இப்படி ஒரு விபத்தில் இருந்து உயிர்பிழைத்த காரின் ஓட்டுநர்... சம்பவத்தின் முழு விவரம்..!!
இப்படி ஒரு விபத்தில் இருந்து உயிர்பிழைத்த காரின் ஓட்டுநர்... சம்பவத்தின் முழு விவரம்..!!
அதிக செயல்திறனை பெற்ற கார்களுக்கான விற்பனை இந்தியாவில் தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் செயல்திறன் கார்களுக்கான டிமாண்டுகளும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் குறைந்துவருவதாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன.

ஆனால் செயல்திறன் பெற்ற கார்களை ஓட்டுவதற்கான அனுபவங்களும் இங்கு பல இந்திய ஓட்டுநர்கள் மத்தியில் இருப்பதில்லை.
அதனால் தான் பல செயல்திறன் கொண்ட கார்கள் அதிகளவில் இந்திய சாலைகளில் விபத்துகளில் சிக்குவதை செய்தியாக படித்து வருகிறோம்.

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் வேகமாக சென்ற ஃபியட் அபார்த் பன்டோ கார் ஒன்று மிகப்பெரிய விபத்தில் சிக்கி சிதைந்துள்ளது.
ஆனால் இப்படி ஒரு விபத்து நடந்து, கார் அப்பளமாக நொறுங்கி இருக்கும் நிலையில் அதை ஓட்டிய டிரைவர் உயிர் பிழைத்திருப்பது தான் பெரிய அதிசியமான செய்தியாக உள்ளது.

இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சம்பவம் நடந்த பகுதியில் கார் சுமார் 150 கி.மீ வேகத்தில் சென்றுள்ளது.

அப்போது அதே வழியாக ஒரு டிரக் வர, வேகத்தை கட்டுபட்டுத்த முடியாமல் ஓட்டுநர் திணற அது விபத்தில் போய் முடிந்திருக்கிறது.

இவை மட்டுமின்றி சிலர், கார் வந்த அதே வழியே வந்த டிரக்கால் தான் இந்த விபத்து நடந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் காரின் நிலையை பார்த்தாலே தெரிகிறது, இது ஒரு பெரிய விபத்து என்று. இந்த விபத்தால் காரின் எஞ்சின் குலைந்து, சக்கரங்கள் உடைந்து முற்றிலும் சிதைந்து போய் உள்ளது.

விபத்து ஏற்பட்ட காரின் முன்பகுதியில் பாகங்கள் அனைத்தும் கழண்டு விழுந்து, சக்கரங்கள் பியித்துக் கொண்டு உருண்டோடி இருக்கும் நிலையும் நமக்கு பரிதாபத்தை வரவழைக்கிறது.

ஆனால் இப்படி ஒரு பெரும்விபத்தால் நல்லவேளையாக உயிர் பலி எதுவும் நடக்காமல் இருப்பது அமைதியை தருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதே சமயத்தில் வலைத்தளத்தில் இந்த செய்தியை படிக்கும் பலர், செயல்திறன் கொண்ட கார்களுக்கு ஏற்றவாற்றான சாலைகளை இந்திய அரசு கட்டமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








