Just In
- 1 hr ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 11 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 13 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 14 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
Don't Miss!
- Movies
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
- News
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்
- Sports
ராகுல் டிராவிட்டை பார்த்து கத்துக்கங்க... முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு அப்ரிடி வேண்டுகோள்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
594 கிமீ, 6 லேன்கள், 12 மாவட்டங்கள் வழியே செல்லும்! கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்ட பணிகள் 2021ல் துவக்கம்
கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்ட பணிகள் அடுத்த ஆண்டு தொடங்குகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கங்கா எக்ஸ்பிரஸ்வே (Ganga Expressway) திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்துமாறு, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மீரட்டில் இருந்து பிரயக்ராஜ் வரை, 36,410 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கங்கா எக்ஸ்பிரஸ்வே சாலை பணிகளை, அடுத்த ஆண்டு தொடங்குமாறும் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.

மீரட்டின் ஷன்கார்பூர் கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை-235ல் இருந்து தொடங்கும் கங்கா எக்ஸ்பிரஸ்வே, பிரயக்ராஜ் மாவட்டத்தின் சோரோனிற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை 330ல் முடிவடையும். மீரட், புலந்த்ஷாகர், ஹப்பூர், அமோரா, சாம்பல், படான், ஷாஜகான்பூர், ஹரோடி, உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர் மற்றும் பிரயக்ராஜ் ஆகிய 12 மாவட்டங்கள் வழியாக இந்த எக்ஸ்பிரேஸ்வே செல்லும்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

594 கிலோ மீட்டர்கள் நீளமுள்ள இந்த கங்கா எக்ஸ்பிரஸ்வே, 6 லேன்கள் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. இதனை எட்டு லேன்களாக விரிவுபடுத்தி கொள்ள முடியும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. அதற்குள்ளாக 90 சதவீதம் நிலம் கையகப்படுத்துதல் பணிகள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கங்கா எக்ஸபிரஸ்வே பணிகள் நிறைவடைந்தால், உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 1,900 கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு எக்ஸ்பிரஸ்வேக்கள் இருக்கும். அத்துடன் தொழில்துறை மற்றும் விவசாய துறைகளின் வளர்ச்சிக்கு இது வேகம் கொடுக்கும். மேலும் பல்வேறு துறைகளில் புதிய முதலீடுகளையும் ஈர்க்கும்.

பணிகள் முடிவடைந்து திறக்கப்பட்டவுடன், உத்தர பிரதேச மாநிலத்தின் மிக நீளமான 6 லேன்கள் கொண்ட எக்ஸ்பிரேவே சாலையாக இது உருவெடுக்கும். ஆனால் நாம் ஏற்கனவே கூறியபடி இதனை 8 லேன்கள் கொண்ட எக்ஸ்பிரஸ்வே சாலையாக விரிவுபடுத்தி கொள்ள முடியும். மேற்கு உத்தர பிரதேசத்தையும், கிழக்கு உத்தர பிரதேசத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக இது இருக்கும்.

அத்துடன் மீரட் மற்றும் பிரயக்ராஜ் ஆகிய இரண்டு நகரங்களுக்கு இடையே பயணிப்பதற்கான நேரத்தை, இந்த எக்ஸ்பிரஸ்வே வெகுவாக குறைக்கும். வெறும் 5 மணி நேரத்திற்கு உள்ளாகவே, மீரட்டில் இருந்து பிரயக்ராஜ் சென்று விட முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிக்கு 120 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் வகையில் இந்த எக்ஸ்பிரஸ்வே கட்டமைக்கப்படவுள்ளது.

ஆனால் மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும். அத்துடன் பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். இது மிக நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் திட்டமாகும். எனினும் தற்போதைய அரசு கங்கா எக்ஸ்பிரஸ்வே பணிகளை விரைவாக முடிக்க விரும்புகிறது.

ஒரு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியில் சாலைகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. எனவே மத்தியில் தற்போது ஆளும் பாஜக அரசு இந்தியாவில் புதிய தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதிலும், ஏற்கனவே நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.