காரில் ஏறிய உடன் பிரதமர் மோடி செய்த காரியத்தை பார்த்தீர்களா?
பிரதமர் மோடி தனது காரில் ஏறிய உடன் சீட் பெல்ட்டை போடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது. பிஐபி வெளியிட்டுள்ள இந்த வீடியோவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். காரில்
பிரதமர் மோடி தனது காரில் ஏறிய உடன் சீட் பெல்ட்டை போடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது. பிஐபி வெளியிட்டுள்ள இந்த வீடியோவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். காரில் செல்லும் போது பாதுகாப்பு மிகவும் அவசியம் அதனால் கட்டாயம் சீட் பெல்ட்களை அணிய வேண்டும் என்பதை பொதுமக்களிடம் விழிப்புணர்வூட்டும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு தேர்ந்தேடுக்கப்பட்டார். இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட காலம் முதல் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி இந்தியாவின் முக்கியமான பிரதமர்களில் அவரும் ஒருவராக இருக்கிறார்.

பிரதமர் நரேந்திரமோடி எப்பொழுது காரில் ஏறினாலும் காரின் சீட் பெல்ட்டை போட அவரது கை தானாக போய்விடுமாம். அதாவது எப்பொழுதும் காரில் ஏறினாலும் முதல் வேலையாக சீட் பெல்டை தான் போடுகிறார். இந்த வீடியோவை சமீபத்தில் பிஐபி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியட்டுள்ளது

சுமார் 1 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் நரேந்திரமோடி ரேஞ்ச் ரோவர் காரில் ஏறுகிறார். அவர் ஏறியதும் உடனடியாக காரில் உள்ள சீட் பெல்ட்டை போடுகிறார். இதை வேறு வேற கோணங்களில் உள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை பிஐபி நேற்று வெளியிட்டது. இப்பொழுது முதல் இது வரை இந்த வீடியோவை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 2500க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோக வெளியிட்ட பிஐபி, சதக் சுரக்ஷா ஜீவன் ரக்ஷா என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தியுள்ளது. பாதுகாப்பு என்பது சாதாரண மனிதான இருந்தாலும் சரி, பிரதமராக இருந்தாலும் சரி எல்லோருக்கும் அது முக்கியம்.

பிரதமர் மோடி காரில் ஏறியதும் சீட் பெல்ட்டை போடும் வீடியோவில் பலர் பிரதமர் மோடியை பாராட்டி பின்னுட்டமிட்டுள்ளனர். பல்வேறு பிரபலங்களும் இந்த டுவீட்டை ரீடுவீட் செய்துள்ளனர்.

இந்தியாவில் காரில் செல்லும் போது சீட் பெல்ட் போட வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானோருக்கு வருவதில்லை. ஆனால் சீட் பெல்ட் என்பது உயிரையே காக்கும் கருவி, காரில் செல்லும் போது விபத்து நடக்காமல் இருக்கும் என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியாது.
இந்தியாவில் காரில் செல்லும் போது சீட் பெல்ட் போட வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானோருக்கு வருவதில்லை. ஆனால் சீட் பெல்ட் என்பது உயிரையே காக்கும் கருவி, காரில் செல்லும் போது விபத்து நடக்காமல் இருக்கும் என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியாது.
அதனால் காரில் செல்லும் போது டிரைவர் மட்டும் அல்ல காரில் பயணிக்கும் எல்லோரும் சீட் பெல்ட்டை போட வேண்டும் என்ற எண்ணம் கட்டாயமாக வரவேண்டும்.
கடந்த 2016ம் ஆண்டு மட்டும் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1.5 லட்சம் கடந்த 2017ம் ஆண்டு அதில் 3 சதவீதம் குறைந்திருந்தது. விபத்து என்பது தவிர்க்க முடியாதது தான் ஆனால் நம்மால் முடிந்த அளவிற்கு அதை தவிர்க்க நினைப்பதே புத்திசாலித்தனம்.


Click it and Unblock the Notifications








