Just In
- 30 min ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 1 hr ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 2 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
- 2 hrs ago என்ன மேடம்... ஹர்பஜன் சிங் மாதிரி இருக்கீங்க!! விசித்திரமான கெட்-அப்பில் ஸ்கூட்டரில் சென்ற பெண் - வீடியோ!
Don't Miss!
- News பம்பரம் இல்லை! துரை வைகோ போட்டியிடுவது தீப்பெட்டியா? கேஸ் சிலிண்டர் சின்னமா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கார்களுக்கு அரசு புது கட்டுப்பாடு; கலக்கத்தில் கார் தயாரிப்பு நிறுவனங்கள்
பெட்ரோல் செலவை கட்டுப்படுத்தவும், எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு புதிய சட்டமாற்றத்தை கொண்டு வரவுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்தியாவில் பெரும்பாலான வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகன
பெட்ரோல் செலவை கட்டுப்படுத்தவும், எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு புதிய சட்டமாற்றத்தை கொண்டு வரவுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்தியாவில் பெரும்பாலான வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாறும்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு புகை வெளியிடும் அளவை கட்டுப்படுத்தவும் பெட்ரோல் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், இந்திய அரசு கபே (CAFE) என்ற கட்டுப்பாட்டு விதியை விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாட்டு வதிகளின் கீழ் செயல்படும் படியான வாகனங்களை மட்டுமே அந்நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும். இந்த கட்டுப்பாட்டு விதியை மீறிய வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய அரசு அனுமதிக்காது.
சமீபகாலமாக பெட்ரோல் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் பெட்ரோலுக்கான தேவை அதிகரிப்பது தான். இந்தியாவில் உள்ள மக்கள் அதிகளவில் வாகனங்களை பயன்படுத்துவதால் பெட்ரோலுக்கான தேவையும் அதிகமாகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு எதுவும் பெரிய அளவில் பலன் தரவில்லை.
இந்நிலையில் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களின் கபே கட்டுபாட்டை இன்னும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன் படி இதுவரை கிலோ மீட்டருக்கு 108 கிராமாக வெளியாகி வந்த அடுத்தாக 104 கிராமாக குறைக்க திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே அரசு அடுத்தாண்டு கொண்டு வரவுள்ள பிஎஸ் 6 எமிஷன் கட்டுப்பாட்டில் டீசல் கார்களை தயாரிக்க மிகவும் சிரமம் என்பதால் கார்களில் டீசல் வேரியன்டையே கைவிட பல கார் நிறுவனங்கள் தயாராகிவிட்டனர்.
தற்போது அரசு நடத்திவரும் இந்த ஆலோசனை நடத்தி வரும் அமலுக்கு வந்தால் வாகனங்களில் மைலேஜ்கள் இதனால் அதிகரிக்கும் ஆனால் அதே நேரத்தில் வாகனங்களின் பெர்மாமென்ஸ் குறையும். அதே நேரத்தில் அந்த கட்டுப்பாட்டுடன் வாகனங்கள் தயாரிப்பதும் மிகவும் கடினம் என அந்நிறுவனங்கள் கூறுகின்றனர்.
இத்திட்டத்தை வரும் 2022 அல்லது 2023 ம் ஆண்டுகளில் செயல்படுத்த அரசு ஆலோசனை நடத்துகிறது. ஆனால் அதற்கு முன்னதாக தாங்கள் தயாரிக்கும் கார்களில் எலெகட்ரிக் வெர்ஷனை தயாரித்து மக்களிடம் எடுத்து செல்ல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வதில் இருக்கும் பெரிய சவாலே போதுமான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லாதது தான் பெங்களூரு போன்ற நகரங்களில் மட்டும் தற்போது எலெக்ட்ரிக் கார் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை எவ்வாறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சமாளிக்க போகிறது என்பதை நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதன் மூலம் வரும் காலத்தில் எலெக்ட்ரிக் கார் மிக அதிக அளவில் பயன்பாட்டிற்கு வரும் அப்படியாக வரும் பட்சத்தில் இந்தியாவில் பெட்ரோலுக்கான தேவை குறைந்து விடும். இதனால் நாம் வெளிநாடுகளுக்கு வாரி வழங்கும் பணத்தை குறைத்து அதன்மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்காக செலவிட முடியும்.
மேலும் பெட்ரோல் கார்களை விட எலெக்ட்ரிக் கார்கள் தான் சிறந்த மைலேஜை தரும், அதிக சார்ஜிங் ஸ்டேஷன் என்ற இலக்கை நாம் எட்டிவிட்டால் இந்தியாவில் எதிர்காலத்தில் எலெகட்ரிக் வாகனங்களின் ஆட்சி தான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்