என்னது மறுபடியும் பெட்ரோல் டீசல் விலை உயரப்போகுதா? மத்திய அரசுக்குக் கடிதம் போட்ட விற்பனையாளர்கள்...
கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் பெட்ரோல் டீசல் விற்பனையில் நஷ்டம் ஏற்படுவதாக விற்பனையாளர்கள் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் என்பது ஒவ்வொரு தனி மனிதனிற்கும் அத்தியாவசிய தேவை என்றாகிவிட்டது. பெரும்பாலான மனிதர்கள் வாகனங்கள் வைத்திருக்கிறார்கள் இதனால் அவர்களே நேரடியாக பெட்ரோல் டீசலை பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் பெட்ரோல் டீசலை பயன்படுத்தாவிட்டாலும் பொது போக்குவரத்து போன்ற விஷயங்கள் மூலம் மறைமுகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

இதனால் பெட்ரோல் டீசலின் விலை நேரடியாக ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கிறது. அவனது மாதாந்திர பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை பெட்ரோல்/டீசலுக்காக செலவிட வேண்டியது. உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ100-ஐ தாண்டியும் டீசல் விலை ரூ90-ஐதாண்டியும் விற்பனையாகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் வரிகளுக்கு ஏற்ப இந்த விலையில் மாறுபாடு ஏற்படும்.

பெட்ரோல்/ டீசல் விலை என்பது சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையை மையமாகக் கொண்டு இயங்கும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யை வாங்கி அதிலிருந்து தான் பெட்ரோல், டீசல், எனப் பல பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்த கச்சா எண்ணெய் விலை அதை இந்தியாவில் பிரித்தெடுக்கும் செலவு, அதன் பின்னர் போக்குவரத்து அதற்கு மேல் மத்திய மாநில அரசுகளின் வரி இவை எல்லாம் சேர்த்துத் தான் ஒரு லிட்டர் பெட்ரோல்/டீசலுக்கான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த 2020 ஆண்டு கொரோனா முதல் அலை தாக்கத்தில் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்த போதும். இந்தியாவில் அந்த விலை வீழ்ச்சியைச் சமாளிக்க வரி விதிக்கப்பட்டிருந்து. சமீபத்தில் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ110-ஐ தாண்டிய போது இந்த விரிகள் எல்லாம் மீண்டும் குறைக்கப்பட்டதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 என்ற விலையில் விற்பனையாகிறது.

தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 10 ஆண்டுகள் இல்லாத உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலையில் முறைக்கு 80 பைசா விதம் 14 முறையில் பெட்ரோல் மற்றும் டீசலில் லிட்டருக்கு ரூ10 வரை விலை உயர்த்தப்பட்டது. கடந்த ஏப் 6ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை கடந்த மே மாதம் வரியில் மட்டுமே குறைப்பு செய்யப்பட்டது. விலையில் மாற்றமில்லை.

இந்நிலையில் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் பெட்ரோலியம் இன்டஸ்ட்ரி என்ற அமைப்பு சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் ஒன்று எழுப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் அரசு நடத்தி வரும் இந்தியன் ஆயின், பாரத்பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களான நயரா எனர்ஜி, ஜியோ பிபி, ஷெல் ஆகிய நிறுவனங்களும் இருக்கின்றன.

அந்த கடிதத்தில் அந்நிறுவனத்தின் இயக்குநர் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும் பெட்ரோலுக்கான விலை அதிகரிக்காமல் இருப்பதால் பெட்ரோல் உற்பத்தியாளர்களுக்கு பெட்ரோலில் லிட்டருக்கு ரூ14-18 வரையிலும், டீசலுக்கு ரூ20-25 வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பெட்ரோலிய துணையில் மேலும் முதலீடுகள் இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

பல தனியார் நிறுவனங்கள் இதனால் ஏற்படுத்தும் நஷ்டத்தைச் சமாளிக்க விற்பனையைக் குறைத்துள்ளனர். இதனால் பல இடங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு விலையை உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் குறைந்து விடுவார்கள். என்பதால் நஷ்டத்தைச் சமாளிக்க விற்பனையைக் குறைத்துள்ளனர். இதனால் இதற்கு விரைந்து தீர்வு காணும்படி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக தற்போது பெட்ரோல் /டீசல் விலை உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரியாக இல்லாமல் அடிப்படை விலையில் மாற்றம் இருக்கும் என்பதால் சிறிய அளவு மாற்றமே பெட்ரோல் விலையில் வரியுடன் சேரும் போது மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








