Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
15 நாட்கள் மட்டுமே அவகாசம்... ஸ்டிக்கர் இல்லனா கட்டாயம் இரு மடங்கு அதிக வரி.. மத்திய அரசு கெடுபிடி..
மத்திய அரசின் புதிய கெடுபிடியில் இருந்து சற்று கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை செலுத்துவதை எளிமையாக்குவதற்காக கொண்டுவரப்பட்ட புதிய திட்டம்தான் ஃபாஸ்ட்டாக். இதனை அனைத்து வாகனங்களும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.
ஆகையால் ஃபாஸ்ட்டாக் இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கிடம் இருந்து இரு மடங்கு அதிக கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். அதிலும், இத்திட்டம் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி முதலிலிருந்தே நடைமுறைக்குக் கொண்டுவர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாகன ஓட்டிகளை சற்று நிம்மதி பெரு மூச்சு விடும் வகையில் கட்டாய ஃபாஸ்ட்டாக் திட்டத்திற்கு சற்று கால கெடு அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதுவரை ஃபாஸ்ட்டாக்கினை பெறாத வாகனங்களுக்கு வருகின்ற டிசம்பர் 15ம் தேதி வரை காலக் கெடு அளிக்கப்பட்டுள்ளது.
ஃபாஸ்ட் டேக் என்பது, ரோடியோ அதிர்வெண்ணை அடிப்படையில் கொண்டு இயங்கும் தொழில்நுட்பமாகும். இது, டோல்கேட்டைக் கடக்கும்போது, வாகனத்தை நிறுத்தாமலேயே, டோலுக்கான கட்டணத்தை ஸ்கேனிங் வசதி மூலம் செலுத்த உதவும். இதற்கான, தொழில்நுட்பம் அடங்கிய ஸ்டிக்கர் வடிவிலான க்யூ ஆர் கோட் (QR code) பிரத்யேக வடிவமைப்பில், வாகனத்தின் விண்ட்ஷீல்ட் பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும். இதுவே, தானாக பிரீபெய்டு கணக்கில் இருந்து கட்டணத்தைச் செலுத்த உதவுகின்றது.
இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) வெளியிட்ட அறிக்கையில், "ஃபாஸ்ட்டாக் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைக்குக் கொண்டுவராத வாகனங்களிடம் இருந்து இரட்டை பயனர் கட்டணம் விரைவில் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இத்திட்டம் டிசம்பர் 1ம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 15 முதல் தொடங்கப்பட உள்ளது" என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபாஸ்ட்டாக் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின்னர் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாஸ்ட் டேக்குகள் கடந்த புதன்கிழமை வரை வழங்கப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக கடந்த கடந்த 26ம் தேதி மட்டும் அதிகபட்சமாக 1,35,583 ஃபாஸ்ட்டேக்குகள் வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய நாட்களில் 1.03 லட்சம் டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால், தினந்தோறும் ஃபாஸ்டாக்டேக்குகள் சராசரியாக 330 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. அதிலும், நவம்பர் 21ம் தேதி முதல் ஃபாஸ்ட் டேக் விலையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட பின்னர், அதன் வளர்ச்சி உச்சபட்சமாக உயர்ந்துள்ளது.
டிஜிட்டல் பரிவார்த்தனை ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம், வெளிப்படைத் தன்மைக் கொண்ட மற்றும் ஊழல்களை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, இதற்காக ஒவ்வொரு பாதையிலும் ஒரு 'ஹைப்ரிட் லேன்' நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழியாக செல்லும் பாஸ்ட்டேக் பொருத்தப்பட்ட வாகனம், தானாக கட்டணத்தைச் செலுத்துவதுடன், வரிசையில் நீண்ட நிற்பதையும் தவிர்க்கின்றது.
அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் கடந்த காலங்களில் ஈட்டபட்டு வந்த ரூ. 8.8 லட்சம் என்ற சுங்க வரி, நடப்பாண்டு ஜூலை மாதத்தில் இருந்து ரூ. 11.2 லட்சமாக மாறியுள்ளது. இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மற்றும் யூபிஐ உள்ளிட்ட அனைத்து ரீசார்ஜ்கள் மூலமும் ஃபாஸ்டாக் கணக்கில் பணத்தை ஏற்ற முறையும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஃபாஸ்ட்டேக் குறித்து எந்தவொரு உதவிக்கும் '1033' என்ற வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைக்கலாம். மேலும், தற்போது ஃபாஸ்ட்டேக்குகள் குறிப்பிட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கிடைக்கின்றது.
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!