Just In
- 6 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 25 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சத்தமே இல்லாம வேலைய முடிச்சுட்டாங்க... மத்திய அரசு செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
மத்திய அரசு தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஒரு நாட்டின் பொருளாதார ரீதியிலான வளர்ச்சிக்கு தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் அவசியம். சரக்குகளை சுமந்து செல்லும் வாகனங்களின் விரைவான போக்குவரத்திற்கு உதவும் தேசிய நெடுஞ்சாலைகள், நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. எனவே இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்கரியும், புதிய தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதிலும், ஏற்கனவே உள்ள சாலைகளின் தரத்தை உயர்த்துவதிலும் ஆர்வத்துடன் உள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதில் அரசு எவ்வளவு தீவிரமாக உள்ளது? உணர்த்தும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஐந்து மாத கால கட்டத்தில், மொத்தம் 3,181 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைத்துள்ளதாக அரசு தற்போது அறிவித்துள்ளது. ஆனால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததோ வெறும் 2,771 கிலோ மீட்டர்களுக்கு மட்டும்தான். அதாவது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அரசு கடந்துள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக, உலகமே மிக சவாலான சூழலை எதிர்கொண்டு வருகிறது. ஊரடங்கு, பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளை கடந்து தேசிய நெடுஞ்சாலைகளை அரசு கட்டமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாலைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.
அத்துடன் நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளின் நீளமானது, கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டு மடங்கிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளையும் விரைந்து முடிப்பதற்கு தேவையான நடவடிக்கைளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் (MoRTH-Ministry of Road Transport and Highways) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதில் கடந்த வாரம் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் கடந்துள்ளது.
கடந்த ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில், 3,181 கிலோ மீட்டர்கள் நீளத்திற்கான தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக இந்த காலகட்டத்திற்கு என நிர்ணயம் செய்யப்பட்டிருந்த 2,771 கிலோ மீட்டர்கள் இலக்கு கடக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 2,104 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள் மாநிலங்களின் பொதுப்பணித்துறையால் (PWDs-Public Works Department) கட்டமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 879 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் (NHAI- National Highways Authority of India) கட்டமைக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 198 கிலோ மீட்டர்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் மூலமாக (NHIDCL-National Highways and Infrastructure Development Corporation Ltd) முடிக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு பணிகளை வேகப்படுத்தி வரும் அதே நேரத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துக்களை குறைக்கவும் அரசு முயன்று வருகிறது.
Note: Images used are for representational purpose only.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!