Just In
- 50 min ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 1 hr ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 2 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 3 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- News அப்பாடா..ஒரு வழியா முடிஞ்சது! ரிலாக்ஸ் ஆகும் தலைவர்கள்! அடுத்து ’இந்த’ ப்ளான் தான்! இனி ரொம்ப பிசி.!
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த 50 சதவிகிதம் பேர் தோல்வி: புதிய வழிமுறையால் விண்ணப்பதாரர்கள் அவதி
புதிய வழிமுறையை நடைமுறைக்கு கொண்டு வந்ததால், ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பத்திருந்த 50 சதவிகிதம் தோல்வியைச் சந்தித்துள்ளனர். இதுகுறித்த கூடதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
யார் வேண்டுமானாலும் எந்த மாதிரியான வாகனங்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அதனை சாலைகளில் வைத்து இயக்க, அவர்கள் ஓட்டுநர் உரிமைத்தைப் பெற்றிருப்பது அவசியம். இது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும்.
அவ்வாறு, ஓட்டுநர் உரிமத்தைப் பெற வேண்டுமானால், விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட சில விதிமுறைகளைக் கடைபிடித்து, அதில் வெற்றிப் பெற்றால் மட்டுமே அவர்களால் ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியும். மேலும், அதனை பெற்றால் மட்டுமே அவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு தகுதியானவர்கள் ஆவர்.
உலக நாடுகளில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு பல்வேறு கடுமையான வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவிலோ மிக எளிமையான முறையே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
இதில் பெரும்பாலும், ஒரு சிலர், ஓட்டுநர் உரிமத்திற்காக வைக்கப்படும் தேர்வில் வெற்றிகூட பெறாமல் ஓட்டுநர் உரிமைத்தைப் பெற்று வருகின்றனர். சிலர், ஆர்டிஓ அலுவலகம் பக்கம்கூட செல்லாமல், லஞ்சத்தை வழங்கி ஓட்டுநர் உரிமத்தைப் பெறுகின்றனர்.
இதுபோன்ற முறைகேடுகளை முற்றிலும் தவிர்க்கும் விதமாக தலைநகர் டெல்லியில், தானியங்கி ஓட்டுநர் சோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கூடமானது, முழுக்க முழுக்க மனிதர்களின் உதவியின்றி தானாக இயங்கக்கூடியது.
இந்த கூடமானது, விண்ணப்பதாரர்களின் செயல்பாட்டை தானாக கண்கானித்து, அவர்கள் பயிற்சியில் தேர்ச்சி பெற்றார்களா...? இல்லையா...? என்பதனை தானியங்கி திறன்மூலம் வழங்கிவிடும். இத்தகைய சிறப்பான சோதனைக் கூடம் நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில்தான் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை, முதற்கட்டமாக டெல்லி மயூர் விஹார் பகுதியில் துவங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, புராரி மற்றும் சர்ஜ்மல் விஹார் ஆகிய பகுதிகளிலும் அமைக்கப்பட்டது. இந்த தானியங்கி ஓட்டுநர் சோதனை மையம், விண்ணப்பதாரர்களுக்கு கடுமையான சோதனைகளை அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இதில் தேர்வு காணும் பெரும்பாலனோர் கடுமையான சவாலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரை இந்த சோதனைக் கூடத்தில் தேர்வைச் சந்தித்த 48.9 சதவிகிதம் பேர் தோல்வியைச் சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்துதான் டெல்லியின் மயூர் விஹார், சூரஜ்மல் விஹார் மற்றும் புராரூ ஆகிய பகுதிகளில் இந்த தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், பயன்பாட்டுக்கு வந்த 5 மாதங்களே ஆனநிலையில், கிட்டதட்ட பாதியளவு விண்ணப்பதாரர்கள் தோல்வியுற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இதுபோன்று தானியங்கி தேர்ச்சி மையம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு வெறும் 16.2 சதவிகிதம் பேர் மட்டுமே தோல்வியடைந்து வந்தனர். ஆனால், தற்போது கிடைத்திருக்கும் முடிவுகளோ பெறும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
இந்த தானியங்கி சோதனைக் கூடங்களை, இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி நிறுவனம்தான் பராமரித்து வருகின்றது. இங்கு மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் அனைத்தும், முழுக்க முழுக்க கணினிகளால் கண்கானிக்கப்படுகின்றது.
மேலும், விண்ணப்பதாரர்களைக் கண்காணிக்க சென்சார்கள் மற்றும் உயர் திறன் கொண்ட கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம், வாகன ஓட்டிகளின் ஒவ்வொரு சிறு நகர்வும் மிகத்துள்ளியமாக ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றது. இத்துடன், வாகன ஓட்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில், 24 விதமான பரிசோதனை மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை, விண்ணப்பதாரர், ஓட்டுநர் உரிமம்பெற தகுதியானவரா என சோதிக்க பயன்படுகின்றது.
இந்த தானியங்கி ஓட்டுநர் பரிசோதனை மையம் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தின் விதிமுறைக்கு உட்படுத்தி தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் வாகன சட்டம் விதிக்கும் 20 விதமான, ஓட்டுநர்களுக்கு தேவையான அத்தியாவசிய திறன்களை கண்டறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வீடியோவை, மோட்டோடாவுண் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. இதனை நீங்கள் கீழே காணலாம்.
மேலும், இந்த சோதனைக் கூடத்தை எவராலும் ஏமாற்ற முடியாது என கூறப்படுகின்றது. அதேசமயம், இந்த சோதனைக் கூடம் பயோ மெட்ரிக் மற்றும் விண்ணப்பதாரர்கள் சில குறிப்பிட்ட தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனை மையத்தில், வாகன ஓட்டிகளுக்கு தேவையான எஸ் வடிவில் ரிவர்ஸ் செய்தல், 8 போடுதல், டிராஃபிக் ஜங்க்சன், பேரல்லல் பார்க்கிங் மற்றும் கார்டியன்ட் டிரைவிங் உள்ளிட்ட சோதனைகள் வழங்கப்படுகின்றன. இதில், ஏதேனும் ஒன்றில் விண்ணப்பதாரர் தோல்வியுற்றால், அவர் மீண்டும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்குச் சென்று, மீண்டும் பயிற்சியைப் பெற்று புதிதாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!