Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 6 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டோல்கேட் கட்டணத்தை நீங்கள் ரொக்கமாக செலுத்துபவரா? அப்படியானால் இது உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்...
வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயமாக்கப்படாது எனவும், அதற்கு பதிலாக கால நீட்டிப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதற்கான சுங்க கட்டணத்தை செலுத்துவதற்கு, வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல், அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே வாகன உரிமையாளர்களும் அனைவரும் தற்போது பாஸ்டேக்கை பெற்று வருகின்றனர்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூட வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என தெரிவித்திருந்தார். எனவே இதனை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழலில் பாஸ்டேக் கட்டாயமாக்கப்படுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படலாம் என தெரிகிறது.

இந்த தகவலை அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவு வரும் ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வராது. அதற்கு பதிலாக வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்படலாம்.

அதுவரை சுங்க சாவடிகளில் ரொக்கமாக கட்டணத்தை செலுத்த முடியும். வாகன உரிமையாளர்கள் பலர் இன்னமும் பாஸ்டேக்கிற்கு மாறவில்லை. இதன் காரணமாகவே ஒரு மாத காலத்திற்கு நீட்டிப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இதுபற்றி விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். வாகன உரிமையாளர்கள் மத்தியில் பாஸ்டேக் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.

தற்போதைய நிலையில் 75 முதல் 78 சதவீதம் வரையிலான சுங்க கட்டணம் மட்டுமே பாஸ்டேக் பரிவர்த்தனைகள் மூலமாக செலுத்தப்படுகிறது. எனவே இன்னமும் பலர் சுங்க கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி வருகின்றனர் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். எனவேதான் காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 1ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வர நாளை ஒரு நாள் மட்டுமே இடைவெளி இருப்பதால், காலக்கெடு நீட்டிப்படுமா? அல்லது நீட்டிக்கப்படாதா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே பாஸ்டேக் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் வாகன ஓட்டிகளின் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும். அத்துடன் பாஸ்டேக் மூலமாக காகித பயன்பாடும் குறைக்கப்படும். கொரோனா வைரஸ் பரவி வரும் தற்போதைய காலகட்டத்தில், பாஸ்டேக் பயன்படுத்தினால் சமூக இடைவெளியை கடைபிடிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.