ஹெல்மெட் போடாத பைக் ஓட்டியை பேஸ்புக்கில் கலாய்த்த ஐதராபாத் போலீஸ்..!
ஐதராபாத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற பைக் ஓட்டியின் படத்தை ஐதராபாத் போலீசார் பேஸ்புக் பக்கத்தில் போட்டு அவரை கலாய்த்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
ஐதராபாத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற பைக் ஓட்டியின் படத்தை ஐதராபாத் போலீசார் பேஸ்புக் பக்கத்தில் போட்டு அவரை கலாய்த்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

இந்தியாவில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணிப்பது என்பது மிக சாதாரணமாக உள்ளது. மக்கள் மத்தியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு இன்னும் பெரிதளவு ஏற்படவில்லை.

இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் ஹெல்மெட் போடாதவர்களுக்கு போலீசார் அபாரதம் விதித்தும் பெரிதாக பலனளிக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு நடந்துகொண்டே தான் இருக்கிறது.

மக்கள் சமூகவலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் அதிலும் அரசு ஹெல்மெட் குறித்து வழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஹெல்மெட் போடாமல் பைக்கில் சென்ற வாலிபரின் படத்தை போட்டு அவரை கலாய்த்த சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு சிக்னலில் தனது பல்சர் பைக்கில் ஒரு வாலிபர் ஹெல்மெட் அணியாமல் நின்று கொண்டிருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.

அவரது பைக்கில் "NO HELMET I DIE LIKE A REAL MAN" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. அதாவது ஹெல்மெட் அணியமாட்டேன் உண்மையான மனிதனாக சாக விரும்புகிறேன் என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து ஹைதராபாத் டிராபிக் போலீஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் அந்த போட்டோவை போட்டு கலாய்த்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் நாங்கள் உங்களை சாக விடமாட்டோம். நீங்கள் உண்மையான மனிதாக வாழ விரும்புகிறோம். பைக் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து ஓட்டுங்கள் என பதிவிட்டுள்ளனர். இந்த பதிவை நீங்கள் கீழே காணலாம்.
மேலும் இந்த பைக்கில் உள்ள நம்பரை வைத்து போலீசாரிடம் உள்ள போர்ட்டல் மூலம் இந்த பைக்கின் சொந்தகாரர் கிருஷ்ணாரெட்டி என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். அந்த ஸ்கிரின் ஷாட்டும் இப்பதிவில் இடம்பெற்றுள்ளது.

இந்த பதிவு தற்போது தெலுங்கானா மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.ஆனால் இந்த நபருக்கு போலீசார் அபராதம் விதித்தார்களா இல்லையா என்பது குறித்த தகவல்கள் இல்லை. எனினும் இதன் மூலம் போலீசார் சமூக வலைதளத்தில் விழிப்புணர்வை ஏற்பட்டுத்தியுள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் சுமார் 50,000 பேர் டூவிலர் விபத்துக்களில் மரணமடைந்துள்ளதாகவும் அதில் பலர் விபத்தின் போது ஹெல்மெட் அணியாததாலேயே பலியானதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் பல வித்தியாசமான முறைகளில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்வது பாராட்டிற்குரிய விஷயம் தான். ஆனால் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை இன்னும் வேகமாக மக்கள் மத்தியில் கொண்டு போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மேலும் சிலர் தரமில்லாத குறைந்த விலை ஹெல்மெட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். அதுவும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடும் அதனால் ஐஎஸ்ஐ தரம் வாய்ந்த ஹெல்மெட்டை பயன்படுத்தவும் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
Picture credit: Hyderabad Traffic Police
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications