Just In
- 19 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 58 min ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
“எலக்ட்ரிக் & பெட்ரோல் வாகனங்கள் இன்னும் 2 வருடங்களில் ஒரே விலையில் விற்பனையாகும்”- அமைச்சர் நிதின் கட்கரி!!
எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகப்படுத்த இந்திய அரசாங்கம் கடந்த சில வருடங்களாக கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசாங்கத்திற்கு துணையாக மாநில அரசாங்கங்களும் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனத்திற்கு மானியங்களை அறிவித்து வருகின்றன.
இந்த முயற்சிகளுக்கு உடனடியாக பெரும் பலன் கிடைக்காவிட்டாலும், மெல்ல மெல்ல எலக்ட்ரிக் வாகனங்களை புதியதாக வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இருப்பினும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை, அதே தோற்றத்தில், ஏறக்குறைய அதே அளவிலான இயக்க ஆற்றலை பெறும் எரிபொருள் என்ஜின் கார்களை காட்டிலும் சற்று அதிகமாக தற்சமயம் உள்ளது. இதன் காரணமாகவே எலக்ட்ரிக் வாகனங்களுக்கும், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் மானியங்களை அரசுகள் அறிவித்து வருகின்றன.
இதன் வெளிப்பாடாக, இன்னும் இரண்டு வருடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகள், எரிபொருள் என்ஜின் வாகனங்களுக்கு இணையாக வந்துவிடும் என ஒன்றிய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளில் இந்திய அரசாங்கம் ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது.
அதிநவீன தொழிற்நுட்பங்களின் வளர்ச்சி, இவி தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே உள்ள நட்புறவான போட்டி மற்றும் அவற்றின் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவற்றின் காரணமாக எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் தற்போதைய வாகனங்களுக்கு இணையாக வந்துவிடும் என்று ஒன்றிய அரசாங்கம் நம்புவது இதுகுறித்து டைம்ஸ்நௌ செய்திதளத்திற்கு அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பேட்டியின் மூலம் அறிய முடிகிறது.
அதேநேரம் எத்தனால் மற்றும் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருள் பயன்பாட்டையும் வலியுறுத்துவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், இந்தியாவிற்கான புதை வடிவ எரிபொருளில் கிட்டத்தட்ட 80% வெளிநாடுகளில் இருந்து பெறப்படுகிறது. இதனால் அரசுக்கு சுமார் 8 லட்ச கோடி ரூபாய் செலவாகிறது.
புதைப்படிவ எரிபொருட்களை சார்ந்திருக்கும் நிலை இன்று இவ்வாறு இருக்க, இதே நிலை மேலும் தொடர்ந்தால் ரூ.25 லட்ச கோடியாக அதிகரிக்கலாம். இது இறுதியில் நாட்டு மக்களுக்கு வாங்குவதற்கு அதிக விலை கொடுக்க செய்யும். ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இயங்கும் செலவு இதனை காட்டிலும் 6 மடங்கு குறைவாக உள்ளது.
ஒரு மாதத்தில் பெட்ரோலுக்கு ரூ.12,000-இல் இருந்து ரூ.15,000 வரையில் கார் உரிமையாளர் செலவு செய்கிறார் என்றால், அதுவே அது எலக்ட்ரிக் காராக இருப்பின் வெறும் ரூ.2,000 மட்டுமே செலவாகும் என்றார். இந்திய அரசாங்கம் ஹைப்ரீட் & எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வேகமாக மாறுவதையும், தயாரிப்பதையும் ஊக்கப்படுத்தும் திட்டத்தை (FAME) 2015இல் அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ் மானியங்களையும், வரி குறைப்பையும் எல்க்ட்ரிக் வாகனங்களுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் பெற முடியும். இன்று குறிப்பாக எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பில் புதியது புதியதாக அறிமுகமாகும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் அதிகரிப்பதற்கு FAME திட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது.
இருப்பினும் இன்னமும் எலக்ட்ரிக் வாகனங்கள் சற்று விலைமிக்கதாகவே பார்க்கப்படுகின்றன. பேட்டரி தொழிற்நுட்பங்களை கண்டறிவதில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை அடைந்துள்ளோம் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை விரும்புவோரும் அதிகரிக்க துவங்கியுள்ளனர் என்றாலும், பெட்ரோல் & டீசல் வாகனங்களுக்கு இணையாக எலக்ட்ரிக் வாகனங்களின் விலை வருவதற்கு அமைச்சர் கூறும் 2 வருடங்களுக்கு மேல் கூட ஆகலாம்.
இதற்கிடையில் சமீபத்தில் நெகிழ்வு எரிபொருள்களை இன்னும் சில நாட்களில் கட்டாயமாக்க உள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேட்டியில் பெட்ரோல் & எத்தனால் விலைகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை குறைக்கும் ரஷ்யன் தொழிற்நுட்பம் ஒன்றின் பெயரையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். சில வெளிநாட்டு சந்தைகளில் பெட்ரோலின் விலை எத்தனாலை காட்டிலும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் இந்த மாற்றம் அதிகப்படியான பெட்ரோல் இறக்குமதியை குறைக்கும்.