பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டி-க்கு கீழ் கொண்டுவரப்படுமா..?? கலக்கத்தில் இந்தியா..!!
பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டி-க்கு கீழ் கொண்டுவரப்படுமா..?? கலக்கத்தில் இந்தியா..!!
இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஜிஎஸ்டி வரி மதிப்பால் அத்தியாவசப் பொருட்களில் இருந்து ஆடம்பர பொருட்கள் வரை அனைத்திலும் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அத்தியாவசமானதும் ஆடம்பரமானதுமான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி-க்கு கீழ் கொண்டு வரப்படவில்லை. இது ஒட்டுமொத்த் இந்தியாவில் கேள்வியாக உள்ளது.

இது ஒரு பக்கம் ஆறுதலாக இருந்தாலும், வருங்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் உட்பட எரிபொருட்களின் விலை ஜிஎஸ்டி-க்கு கொண்டு வரப்படுமோ என்ற அச்சமும் இந்தியாவில் பல மக்கள் மத்தியில் நிலவுகிறது.
இதற்கு ஆம் வாய்ப்புள்ளது என்பது போன்ற பதிலை மத்திய சிவில் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்துள்ளார்.

ஆனால் விமான எரிபொருள் உட்பட எரிவாயு அனைத்தும் ஜிஎஸ்டி-க்கு கீழ் கொண்டு வர மத்திய அரசு கலந்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ஜிஎஸ்டிக்கு கீழ் விமான எரிபொருள் உட்பட பெட்ரோலிய பொருட்கள் வந்தால் அதில் பயனில்லை என மத்தியரசு எண்ணுவதாக அசோக் கஜபதி ராஜூ கூறுகிறார்.

ஒருவேளை ஜிஎஸ்டிக்கு கீழ் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு வர மத்திய அரசு அலோசித்தாலும், அதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்பது அவரது கருத்தாக உள்ளது.

ஆட்டோமொபைல் துறையை பொறுத்த வரை ஜிஎஸ்டி பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஹைஃபிரிட் மற்றும் போக்குவரத்து ஊர்திகள் பல பெரிய விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன.

இந்த வரி விதிப்பை பின் வாங்குமாறு பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டுக்கொண்ட போதிலும், மத்திய அரசு வாகன கொள்கைக்கான ஜிஎஸ்டி மதிப்பில் எந்த திருத்தமும் மேற்கொள்ளவில்லை.

மாற்றத்தை விரும்பி தான் இந்தியாவில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவிக்கிறார்.
ஆனால் சுற்றுச்சூழலை பாதிக்காத ஹைபிரிட் கார்களுக்கு ஏன் இத்தனை சதவீத வரி விதிப்பு என்பது தான் புரியாத புதிராக உள்ளது.


Click it and Unblock the Notifications








