Just In
- 1 hr ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 6 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையை நாறடித்த ஃபார்ச்சூனர்: 3 பேரை பலிவாங்கிய பரிதாபம்!
அதிவேகத்தில் வந்த ஃபார்ச்சூனர் கார் மோதி, மஹிந்திரா எக்ஸ்.யூ.வி காரில் இருந்த 3 பேர் கொடூர மரணம்.
பஞ்சாப் மாநிலத்தின் நெடுஞ்சாலை ஒன்றில் அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்றின் டயர் வெடித்ததில் எதிரே வந்த மஹிந்திரா எக்ஸ்.யூ.வி உடன் பலத்த சத்ததுடன் அது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பரிதாபமாக உயிரழந்தனர்.
பஞ்சாபின் ஜலந்திரில் இருந்து அம்ரிஸ்டர் நகரில் உள்ள ஜாண்டியலா பகுதிக்கு டொயோட்டா ஃபார்ச்சுனர் எஸ்.யூ. வி கார் ஒன்று அதிவேகத்தில் சென்று கொண்டு இருந்தது.
ஜாண்டியலாவின் நம்பர் 1 தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த ஃபார்ச்சூனர் காரின் டயர் திடீரென பெருத்த சப்தத்துடன் வெடித்தது. இதில் கார் கட்டுபாட்டை இழந்து சாலையில் நிலைதடுமாறியது.
அதே சாலையில் எதிரே வந்த மஹிந்திரா எகஸ்.யூ.வி கார் மீது, நிலைதடுமாறிய ஃபார்ச்சுனர் கார் மோதி, அதன் மீது ஏறி சிறுது தூரம் இழுத்துக்கொண்டு சென்று நின்றது.
இந்த சம்பவத்தில் மஹிந்திரா எக்ஸ்.யூ.வி காரில் வந்த எட்டு பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி ஆனார்கள்.
மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மஹிந்திரா எக்ஸ்.யூ.வி காரில் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். அவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர். பலியானவர்களின் உடல்களை பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு, விபத்து குறித்து ஆராய அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை கைப்பற்றினர்.
அதிவேகத்தில் சென்ற ஃபார்ச்சூனர் கார் எதிரே வந்த மஹிந்திரா எக்ஸ்.யூ.வி காருடன் பலத்த சத்துடன் மோதும் காட்சிகளை பார்த்தனர்.
இதன்மூலம் இந்த கோர விபத்திற்கு காரணம் ஃபார்ச்சூனர் ஓட்டுநரான ராஜேந்திர் சிங் தன் என்பதை அப்பகுதி போலீசார் முடிவு செய்தனர்.
மேலும் மஹிந்திரா காரில் பயணித்த ஷீத்தல் அரோரா என்ற பெண், எதிரே வந்த ஃபார்ச்சூனர் ஓட்டுநர் ராஜேந்திர சிங் மயக்க நிலையில் இருந்ததாக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஷீத்தல் கொடுத்த புகாரை போலீசார் உறுதியாக தெரிவிக்கவில்லை என்றாலும், அதிவேகமாக வந்து இந்த கொடூர விபத்தை ஏற்படுத்தியதாக ஃபார்ச்சூனர் ஓட்டுநர் ராஜேந்திர சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா எஸ்.யூ.வி மீது அதிவேகத்தில் ஃபார்ச்சூனர் கார் மோதியதால் இரண்டு கார்களும் அப்பளம் போல நொறுங்கியது.
மஹிந்திரா எக்ஸ்.யூ.வி மற்றும் ஃபார்ச்சூனர் கார் நேருக்கு நேர் மொதிக்கொண்ட விபத்தை குறித்து போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி வீடியோ...
எதிர்பாராத இந்த கொடூரமான விபத்தால் ஜாண்டியலா நெடுஞ்சாலை பகுதி முழுக்க பரபரப்புடன் காணப்பட்டது.
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு