Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு
இந்தியாவில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தற்போதைக்கு பெட்ரோல், டீசலுக்கு
இந்தியாவில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தற்போதைக்கு பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி என்பது சாத்தியமே இல்லை என நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மத்திய அரசு ஒரு தேசம் ஒரு வரி என்ற கொள்கையில் ஜிஎஸ்டி வரியை கடந்தாண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. நாட்டில் உள்ள பல்வேறு வரிகளை ஒன்றினைத்து 5 ஸ்லாப்களாக பிரித்து அதன் கீழ் அனைத்து வகையான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வகைப்படுத்தப்பட்டு அதற்கு வரி விதிக்கப்படுகிறது.
இந்த வகைப்படுத்தல் மற்றும் ஜிஎஸ்டி விவகாரங்களை கட்டமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கவுன்சிலில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசின் பிரதிநிதிகளும் உள்ளடக்கம்.
இந்நிலையில் இந்தியாவில் சில பொருட்களுக்கு மட்டும் ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில் பெட்ரோல்,டீசல், நேச்சுரல் கேஸ், ஜெட் பியூயல், குரூட் ஆயில், ஆகியவையும் அடங்கும்.
தற்போது இந்தியாவில் விற்பனையாகும் பெட்ரோலுக்கு மத்திய அரசு ரூ 19.48 மற்றும் டீசலுக்கு 15.33 என வரி வசூலிக்கிறது. மாநில அரசுகள் அதற்கு மேல் வாட் வரியை வசூலிக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமாக வரியை வசூலிக்கின்றனர்.
குறைந்த பட்சமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பெட்ரோல் மற்றும் 6 சதவீத வரியை வாட் வரியாக வசூலிக்கிறது, அதிகபட்சமாக பெட்ரோலுக்கு மஹாராட்டிராவில் 39.12 சதவீத வரியும், டீசலுக்கு அதிகபட்சமாக தெலுங்கானாவில் 26 சதவீத வரியும் வசூலிக்கப்படுகிறது.
தற்போது நாம் பெட்ரோலுக்காக வழங்கப்படும் விலையில் பெட்ரோலில் 45-50 சதவீதமான பணமும், டீசலில் 35-40 சதவீதமான பணமும் வரியாக மத்திய மாநில அரசுகள் வசூலிக்கிறது.
தற்போது ஜிஎஸ்டியில் அதிகபட்சமாக உள்ள 28 சதவீத வரியை பெட்ரோலுக்கு விதித்தால் கூட பெட்ரோல் தற்போது விற்கப்படும் விலையில் இருந்து மிகவும் குறையும்.
ஆனால் இதன் மூலம் இருஅரசுகளும் பெரிய அளவு நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆனால் மக்கள் மத்தியிலும் சில அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து வந்த தகவலில் கடந்த 4ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்த விவகாரத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதற்கு அனைத்து மாநில தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
மத்திய அரசு தற்போது பெட்ரோல் மற்றும் டீசலை மட்டுமாவது ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. ஆனால் அதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தால் மத்திய அரசு ஆண்டிற்கு சுமார் 20 ஆயிரம் கோடி அளவில் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெட்ரோலிய பொருட்கள் மூலம் மத்திய அரசிற்கு கடந்த 2014-2015ம் ஆண்டில் ரூ 99,184 கோடியாக இருந்த வருவாய் 2017-2018ல் 2,29,019 கோடியாக உயர்ந்தது. அதே போல மாநில அரசுகளுக்கு 2014-15ல் மொத்தமாக ரூ 1,37,157 கோடியாக கிடைத்த வருவாய், 2017-18 ல் 1,84,091 கோடியாக உயர்ந்துள்ளது.
தற்போது நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவலின் படி பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு ஆர்வம் காட்டி வந்தாலும் மாநில அரசுகள் அதை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பொட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது மூலம் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய மாநில அரசுகள் முயற்சி எடுக்காத வரையில் பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருவது கஷ்டம் தான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!