ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த 50 சதவிகிதம் பேர் தோல்வி: புதிய வழிமுறையால் விண்ணப்பதாரர்கள் அவதி

புதிய வழிமுறையை நடைமுறைக்கு கொண்டு வந்ததால், ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பத்திருந்த 50 சதவிகிதம் தோல்வியைச் சந்தித்துள்ளனர். இதுகுறித்த கூடதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த 50 சதவிகிதம் பேர் தோல்வி... புதிய வழிமுறையால் விண்ணப்பதாரர்கள் அவதி!

யார் வேண்டுமானாலும் எந்த மாதிரியான வாகனங்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அதனை சாலைகளில் வைத்து இயக்க, அவர்கள் ஓட்டுநர் உரிமைத்தைப் பெற்றிருப்பது அவசியம். இது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும்.

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த 50 சதவிகிதம் பேர் தோல்வி... புதிய வழிமுறையால் விண்ணப்பதாரர்கள் அவதி!

அவ்வாறு, ஓட்டுநர் உரிமத்தைப் பெற வேண்டுமானால், விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட சில விதிமுறைகளைக் கடைபிடித்து, அதில் வெற்றிப் பெற்றால் மட்டுமே அவர்களால் ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியும். மேலும், அதனை பெற்றால் மட்டுமே அவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு தகுதியானவர்கள் ஆவர்.

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த 50 சதவிகிதம் பேர் தோல்வி... புதிய வழிமுறையால் விண்ணப்பதாரர்கள் அவதி!

உலக நாடுகளில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு பல்வேறு கடுமையான வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவிலோ மிக எளிமையான முறையே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இதில் பெரும்பாலும், ஒரு சிலர், ஓட்டுநர் உரிமத்திற்காக வைக்கப்படும் தேர்வில் வெற்றிகூட பெறாமல் ஓட்டுநர் உரிமைத்தைப் பெற்று வருகின்றனர். சிலர், ஆர்டிஓ அலுவலகம் பக்கம்கூட செல்லாமல், லஞ்சத்தை வழங்கி ஓட்டுநர் உரிமத்தைப் பெறுகின்றனர்.

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த 50 சதவிகிதம் பேர் தோல்வி... புதிய வழிமுறையால் விண்ணப்பதாரர்கள் அவதி!

இதுபோன்ற முறைகேடுகளை முற்றிலும் தவிர்க்கும் விதமாக தலைநகர் டெல்லியில், தானியங்கி ஓட்டுநர் சோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கூடமானது, முழுக்க முழுக்க மனிதர்களின் உதவியின்றி தானாக இயங்கக்கூடியது.

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த 50 சதவிகிதம் பேர் தோல்வி... புதிய வழிமுறையால் விண்ணப்பதாரர்கள் அவதி!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த கூடமானது, விண்ணப்பதாரர்களின் செயல்பாட்டை தானாக கண்கானித்து, அவர்கள் பயிற்சியில் தேர்ச்சி பெற்றார்களா...? இல்லையா...? என்பதனை தானியங்கி திறன்மூலம் வழங்கிவிடும். இத்தகைய சிறப்பான சோதனைக் கூடம் நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில்தான் தொடங்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த 50 சதவிகிதம் பேர் தோல்வி... புதிய வழிமுறையால் விண்ணப்பதாரர்கள் அவதி!

இதனை, முதற்கட்டமாக டெல்லி மயூர் விஹார் பகுதியில் துவங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, புராரி மற்றும் சர்ஜ்மல் விஹார் ஆகிய பகுதிகளிலும் அமைக்கப்பட்டது. இந்த தானியங்கி ஓட்டுநர் சோதனை மையம், விண்ணப்பதாரர்களுக்கு கடுமையான சோதனைகளை அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இதில் தேர்வு காணும் பெரும்பாலனோர் கடுமையான சவாலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த 50 சதவிகிதம் பேர் தோல்வி... புதிய வழிமுறையால் விண்ணப்பதாரர்கள் அவதி!

இந்நிலையில், இதுவரை இந்த சோதனைக் கூடத்தில் தேர்வைச் சந்தித்த 48.9 சதவிகிதம் பேர் தோல்வியைச் சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த 50 சதவிகிதம் பேர் தோல்வி... புதிய வழிமுறையால் விண்ணப்பதாரர்கள் அவதி!

கடந்த மார்ச் மாதத்தில் இருந்துதான் டெல்லியின் மயூர் விஹார், சூரஜ்மல் விஹார் மற்றும் புராரூ ஆகிய பகுதிகளில் இந்த தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், பயன்பாட்டுக்கு வந்த 5 மாதங்களே ஆனநிலையில், கிட்டதட்ட பாதியளவு விண்ணப்பதாரர்கள் தோல்வியுற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த 50 சதவிகிதம் பேர் தோல்வி... புதிய வழிமுறையால் விண்ணப்பதாரர்கள் அவதி!

முன்னதாக, இதுபோன்று தானியங்கி தேர்ச்சி மையம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு வெறும் 16.2 சதவிகிதம் பேர் மட்டுமே தோல்வியடைந்து வந்தனர். ஆனால், தற்போது கிடைத்திருக்கும் முடிவுகளோ பெறும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த 50 சதவிகிதம் பேர் தோல்வி... புதிய வழிமுறையால் விண்ணப்பதாரர்கள் அவதி!

இந்த தானியங்கி சோதனைக் கூடங்களை, இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி நிறுவனம்தான் பராமரித்து வருகின்றது. இங்கு மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் அனைத்தும், முழுக்க முழுக்க கணினிகளால் கண்கானிக்கப்படுகின்றது.

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த 50 சதவிகிதம் பேர் தோல்வி... புதிய வழிமுறையால் விண்ணப்பதாரர்கள் அவதி!

மேலும், விண்ணப்பதாரர்களைக் கண்காணிக்க சென்சார்கள் மற்றும் உயர் திறன் கொண்ட கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம், வாகன ஓட்டிகளின் ஒவ்வொரு சிறு நகர்வும் மிகத்துள்ளியமாக ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றது. இத்துடன், வாகன ஓட்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில், 24 விதமான பரிசோதனை மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை, விண்ணப்பதாரர், ஓட்டுநர் உரிமம்பெற தகுதியானவரா என சோதிக்க பயன்படுகின்றது.

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த 50 சதவிகிதம் பேர் தோல்வி... புதிய வழிமுறையால் விண்ணப்பதாரர்கள் அவதி!

இந்த தானியங்கி ஓட்டுநர் பரிசோதனை மையம் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தின் விதிமுறைக்கு உட்படுத்தி தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் வாகன சட்டம் விதிக்கும் 20 விதமான, ஓட்டுநர்களுக்கு தேவையான அத்தியாவசிய திறன்களை கண்டறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த 50 சதவிகிதம் பேர் தோல்வி... புதிய வழிமுறையால் விண்ணப்பதாரர்கள் அவதி!

இதுகுறித்த வீடியோவை, மோட்டோடாவுண் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. இதனை நீங்கள் கீழே காணலாம்.

மேலும், இந்த சோதனைக் கூடத்தை எவராலும் ஏமாற்ற முடியாது என கூறப்படுகின்றது. அதேசமயம், இந்த சோதனைக் கூடம் பயோ மெட்ரிக் மற்றும் விண்ணப்பதாரர்கள் சில குறிப்பிட்ட தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை மையத்தில், வாகன ஓட்டிகளுக்கு தேவையான எஸ் வடிவில் ரிவர்ஸ் செய்தல், 8 போடுதல், டிராஃபிக் ஜங்க்சன், பேரல்லல் பார்க்கிங் மற்றும் கார்டியன்ட் டிரைவிங் உள்ளிட்ட சோதனைகள் வழங்கப்படுகின்றன. இதில், ஏதேனும் ஒன்றில் விண்ணப்பதாரர் தோல்வியுற்றால், அவர் மீண்டும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்குச் சென்று, மீண்டும் பயிற்சியைப் பெற்று புதிதாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 10, 2019, 11:42 [IST]
English summary
Half Of Applicants Fail Driving Tests In Delhi. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+