Just In
- 1 hr ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 2 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 4 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 9 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Movies ஹன்சிகாவுக்காக பல கோடி செலவு செய்த சிம்பு.. தப்பா பேசவே இல்ல.. சினிமா பிரபலம் சொன்ன அந்த விஷயம்!
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கன்னாபின்னானு உயரும் பெட்ரோல் விலை! தமிழகத்தில் இப்படி ஒரு சலுகையை யாருமே எதிர்பாக்கல! உடனே யூஸ் பண்ணிக்கணும்!
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில், தமிழகத்தில் அதிரடியான சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை வாகன ஓட்டிகளை வாட்டி வதைத்து வருகிறது. பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை முதல் முறையாக 100 ரூபாயை கடந்துள்ளது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தங்களது கலால் மற்றும் வாட் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அல்லது ஜிஎஸ்டி வரம்பிற்குள்ளாவது பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும்பட்சத்தில், பெட்ரோல், டீசலின் விலை வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வருவாய் இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால், வாகன ஓட்டிகளின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தற்போது தயாராக இல்லை.
இதனால் சமூக வலை தளங்களில் வாகன ஓட்டிகள் மனக்குமுறலை கொட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில், பிரபல பிரியாணி கடை ஒன்று தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பிரியாணி பிரியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு கவனம் ஈர்த்துள்ளது. பிரியாணி வாங்கினால் பெட்ரோல் இலவசம் என்பதுதான் அந்த அறிவிப்பு.
பிரபல பிரியாணி கடையான தொப்பி வாப்பா பிரியாணிதான் இந்த அதிரடி சலுகையை அறிவித்து கவனம் ஈர்த்துள்ளது. இதன்படி ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால், 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும். ஆனால் இந்த சலுகை நாளை (ஜூலை 8, வியாழன்) ஒரு நாள் மட்டுமே வழங்கப்படும். அத்துடன் சென்னை நகரில் உள்ள தொப்பி வாப்பா பிரியாணி கடையின் கிளைகளில் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
எனவே பிரியாணி மீது காதல் கொண்ட வாகன ஓட்டிகள் நாளை தொப்பி வாப்பா பிரியாணி கடைகளுக்கு படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால் ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களில் கேக் வாங்கினால், பெட்ரோல் இலவசம் என நிறைய பேக்கரிகள் அறிவித்திருக்கின்றன.
அதேபோன்று எரிபொருள் விலை உயர்வை குறிப்பிடும் வகையில், திருமண நிகழ்ச்சிகளில் மணமக்களுக்கு பெட்ரோல், டீசலை நண்பர்கள், உறவினர்கள் பரிசாக வழங்கிய வினோத சம்பவங்களும் கூட நடந்துள்ளன. இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை தற்போதைக்கு குறைவதற்கான வாய்ப்புகள் எதுவும் தென்படவில்லை.
கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை காரணமாக மத்திய, மாநில அரசுகளும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் மூலமாக கிடைக்கும் வருமானத்தை அவை பெரிதும் நம்பியுள்ளன. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் எரிபொருள் விலை குறைவது சந்தேகமே.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால், இந்திய மக்களின் கவனம் எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது தற்போது திரும்பியுள்ளது. அதற்கேற்ப முன்னணி கார் மற்றும் டூவீலர் நிறுவனங்கள் தொடர்ச்சியாக பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. எனவே வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!