Just In
- 19 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 2 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 3 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 4 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- News நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! விஐபி தொகுதிகளில் இத்தனை மாற்றமா?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட கார்கள்... அதிர்ஷ்டவசமாக தப்பிய சந்திரபாபு நாயுடு... என்ன நடந்தது தெரியுமா?
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சாலை விபத்து ஒன்றில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அவரது கான்வாயில் வந்த வாகனங்கள் எதிர்பாராதவிதமாக ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. தெலங்கானா மாநிலம் யாதாத்ரி போங்கிர் மாவட்டத்தில், கடந்த சனிக்கிழமை மாலை இந்த விபத்து நடைபெற்றது.
ஆனால் சந்திரபாபு நாயுடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். எனினும் இந்த சாலை விபத்தில் என்எஸ்ஜி (NSG - National Security Guard) வீரர்கள் மூன்று பேர் லேசாக காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் அவர்கள் பயணம் செய்த குண்டு துளைக்காத வாகனம் பலத்த சேதமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜயவாடா-ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் (என்எச்-65), சவுத்துப்பல் அருகே உள்ள தண்டுமல்காபுரம் என்ற கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. அமராவதியில் உள்ள தனது வீட்டில் இருந்து கான்வாய் வாகனங்கள் புடைசூழ சந்திரபாபு நாயுடு ஐதராபாத் திரும்பி கொண்டிருந்த சமயத்தில், துரதிருஷ்டவசமாக இந்த விபத்து அரங்கேறியுள்ளது.
இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''மொத்தம் 7 வாகனங்கள் அடங்கிய கான்வாயில் சந்திரபாபு நாயுடு பயணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் 3 வாகனங்களும், பின்னால் 3 வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. சந்திரபாபு நாயுடு நான்காவது வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
தேசிய நெடுஞ்சாலையை கடந்த பசுவின் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக முதல் வாகனத்தின் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்தபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதன்விளைவாக கான்வாயில் வந்த 2வது வாகனம், முதல் வாகனத்தின் மீது பின்னால் இருந்து மோதியுள்ளது. மேலும் கான்வாயில் வந்த மற்ற வாகனங்களும் திடீரென பிரேக் பிடித்தாக வேண்டிய சூழல் உருவானது.
இந்த கான்வாயில் வந்த 3வது வாகனம் குண்டு துளைக்காத வசதியை கொண்டது. 2வது வாகனத்தின் மீது மோதியதால், அதன் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 4வது வாகனத்தில் இருந்தார். அவர் பயணித்த வாகனத்தின் ஓட்டுனரும் திடீரென பிரேக் பிடித்தார். ஆனால் முன்னால் இருந்த வாகனத்துடன், சந்திரபாபு நாயுடு பயணித்த வாகனம் மோதவில்லை.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடைகளால் இப்படி விபத்துக்கள் நடப்பது இது முதல் முறை கிடையாது. ஆனால் ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், இந்தியா முழுவதும் நன்கு பரிட்சயமான அரசியல்வாதியுமான சந்திரபாபு நாயுடுவே விபத்தில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சாலைகளில் கால்நடைகள் எப்போது வேண்டுமானாலும் திடீர் திடீரென குறுக்கே வரும். இதனால் வாகன ஓட்டிகள் சற்று கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. குறிப்பாக மிதமான வேகத்தில் பயணம் செய்வது நல்லது. ஏனெனில் கால்நடைகள் திடீரென குறுக்கே வரும்போது அதிவேகத்தில் பயணித்து கொண்டிருந்தால், வாகனத்தை கட்டுப்படுத்துவது சிரமமான காரியமாக மாறி விடும்.
இது சாலை விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து விடும். எனவே வாகனத்தை மிதமான வேகத்தில் செலுத்துங்கள். ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகள் மட்டுமல்லாது, பாதசாரிகளும் உங்கள் வாகனத்தின் குறுக்கே திடீரென வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை எல்லாம் மனதில் வைத்து வாகனத்தை இயக்குங்கள். இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!