Just In
- 2 hrs ago ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- 2 hrs ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 3 hrs ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 6 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
Don't Miss!
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Movies Raayan: இசைப்புயல் இசையமைக்க.. நடனப்புயல் ஸ்டெப்ஸ் போட.. வெளியாக இருக்கு ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ரவீந்திர ஜடேஜாவின் காரை நிறுத்திய பெண் போலீஸ்... அதன்பின் என்ன நடந்தது தெரியுமா? பரபரப்பு சம்பவம்
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் காரை பெண் காவலர் நிறுத்திய பின்னர் பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையிலும், ஊரடங்கு உத்தரவில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளையும் வழங்கி கொண்டே வருகின்றன. எனவே சாலைகளில் வாகன போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
ஆனால் வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனம் என்றாலும் சரி அல்லது கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் என்றாலும் சரி, அனைத்து வகையான வாகனங்களில் பயணம் செய்பவர்களும் தற்போது கட்டாயமாக முக கவசம் அணிந்தாக வேண்டும்.
இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். எனினும் கார்களில் தனியாக பயணிக்கும் ஒரு சிலர் முக கவசம் அணிவதில்லை. இதனால் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, டெல்லி காவல் துறையினர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். இதன்படி கார்களில் தனியாக பயணம் செய்பவர்களும் முக கவசம் அணிவது கட்டாயம்.
அதேபோல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தலை கவசம் அணிந்து அதன் மேல் முக கவசம் அணிய வேண்டும். இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முக கவசம் தொடர்பான சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ராஜ்கோட் நகரில் உள்ள கிஷன்பாரா சௌக் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தார். காரில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும் உடனிருந்தார். அப்போது அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் சோனல் கோசாய் அவரது காரை நிறுத்தியுள்ளார்.
முக கவசம் அணியாத காரணத்திற்காக ரவீந்திர ஜடேஜாவின் காரை தலைமை காவலர் சோனல் கோசாய் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்காக அபராதம் செலுத்துமாறு தலைமை காவலர் சோனால் கோசாய் கூறியதாகவும், அத்துடன் ரவீந்திர ஜடேஜாவின் ஓட்டுனர் உரிமத்தை காட்டும்படி அவர் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அந்த பெண் காவலர் தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என ரவீந்திர ஜடேஜா காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதே சமயம் ரவீந்திர ஜடேஜாவின் காரை தடுத்து நிறுத்தியதாக கூறப்படும் பெண் காவலர் மன அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
முன்னதாக அந்த பெண் காவலருக்கும், ரவீந்திர ஜடேஜாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காவல் துறை துணை ஆணையர் மனோகர்சிங் ஜடேஜா கூறுகையில், ''முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக ரவீந்திர ஜடேஜாவும், பெண் காவலரும் ஒருவருக்கொருவர் புகார் செய்துள்ளனர்.
ஆனால் இரு தரப்பில் இருந்தும் இதுவரை முறையாக புகார் எதுவும் வரவில்லை. எனக்கு கிடைத்த தகவல்படி ரவீந்திர ஜடேஜா முக கவசம் அணிந்திருந்தார். ஆனால் அவரது மனைவி முக கவசம் அணிந்திருந்தாரா? அல்லது இல்லையா? என்பது பற்றி நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Note: Images used are for representational purpose only.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...