Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு புல்லட் ரயில்! பயண நேரம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி..
சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருவுக்கு அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படவுள்ளது. இதன் பயண நேரம் உங்களுக்கு நிச்சயமாக ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருவுக்கு அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படவுள்ளது. இதன் பயண நேரம் உங்களுக்கு நிச்சயமாக ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
போக்குவரத்து துறையின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக, பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகம் தற்போது வெகுவாக சுருங்கி விட்டது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிப்பதற்கான நேரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
ஜப்பான், சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில், அதிவேக புல்லட் ரயில்கள் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விட்டன. எனினும் விரைவில் வல்லரசாக உருவெடுக்கும் என நம்பப்படும் இந்தியாவில் தற்போது வரை புல்லட் ரயில் இல்லை.
ஆனால் இந்த குறை விரைவில் நிவர்த்தியாக போகிறது. அதுவும் அதிவேக புல்லட் ரயில் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது என்பது மற்றொரு ஆச்சரியமான செய்தி. ஆம், சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருவுக்கு புல்லட் ரயில் இயக்குவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் சென்னையில் இருந்து மைசூருவுக்கு ரயிலில் பயணம் செய்ய சுமார் 7 மணி நேரம் ஆவதால், பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் முயற்சியில் இந்திய ரயில்வே ஈடுபட்டு வருகிறது. எனவே இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், சென்னை-அரக்கோணம்-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் அதிவேகமான புல்லட் ரயிலை இயக்குவது தொடர்பான மெகா திட்டத்தை, இந்திய ரயில்வே துறையிடம் தற்போது ஜெர்மனி அரசு முன்வைத்துள்ளது.
சென்னை-அரக்கோணம்-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் அதிவேக புல்லட் ரயிலை இயக்கும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆய்வு அறிக்கையை, ரயில்வே போர்டு சேர்மன் அஸ்வனி லோஹனியிடம், ஜெர்மனி நாட்டின் தூதர் மார்ட்டின் நே சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி சென்னை-அரக்கோணம்-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் சுமார் 435 கிலோ மீட்டர் தூரத்திற்கு புல்லட் ரயில் பாதை அமைக்கப்படும். இந்த புல்லட் ரயில் மூலமாக சென்னையில் இருந்து மைசூருவுக்கு வெறும் 2 மணி நேரம் 25 நிமிடங்களில் சென்றடைந்து விட முடியும்.
ஏனெனில் மணிக்கு சுமார் 320 கிலோ மீட்டர் வேகத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும். தற்போது சென்னையில் இருந்து மைசூருவுக்கு ரயிலில் செல்ல 7 மணி நேரம் ஆகிறது. ஆனால் புல்லட் ரயில் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால் பயண நேரம் வெறும் 2 மணி நேரம் 25 நிமிடங்களாக குறைந்து விடும்.
Recommended Video
அதாவது சுமார் 5 மணி நேரத்தை மிச்சம் பிடிக்கலாம். பின்னர் படிப்படியாக பயண நேரம் குறைக்கப்பட்டு கொண்டே வரப்படும். ஜெர்மனி நாட்டு தூதர் அளித்த சாத்தியக்கூறுகள் தொடர்பான அறிக்கை குறித்து ரயில்வே வாரியம் தற்போது தீவிரமாக ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த அதிவேக புல்லட் ரயில் திட்டத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கினால், சென்னை-மைசூரு இடையேயான பயண நேரமானது, வரும் 2030ம் ஆண்டிற்குள் 5 மணி நேரத்திற்கும் மேலாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்.
ஜெர்மனி நாட்டு அரசு அளித்துள்ள சாத்தியக்கூறுகள் தொடர்பான அறிக்கையின்படி, 85 சதவீத ரயில் பாதை, தூண்கள் உதவியுடன் உயரமாக அமைக்கப்படும். அத்துடன் இந்த வழித்தடத்தில் மொத்தம் 11 இடங்களில் குகைகள் அமைக்கப்படும். இதில், புல்லட் ரயில் புகுந்து செல்லும்.
முன்னதாக மும்பை-அகமதாபாத் இடையே ஜப்பான் நாட்டின் உதவியுடன் புல்லட் ரயில் இயக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
எனவே மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதை ஜப்பான் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஆனால் சென்னை-அரக்கோணம்-பெங்களூரு-மைசூரு இடையேயான புல்லட் ரயில் திட்டத்தில் இது போன்ற பிரச்னைகள் எழாது என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெர்மனி தூதர் மார்ட்டின் நே கூறுகையில், ''சென்னை-அரக்கோணம்-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் புல்லட் ரயில் இயக்குவது தொடர்பாக ஆய்வு நடத்தி முடித்துள்ளோம். இதற்கான நிதியை ஜெர்மனி அரசுதான் வழங்கியது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு இந்த திட்டம் நல்ல தீர்வாக இருக்கும். இந்த திட்டத்தின்படி, மிகப்பெரிய அளவில் நிலங்களை கையகப்படுத்தியே ஆக வேண்டும் என்ற தேவை நிச்சயம் இருக்காது. குறைந்த அளவிலான நிலங்களை கையகப்படுத்தினாலே போதுமானதுதான்.
எனவே இதைக்காட்டிலும் வேறு சிறப்பான திட்டம் எதுவும் இருக்க முடியாது'' என்றார். இதுதவிர சென்னை-மும்பை, மும்பை-நாக்பூர், டெல்லி-மும்பை, டெல்லி-கொல்கத்தா வழித்தடங்களில் புல்லட் ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி