Just In
- 5 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 5 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 5 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 10 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
குழந்தைகள் முன்னிலையில் பாஜக தலைவர் செய்த செயலால் அதிர்ச்சி... வெளுத்து வாங்கிய போலீசார்! வீடியோ!!
குழந்தைகள், பொதுமக்கள் முன்னிலையில் பாஜக தலைவர் செய்த செயலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவர் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க தவறுவதால், இந்திய சாலைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான விபத்துக்கள் அரங்கேறி கொண்டுள்ளன. இதில், ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். பலர் கை, கால்களை இழந்து வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு கொண்டுள்ளனர். எனவே சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற மிக தீவிரமாக முயன்று வருகிறார். மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அபராதம் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நம்புகிறது. இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்பது மத்திய அரசின் எண்ணமாக உள்ளது.
மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா பாஜக அரசின் கடந்த ஆட்சி காலத்திலேயே கொண்டு வரப்பட்டது. ஆனால் அப்போது மக்களவையில் மட்டுமே அது நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக மத்திய அரசின் பதவிக்காலம் முடிந்து விட்டது. எனவே மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா தகுதியிழந்தது.
எனினும் அதன்பின் நடைபெற்ற தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்ற ஆட்சியை பிடித்ததால், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீண்டும் அறிமுகம் செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இம்மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டும் விட்டது. ஆனால் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா இம்முறையும் மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
மாநிலங்களவையில் நிறைவேறிய பிறகு, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள புதிய சட்டங்கள் இந்தியாவில் அமலுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வைக்க மத்திய அரசு மிக தீவிரமாக முயன்று வரும் சூழலில், பாஜக தலைவர் ஒருவரின் செயல் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. இதில், அரவிந்த் சிங்கும் ஒருவர். அரவிந்த் சிங் உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த பாஜக தலைவர். இவர் சமீபத்தில் இரு சக்கர வாகனத்தில் தனது குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் ஹெல்மெட் அணியவில்லை.
இந்த சூழலில் மொராபாத்தில் உள்ள சிவில் லைன் ஏரியாவில் அவர் வந்து கொண்டிருந்தபோது, போலீசார் அங்கு வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அரவிந்த் சிங்கின் பைக்கை நிறுத்தி, ஹெல்மெட் அணியாதது குறித்து கேள்வி எழுப்பினர். விதிமுறைப்படி அரவிந்த் சிங் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். ஆனால் அவர் இந்த விதிமுறையை மீறியிருந்தார்.
அத்துடன் அவரது பைக்கின் நம்பர் பிளேட் பாஜக கட்சி கொடியின் நிறத்தில் இருந்தது. பாஜக சின்னமான தாமரையும் நம்பர் பிளேட்டில் இடம்பெற்றிருந்தது. இதுவும் கூட விதிமுறை மீறல்தான். வாகனங்களின் நம்பர் பிளேட் தெளிவாக இருக்க வேண்டும். அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா நடிகர்களின் படங்கள் போன்றவை இடம்பெற கூடாது. அரசியல் கட்சிகளின் சின்னமும் இருக்க கூடாது.
இது தொடர்பான விதிமுறைகள் பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இந்த விதிமுறையையும் சேர்த்தே அரவிந்த் சிங் மீறியிருந்தார். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது, ''என்னிடம் ஹெல்மெட் இல்லைதான். எனவே அபராதம் விதித்து கொள்ளுங்கள்'' என அரவிந்த் சிங் கூறியதாக தெரிகிறது. அத்துடன் போலீசாரை அவர் தாறுமாறாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
எனவே அரவிந்த் சிங்கின் பைக்கில் இருந்து போலீசார் சாவியை எடுத்துள்ளனர். இதன் காரணமாக அரவிந்த் சிங் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அந்த நேரத்தில் பொதுமக்களும் அங்கு திரண்டு விட்டனர். அங்கு நடந்த சம்பவங்களை எல்லாம் ஒரு சிலர் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முன்னதாக போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரவிந்த் சிங், பைக் சாவியை நீங்கள் எப்படி எடுக்கலாம்? என கேள்வி எழுப்பினார். அத்துடன் அவர் தொடர்ந்து சாவியை கேட்டு கொண்டே இருந்தார். இதனால் சம்பவ இடத்திலேயே அவரது பைக்கை பறிமுதல் செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதன்படி அரவிந்த் சிங்கின் பைக் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டும் விட்டது.
இதனிடையே அரவிந்த் சிங் குறித்த விபரங்களை போலீசார் கேட்டனர். அதற்கு நான் உள்ளூரை சேர்ந்த பாஜக தலைவர் என்பதை அரவிந்த் சிங் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார். ஆனால் அதற்கெல்லாம் போலீசார் அசரவில்லை. பாஜக தலைவர் அரவிந்த் சிங் மீது போலீசார் அதிரடியாக எப்ஐஆர் பதிவு செய்துவிட்டனர்.
ஆனால் இந்த விஷயத்தில் தன் மீது தவறு இல்லை என அரவிந்த் சிங் கூறியுள்ளார். ஹெல்மெட் இல்லாததால் அபராதம் விதித்து கொள்ளும்படி நான் கூறி விட்டேன். ஆனால் போலீஸ் அதிகாரிகள் எனது பைக் சாவியை எடுத்தது மட்டுமல்லாமல், தகாத வார்த்தைகளாலும் பேசினர். இதன் விளைவாகதான் இந்த சம்பவம் நடைபெற்றது என அரவிந்த் சிங் கூறியுள்ளார்.
ஆனால் போலீசாரோ, அத்தனை தவறும் அரவிந்த் சிங் மீதுதான் என கூறியுள்ளார். நாங்கள் வழக்கமான சோதனைகளுக்காக அரவிந்த் சிங்கின் பைக்கை நிறுத்தினோம். ஆனால் பைக்கை நிறுத்திய உடனேயே அரவிந்த் சிங் எங்களை தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கினார். எனவேதான் அவரது பைக்கை பறிமுதல் செய்தோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு மிக தீவிரமாக வலியுறுத்தி வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த தலைவர் ஒருவரே போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விதிகளை பின்பற்றுவதில் இருந்து அரசியல் கட்கிகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அத்துடன் சம்பவ இடத்தில் இருந்த குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இது ஒரு தவறான முன் உதாரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் இன்னும் சில நெட்டிசன்களோ, அடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் தண்ணி இல்லாத காட்டிற்கு மாற்றப்படுவார்களா? இந்த பாஜக தலைவர் சாலை போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்படுவாரா? என கிண்டலும் செய்து வருகின்றனர். இதனிடையே சம்பவத்தின் போது அரவிந்த் சிங்கின் பைக்கில் எத்தனை குழந்தைகள் பயணம் செய்தனர் என்பது உறுதியாக தெரியவில்லை.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு