வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?

2018-19 வரை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படும் 570 டோல் பூத்துகள் மூலம் எத்தனை கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா...?

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 570 டோல்கேட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர தனியார் வசத்திலும் ஏராளமான சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.

வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா...?

இந்த டோல்கேட்டுகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத் தொகை அனைத்தும், குறிப்பிட்ட எல்லைத் தூரம் வரை உள்ள சாலையை முறைப்படுத்துவதற்காவும், பராமரிப்பதற்காவும் வசூலிக்கப்படுகின்றது.

வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா...?

ஆனால், பல இடங்களில் முறையாக பராமரிக்கப்படாத சாலைகளுக்கும் பிளாசாக்கள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக நாடு முழுவதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆகையால், பலருக்கு இந்த கட்டணம் செலுத்துவதற்கு முழுமையான ஈடுபாடில்லை. இருப்பினும், கட்டாயத்தின் காரணமாக அதனை புலம்பலுடன் செலுத்திவிட்டு செல்கின்றனர் மக்கள்.

வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா...?

இந்நிலையில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்கீழ் செயல்படும் 570 டோல் பிளாசாக்கள் மூலம், கடந்த 2018ம் ஆண்டின் இறுதியில் இருந்து நடப்பாண்டு அக்டோபர் 31ம் தேதி வரை சுமார் ரூ. 24,396 கோடி வரை வசூல் செயல்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா...?

இந்த தகவலை, இன்று (டிசம்பர் 6) நடைபெற்ற மக்களவை கூட்டத்தின்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார்.

வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா...?

தொடர்ந்து, "மாதம் ஒன்றிற்கு ரூ. 2033 கோடி வீதமும். நாள் ஒன்றிற்கு 66.84 கோடி ரூபாய் வீதத்திலும் வசூல் செய்யப்பட்டிருப்பதாக" அவர் கூறினார்.

வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா...?

இது தவிர, "2018-19 நிதியாண்டில் தனியார் டோல் ஆபரேட்டர்கள் மூலம் ரூ. 9,681.50 கோடி வரை பெறப்பட்டிருப்பதாகவும்" நிதின் கட்காரி தெரிவித்தார்.

இதில், அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 2,549.12 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா...?

இதுகுறித்து பேசிய நிதியமைச்சர், "31.10.2019 நிலவரப்படி, தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டுமொத்தமாக 54 பயனர் டோல் பிளாசாக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 2018-19 நிதியாண்டில் ரூ. 2,549.12 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது சராசரியாக மாத ஒன்றிற்கு ரூ. 212.42 கோடி மற்றும் நாள் ஒன்றிற்கு ரூ. 6.98 கோடி ஆகும்" என்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, December 6, 2019, 20:00 [IST]
English summary
FY 2018-19 National Highway Toll Fee Details. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+