Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 5 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- News அயிலை, கட்லா, ஜிலேபி.. சிவகங்கையில் பரவசம்.. திருப்பத்தூர் கண்மாயில் துள்ளிய மீன்கள்.. செம ஆச்சரியம்
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Movies குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை: காந்தாஸ் அறிமுகப்படுத்துகிறது
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து லண்டனுக்கு உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையை காந்தாஸ் நிறுவனம் துவங்க இருக்கிறது. இதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
டெல்லியிலிருந்து அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கு உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையை அண்மையில் ஏர் இந்தியா நிறுவனம் துவங்கியது. மிக வெற்றிகரமாக இந்த பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இதைவிட கூடுதல் தூரம், நேரம் பயணிக்கும் விமான சேவையை ஆஸ்திரேலியாவை சேர்ந்த காந்தாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து லண்டன் மாநகருக்கு இந்த விமானம் இயக்கப்பட உள்ளது. இந்த விமானம் 17.5 மணிநேரம் இடைநில்லாமல் பறந்து இந்த இரு நகரங்களையும் இணைக்க இருக்கிறது.
இந்த நீண்ட தூர பயணத்திற்கு போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களை காந்தாஸ் நிறுவனம் பயன்படுத்த இருக்கிறது. இதற்காக ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் அடுத்த ஆண்டு டெலிவிரி பெறப்பட உள்ளன.
பெர்த்- லண்டன் இடையிலான 14,466 கிமீ தூரத்திற்கு இந்த விமானம் இடைநில்லாமல் பயணிக்கும். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த விமான சேவைக்கான முன்பதிவு துவங்கப்படும். 2018ம் ஆண்டு இந்த விமான சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த விமானத்தின் மிக முக்கிய சிறப்பு என்னவெனில், அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதே. இதன்மூலம், நீண்ட தூரம் பறக்கும் விமானமாக இதனை அறிமுகம் செய்தனர். அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறும் வகையில், இலகு எடை கொண்ட உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டன.
அதாவது, இந்த விமானத்தின் 80 சதவீத பாகங்கள் இலகு எடை கொண்ட கலப்பு உலோக பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கார்பன் ஃபைபர், டைட்டானியம் மற்றும் உறுதிமிக்க அலுமினியம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.
இந்த சேவைக்காக பயன்படுத்தப்பட இருக்கும் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பும்பட்சத்தில் 15,190 கிமீ தூரம் பறந்து செல்லும் திறன் கொண்டது. அதிக எரிபொருள் சிக்கனம் தருவதால், கட்டணமும் நியாயமாக நிர்ணயிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஜிஇ எலக்ட்ரிக் அல்லது ரோல்ஸ்ராய்ஸ் எஞ்சின்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த விமானமானது மணிக்கு 945 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. சராசரியாக 903 கிமீ வேகத்தில் பறந்து செல்லும்.
அதிக எரிபொருள் சிக்கனம், சொகுசான பயணத்தை வழங்கும் இந்த விமானங்கள் இந்த நீண்ட தூர பயண வழித்தடத்தில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. போயிங் 787 விமானத்தில். 242 பயணிகள் முதல் 335 பயணிகள் வரை செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட மாடல்களில் கிடைக்கின்றன. இரண்டு பைலட்டுகள் இந்த விமானத்தை இயக்க முடியும்.
இன்றைய மதிப்பில் ஒரு விமானத்தின் விலை ரூ.1,500 கோடியாக தெரிவிக்கப்படுகிறது. வசதிகள், இருக்கை அமைப்பு, எஞ்சின் தேர்வு உள்ளிட்டவற்றை பொறுத்து விலையில் மாறுபாடுகள் இருக்கிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நகருக்கு உலகின் மிக நீண்ட தூர விமான சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சிங்கப்பூர்- நியூயார்க் நகரங்களுக்கு இடையிலான 16,500 கிமீ தூரத்தை 19 மணிநேரத்தில் இந்த விமானம் கடக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த விமான சேவையை துவங்குவதற்கான திட்டம் உள்ளது.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!