Just In
- 1 hr ago ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- 2 hrs ago தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- 4 hrs ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 10 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
Don't Miss!
- News 4ம் கட்ட லோக்சபா தேர்தல்! 10 மாநிலங்கள்.. 96 தொகுதிகளில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது
- Movies பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பௌர்ணமி இரவில் நிலவின் அடியில் அதிகரிக்கும் பைக் விபத்துகள் & மரணங்கள்... ஆய்வில் அதிர்ச்சி..!!
பௌர்ணமி இரவில் நிலவின் அடியில் அதிகரிக்கும் பைக் விபத்துகள் & மரணங்கள்... ஆய்வில் அதிர்ச்சி..!!
வாகன விபத்துகளை குறித்து கல்லூரி பேராசியர்கள் இருவர் மேற்கொண்ட ஆய்வில், கிடைக்கபெற்ற முடிவுகள் உலகையே ஆச்சர்யமடைய செய்துள்ளன.
வாகன விபத்து என்பது எங்கும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இருப்பினும் பைக் விபத்துகள் நடைபெறும் நாட்களை ஒரு நிகழ்வுடன் தொடர்புப்படுத்தும் ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.
Recommended Video
அதன்படி, மருத்துவத்துறை பேராசிரியர் டோனால்டு ஆ ரெடில்மையர் மற்றும் உளவியல் துறை பேராசிரியர் எல்டார் ஷாஃபிர் ஆகியோர் அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இருசக்கர வாகன பயன்பாட்டில் ஏற்படும் அனைத்து வித விபத்துகள் மற்றும் அது நடைபெறும் நாட்கள் ஆகியவை இதில் உட்படுத்தப்பட்டன.
பல நாட்கள் நடைபெற்ற இந்த ஆய்வில் மோட்டார்சைக்கிள் வாகன விபத்துகள் நடக்க காரணமாக வானில் தோன்றும் நிலா உள்ளதாக தெரியவந்துள்ளது.
சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்களை அமெரிக்காவில் இறப்பு பகுப்பாய்வு அறிக்கையிடல் அமைப்பு ஆவணம் செய்து வருகிறது.
இதன்மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் விபத்து, அதில் ஏற்பட்ட மரணம் மற்றும் இவை இரண்டும் நடைபெற்ற நாள் போன்ற விஷயங்களை பேராசியர்கள் டோனால்டு,
எல்டார் ஆகியோர் ஆராய்ந்து பார்த்தனர்.
1975 முதல் 2014-ம் ஆண்டு வரை மொத்த 494 முறை முழு நிலா தோன்றி மறைந்துள்ளது. அன்றைய நாட்களில் மாலை 4 மணி முதல் நடுயிரவு வரையிலும், நடுயிரவு முதல் காலை 8 மணி வரையிலும் பல்வேறு வாகன விபத்துகள் நடைபெற்று அதனால் உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கூடுதலாக விபத்தில் உயிரழப்புகள் ஏற்பட்ட அந்த நாள் இரவின் முந்தைய மற்றும் பிந்தைய வாரங்களில் முழு நிலவு இல்லாத மொத்தம் 988 இரவுகளை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.
அதில் மொத்தமாக சாலை விபத்துகளால் ஏற்பட்ட 13,209 மரணங்களில், 10ல் 9.1 விகித உயிரழப்புகள் முழு நிலவு தோன்றிய நாட்களில் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
அதாவது சாதாரன நாட்களை விட ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஒருவர் சாலை விபத்துகளில் உயிரழக்கிறார்.
மேலும் பௌர்ணமி நிலவு அதிக ஒளியை பாய்ச்சும் சூப்பர் மூனாக இருக்கும் 65 இரவுகளில் மரணம் நிச்சயம் சம்பவத்திள்ளது.
அதிர்ச்சியூட்டும் இந்த முடிவை ஆய்வில் ஈடுபட்ட பேராசியர்கள் டோனால்டு, இதார் முதலில் ஏற்க மறுத்தனர். ஆனால் வாகன ஓட்டிகளின் வயது, பாலினம், போன்றவற்றை ஆராய்ச்சிக்கு உட்படுத்திய போது, இந்த ஆய்வு மேலும் நிரூபனமானது.
பௌர்னமி இரவில் ஏற்படும் சாலை விபத்துகள் மற்றும் வானில் ஒளிரும் முழு நிலாவிற்கு பல்வேறு முறையில் சம்மந்திருப்பது தெரியவந்துள்ளது.
பிரம்மாண்ட தோற்றத்தில் முழு நிலா வானில் ஒளிரும்போது, இயல்பாகவே சாலை பயனாளிகளுக்கு கவனச்சிதறல் ஏற்படும்.
இருண்ட வானில் பிரகசமாக தோன்றும் முழுநிலவை யாரும் எளிதில் கடந்திவிட முடியாது. அதன் ஒளிரும் தன்மைக்கு மாறுபட்ட வேறுபாடு உள்ளது.
நிலவின் ஒளிரும் தன்மை கூடுதல் ஒளியை பாய்ச்சும் நிலையில், அது வாகன ஓட்டிகளுக்கு சாலையின் மீதுள்ள கவனத்தை திசைதிருப்பலாம்.
வியப்பும் திகைப்புமாக வாகன ஓட்டிகள் பௌர்ணமி நிலவை பார்க்கும் போது, பெரும்பாலானர்வகளுக்கு அது ஒருவித இல்லூஸ்யனை ஏற்படுத்துகிறது.
பிரகாசமான நிலவு என்பது தொலைதூர பயணம், அதிவேக பயணம், அடிக்கடி வாகனங்களை பயன்படுத்துதல், நிலவை பின்தொடர்ந்து தெரியாத வழிகளுக்கு செல்லுதல் மற்றும் பயணத்தில் ஒரு புது அனுபவம் போன்ற பல்வேறு உணர்வுகளை வாகன ஓட்டிகளிடம் தட்டி எழுப்புகிறது.
இதுவரை இல்லாத புதிய அனுபவங்களை வாகன ஓட்டிகள் (முக்கியமாக இருசக்கர வாகன பயன்பாட்டாளர்கள்) ஒருசேர உணரும் போது, அது சாலை விபத்துகளுக்கு வழிவகுக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
முழு நிலவு தோன்றும் இரவுகள் வாகன விபத்துகளை அதிகரிக்க காரணமாக அமைந்துவிடுகிறது என்ற கருத்து ஆச்சர்யத்தை தருவதாக உள்ளது.
விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்கள் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் டோனால்டு ஆ ரெடில்மையர் மற்றும் எல்டார் ஷாஃபிரின் இந்த ஆய்விற்கு வலு சேர்த்துள்ளனர்.
இதற்கு பிறகு இரவில் நீங்கள் ரைடிங் செல்லும் போது முழு நிலா பிரகாசமாக ஒளிர்வதை பார்த்தால், டோனால்டு & எல்டாரின் பௌர்ணமி இரவு பற்றிய ஆய்வை நினைவில் கொள்க.
-
மைலேஜில் டூவீலர்களே ஒரு அடி பின்னாலதான் நிக்கணும்! புது அவதாரம் எடுக்கிறது மாருதி ஸ்விஃப்ட்! புக்கிங் தொடக்கம்
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு