையில் இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு கமிட்டி ஒன்றை நியமித்தது. அந்த கமிட்டி எலெக்ட்ரிக் வாகனங்கள் ஏன் தீ பிடித்து எரிந்தது? இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன? தவறு எந்த இடத்தில் நடந்துள்ளது? இதை எப்படிச் சரி செய்வது? உள்ளிட்ட பல விசாரணைகள் மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இந்த ஆய்வில் பேட்டரி செல், சார்ஜர், பேட்டரிபேக்கின் டிசைன், இன்டர்னல் சார்ட் சர்க்யூட்டால் நடந்த தெர்மல் புரேபகேஷன் ஆகியன இந்த தீ விபத்திற்கு முக்கியமான காரணம் என முடிவுகள் வந்தது. இதன்பின் மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தரக்கட்டுப்பாடுகளைக் கொண்டு வர முடிவு செய்தது. அதன்படி AIS 156 என்ற தரக்கட்டுபாட்டை L கேட்டகிரி வாகனங்களுக்கும், AIS 038 Rev. என்ற தரக்கட்டுப்பாடு M மற்றும் N கேட்டகிரி வாகனங்கள் பயணிகள் மற்றும் சரக்குகளுக்கான 4 சக்கர வாகனங்களுக்காகக் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி கொண்டு வரப்பட்டது.

இந்த தரக்கட்டுப்பாடுகள் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட அந்த நாளுக்குப் பின்பு இந்தியாவில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்கள் கட்டாயம் கொடுக்கப்பட்ட தரக்கட்டுப்பாடுகளை மீட் செய்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த தரக்கட்டுப்பாடு பாதுகாப்பு சார்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. இதின் வடிவமைப்பு மற்றும் கான்செப்ட். இந்திய கண்டிஷன்களுக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஓஇஎம் மற்றும் பேட்டரி தயாரிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் போது இந்தியாவில் இனி விற்பனைக்கு வரும் ஒவ்வொரு வாகனமும் பாதுகாப்பான வாகனமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இனி இந்த தரக்கட்டுப்பாடுகளுடன் விற்பனைக்கு வரும் எலெக்ட்ரிக் வாகனங்களில் இனி பேட்டரி செல், சார்ஜர், பேட்டரி பேக் டிசைன், ஹீட்டிங் பிரச்சனை ஆகியவற்றால் தீப்பிடிப்பு சம்பவங்கள் நடக்காது என எதிர்பார்க்கலாம். மக்களின் பாதுகாப்பை மனதில் வைத்தே இந்த கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு மீண்டும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு மக்கள் வாகனங்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

இதனால் நீங்கள் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் எண்ணத்திலிருந்தால் வரும் அக்டோபர் 1ம் தேதிக்குப் பிறகு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கினால் உங்களுக்குப் பாதுகாப்பான எலெக்ட்ரிக் வாகனம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படிச் சொல்வதால் தற்போது உள்ள எலெக்ட்ரிக் வாகனம் எல்லாம் பாதுகாப்பு இல்லாததா? என நீங்கள் நினைக்க வேண்டாம்.

தற்போது உள்ள எலெக்ட்ரிக் வாகனங்கள் பல தற்போது கொடுக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடுகளுக்கு ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது. சில வாகனங்கள் தற்போது மாற்றும் பணியில் இருக்கிறது. இதற்கான தான் அக்டோபர் 1 தேதியாகக் குறிப்பிட்டுள்ளோம். எலெக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல் டீசலை விட உண்மையிலேயே மிகவும் சிறப்பான வாகனமாகவே செயல்படும் என்பதில் உங்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம்.

இது குறித்து லாக் 9 மெட்டியரியல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அக்ஷய் சிங்லால் கூறும் போது : "அரசு கொண்டுவரவுள்ள இந்த புதிய பாதுகாப்பு அம்சங்களை வரவேற்கிறோம். இதனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன துறை பாதுகாப்பாக இயங்கும். எதிர்காலத்தில் மக்கள் பயம் இல்லாமல் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவார்கள் என கூறினார். "

இது குறித்து எட்ரியோ ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக மேலாள் கல்யாண் கோரி மேர்லா கூறும் போது : "மத்திய போக்குவரத்து துறை கொண்டு வந்துள்ளன. இந்த தரக்கட்டுப்பாடு ஓஇஎம் தயாரிப்பாளர்களை ஓழுங்குபடுத்தும் இதனால் மார்கெட்டில் இந்திய கண்டிஷன்களுக்கான வாகனங்கள் தயாராகும். பேட்டரி செல், பேட்டரிபேக், பிஎம்எஸ் போன்ற விஷயங்களில் இனி சிக்கல் வராது இந்த தரப்பாடு உயிர் சேதம், பொருள் தேசம் உள்ளிட்ட பலவற்றை தடுக்கும்"


Click it and Unblock the Notifications








