Just In
- 14 min ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 45 min ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 5 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 5 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
Don't Miss!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
திடீர் அதிரடி... வாகன உரிமையாளர்களுக்கு செக் வெச்சுட்டாங்க... தப்பி தவறி கூட உங்க வண்டில இதை பண்ணீராதீங்க!
வாகன உரிமையாளர்களுக்கு, மோட்டார் வாகன துறை அதிகாரிகள் தற்போது எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
கால்பந்து (Football) ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஃபிபா உலக கோப்பை 2022 (FIFA World Cup 2022) தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது. இம்முறை உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பை கத்தார் (Qatar) வென்றுள்ளது. இது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றாகும்.
எனவே உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த உலக கோப்பையில் இந்தியா விளையாடவில்லை. இருப்பினும் இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் இந்த திருவிழாவை கொண்டாட தொடங்கியுள்ளனர். குறிப்பாக நமது அண்டை மாநிலமான கேரளாவில்தான் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கியுள்ளன. சாலைகள், பாலங்கள் மற்றும் வீட்டு சுவர்களில் தங்களுக்கு பிடித்த அணிகளின் கொடிகளை கேரள ரசிகர்கள் வரைந்து வருகின்றனர்.
அர்ஜென்டினா (Argentina), போர்ச்சுக்கல் (Portugal) மற்றும் பிரேசில் (Brazil) போன்ற அணிகளுக்குதான் கேரள மாநிலத்தில் அதிக ஆதரவு காணப்படுகிறது. வீரர்களை பொறுத்தவரையில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி (Messi), போர்ச்சுக்கல்லின் கிறிஸ்டியானா ரொனால்டோ (Cristiano Ronaldo) மற்றும் பிரேசிலின் நெய்மர் (Neymar) போன்ற நட்சத்திரங்களுக்கு கேரள ரசிகர்கள் அதிக ஆதரவை வழங்கி வருகின்றனர். போஸ்டர்கள் மற்றும் கட் அவுட்களின் வடிவில், இவர்களின் படங்களையும் தற்போது கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காண முடிகிறது.
அதுமட்டுமல்லாது வாகனங்களையும் கூட கேரள ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை. ஆட்டோக்கள், கார்கள் மற்றும் பைக்குகள் என பல்வேறு வாகனங்களையும் தங்களுக்கு விருப்பமான நாடுகளின் கொடிகள் மற்றும் வீரர்களின் புகைப்படங்கள் மூலமாக கேரள ரசிகர்கள் அலங்கரித்து வருகின்றனர். ஆனால் அனுமதி இல்லாமல் வாகனங்களின் நிறத்தை மாற்றினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மாநிலத்தின் மோட்டார் வாகன துறை தற்போது எச்சரித்துள்ளது.
அனுமதி பெறாமல் வாகனத்தின் நிறத்தை மாற்றுவது விதிமுறைகளுக்கு எதிரானது என மோட்டார் வாகன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு சட்டத்தில் இடம் உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் கால்பந்து உலக கோப்பையை முன்னிட்டு, வாகனங்களை அலங்கரிக்க நினைப்பவர்கள் மனம் தளர வேண்டியதில்லை. மோட்டார் வாகன துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விட்டு, வாகனங்களின் நிறத்தை மாற்றி கொள்ளலாம்.
இதற்கு குறிப்பிட்ட தொகையை ரசிகர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். பைக்குகள் மற்றும் கார்கள் என வாகனங்களின் வகையை பொறுத்து, குறிப்பிட்ட தொகையை அரசு கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த கட்டணத்தை செலுத்தி முறைப்படி அனுமதி பெறும்பட்சத்தில் மெஸ்ஸி, கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் நெய்மர் போன்ற நட்சத்திர வீரர்களின் புகைப்படங்களை வாகனத்திற்கு கொண்டு வர முடியும். அதேபோல் விருப்பமான நாடுகளின் கொடிகளையும் வரைந்து கொள்ளலாம்.
இந்த விதிமுறைகளை பின்பற்றாமல், வாகனங்களின் நிறத்தை மாற்றினால் கடும் நடவடிக்கையை வாகன உரிமையாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கட்டணம் உள்ளிட்ட விபரங்களை தெளிவாக தெரிந்து கொள்வதற்கு ஆர்டிஓ அலுவலகங்களை வாகன உரிமையாளர்கள் அணுக வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் கால்பந்து ரசிகர்கள் அதிகமாக இருப்பதால், இதன் மூலம் அரசுக்கு ஓரளவிற்கு வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!