Just In
- 1 hr ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- 1 hr ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- 1 hr ago இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- 2 hrs ago ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
Don't Miss!
- News மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. டெல்லி நீதிமன்றத்தில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஆஜர்
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Movies சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இந்தியாவின் அதிவேக ரயில் கட்டிமான் எக்ஸ்பிரஸ் பற்றிய சிறப்புத் தகவல்கள்!
மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய நாட்டின் அதிவேக ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 9ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
டெல்லி- ஆக்ரா இடையில் அமைக்கப்பட்டிருக்கும் விசேஷ தண்டவாளம் மற்றும் சிறப்பு பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட வழித்தடத்தில் இந்த அதிவேக ரயில் இயக்கப்பட உள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
சோதனை ஓட்டம்
கட்டிமான் எக்ஸ்பிரஸ் என்று இந்த ரயிலுக்கு பெயரிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு முதல் இந்த வழித்தடத்தில் அதிவேக ரயிலை இயக்கி சோதனைகள் செய்யப்பட்டு வந்தன. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவித்திருந்த சில குறைகளும் இப்போது நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் இந்த வழித்தடத்தில் முறைப்படி அதிவேக ரயில் இயக்கப்பட உள்ளது.
விசேஷ ரயில்பெட்டிகள்
கபூர்தலாவிலுள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில், இந்தியாவின் அதிவேக ரயிலுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு ரயில் பெட்டி ரூ.2 கோடி முதல் ரூ.2.5 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவை அதிவேகத்தில் செல்வதற்கான விசேஷ பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
பயண நேரம் குறையும்
இறுதிகட்ட சோதனையின்போது டெல்லி- ஆக்ரா இடையிலான 200 கிமீ தூரத்தை இந்த ரயில் 115 நிமிடங்களில் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், டெல்லி- ஆக்ரா இடையிலான பயண நேரம் 30 நிமிடங்கள் வரை குறையும். பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில், வளைவுகளில் தண்டவாளங்களின் வலு கூட்டப்பட்டிருக்கிறது. அத்துடன், தண்டவாளத்தின் பக்கவாட்டில் வேலிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
சக்திவாய்ந்த எஞ்சின்
இந்த ரயிலில் 5400 குதிரைசக்தி திறன் கொண்ட மின்சார எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் மூலமாக அதிகபட்சம் 160 கிமீ வேகம் வரை அந்த ரயில் இயக்கப்படும்.
சிறப்பு வசதிகள்
தீப்பிடிப்பதை தானாக எச்சரிக்கும் கருவி, அவசர கால பிரேக் சிஸ்டம் மற்றும் பயணிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்கான சிறப்பு வசதிகளை இந்த ரயில் கொண்டிருக்கும்.
கட்டணம் அதிகம்
சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களை விட இந்த ரயிலுக்கான பயணக் கட்டணம் 25 சதவீதம் வரை கூடுதலாக இருக்கும்.
-
இந்தியாவுலேயே நல்லா சேல்ஸ் ஆகுற கார் இதெல்லாம்! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா யாரும் வாங்க மாட்டாங்க!
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
-
73 வயதில் நம்மால் எழுந்து நிற்க முடியுமானு கூட தெரியல!! இந்த பாட்டிக்கு வயசு வெறும் நம்பர் தான்!