Just In
- 59 min ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 2 hrs ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
Don't Miss!
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Movies ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்!
பிரான்ஸ் நாட்டிலிருந்து நேற்றுமுன்தினம் கிளம்பிய ரஃபேல் போர் விமானங்கள் சற்றுமுன் அம்பாலா விமானப்படை தளத்தில் வந்து தரை இறங்கின. இந்திய எல்லைக்குள் இரண்டு சுகோய் போர் விமானங்கள் புடை சூழ அம்பாலா விமான நிலையத்தில் வந்திறங்கிய ரஃபேல் போர் விமானங்களுக்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்திய விமானப் படை தலைமை தளபதி ஆர்கேஎஸ் பதவுரியா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் ரஃபேல் போர் விமானங்களை வரவேற்கும் நிகழ்வில் பங்கு கொண்டுள்ளனர்.
எல்லைப் பகுதிகளில் அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வந்ததையடுத்து, அதிநவீன போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, உலக அளவில் டென்டர் கோரப்பட்டது. இதில், உலகின் பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவுக்கு போர் விமானங்களை சப்ளை செய்வதற்கு விண்ணப்பித்தன.
இதில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் குறைவான விலையை நிர்ணயத்து, டென்டரில் வெற்றி பெற்றது. கடந்த 2012ம் ஆண்டு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதில், 18 ரஃபேல் போர் விமானங்கள் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் வாங்குவதற்கும், மீதமுள்ள 108 ரஃபேல் போர் விமானங்களை உரிமத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடேட் நிறுவனம் உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆட்சி மாற்றம், அரசியல் பிரச்னைகள், விலை நிர்ணயம் உள்ளிட்டவற்றால் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பல்வேறு தடைகளை சந்தித்தது. ஒருவழியாக இந்த ஒப்பந்தம் மறு சீரமைப்பு செய்யப்பட்டு 36 ரஃபேல் போர் விமானங்கள் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது.
ரூ.58,000 கோடியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பல்வேறு தடைகளுக்கு பின்னர் இறுதி ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் முதல் தொகுதியில் 5 ரஃபேல் போர் விமானங்கள் டெலிவிரி கொடுக்கப்பட இருந்தது.
ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் சீன ராணுவம் அத்துமீறியதால், ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனால், எல்லைப் பகுதியில் இந்தியா- சீனா இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. எனவே, ரஃபேல் போர் விமானங்களை விரைந்து வழங்க பிரான்ஸ் அரசுக்கு இந்தியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, முதல் தொகுதியில் 5 ரஃபேல் போர் விமானங்களை வழங்க பிரான்ஸ் முடிவு செய்தது. இதன்படி, முதல் தொகுதியில் வழங்கப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் பிரான்ஸிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன.
டஸால்ட் ஏவியேஷன் ஆலை வளாகத்தில் இருந்து புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்களையும் பயிற்சி பெற்ற இந்திய விமானப் படை விமானிகள் இயக்குகின்றனர். சுமார் 7,000 கிமீ தூர பயணத்தை மேற்கொண்டுள்ள ரஃபேல் போர் விமானங்கள் வரும் வழியில் எரிபொருள் நிரப்புதல், விமானிகளுக்கு ஓய்வு உள்ளிட்டவற்றிற்காக இடைநிறுத்தம் செய்யப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் புறப்பட்டு 7 மணிநேர பயணத்திற்கு பின் அபுதாபி அருகே உள்ள அல் தாஃப்ரா விமானப் படை தளத்தில் தரை இறக்கப்பட்டன.
இந்த நிலையில், நேற்று ஒருநாள் ஓய்வுக்கு பின் அல் தாஃப்ரா விமானப் படை தளத்திலிருந்து இந்தியா நோக்கி ரஃபேல் போர் விமானங்கள் இன்று காலை புறப்பட்டன. 4 மணிநேர பயணத்திற்கு பின் இந்திய வான் எல்லையை அடைந்த ரஃபேல் போர் விமானங்கள், ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப் படை தளத்தில் சற்று முன் தரை இறங்கின. ரஃபேல் போர் விமானங்கள் தரை இறங்குவதை போட்டோ, வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், அம்பாலான விமானப் படை தளத்தை சுற்றி 3 கிமீ தூரத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
போர் செய்வதற்கு தயாரான அம்சங்களுடன் வந்திருப்பதால், உடனடியாக பாதுகாப்புப் பணியில் ரஃபேல் போர் விமானங்களை ஈடுபடுத்தலாம். மேலும், சீனாவால் பதட்டம் அதிகரித்துள்ள லடாக் பிராந்திய பாதுகாப்பில் இந்த ரஃபேல் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.
ரஃபேல் போர் விமானங்கள் 4.5 தலைமுறையை சார்ந்தது. எதிரிகளின் ரேடார்களில் சிக்காத வகையில் டெல்டா விங் என்ற றெக்கை அமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுய பாதுகாப்பு மற்றும் எதிரி இலக்குகளை கண்காணிப்பதற்கான அதிநவீன ரேடார்கள், வானிலிருந்து வான் இலக்கையும், தரை இலக்கையும் துல்லியமாக தாக்கும் இரண்டு வகை ஏவுகணைகள், கண்காணிப்பு சாதனங்களுடன் வந்துள்ளது. இது எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
2022ம் ஆண்டுக்குல் ஆர்டர் செய்யப்பட்ட அனைத்து ரஃபேல் போர் விமானங்களும் இந்தியாவிடம் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. கொரோனா பிரச்னையால் சற்றே கால தாமதம் ஏற்படலாம். அம்பாலா தவிர்த்து, மேற்கு வங்கத்திலும் ரஃபேல் போர் விமானங்கள் அடங்கிய ஒரு படையணி நிறுவப்படும். இந்த இரண்டு படையணிகளிலும் தலா 18 ரஃபேல் போர் விமானங்கள் இடம்பெற்றிருக்கும். இதில், தலா 3 பயிற்சி ரஃபேல் போர் விமானங்களும் அடங்கும்.
ரஃபேல் போர் விமானங்கள் மூலமாக இந்தியாவின் பாதுகாப்பு நிச்சயம் பெரிய அளவில் வலுப்பெறும் என்று பாதுகாப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவின் ஜே-20 விமானத்தின் அச்சுறுத்தல்களை ரஃபேல் போர் விமானம் மூலமாக இந்தியா சமாளிக்க முடியும் என்றும் அவர்கள் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இனி இந்திய எல்லையில் சீண்டுவதற்கு ஒருமுறைக்கு இருமுறை எதிரிகள் யோசிக்க வைக்கும் என்று நம்பப்படுகிறது.
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!