லைசென்ஸ் சஸ்பெண்டுக்கும், ஓட்டுநர் தகுதி ரத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? இதகூட தெரிஞ்சிக்கலனா எப்படி?
டிரைவிங் லைசென்ஸ் சஸ்பெண்டுக்கும், ஓட்டுநர் தகுதி ரத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் வாகனங்களினால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும், அந்த விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. நாட்டில் அரங்கேறும் பெரும்பாலான விபத்துகளுக்கு போக்குவரத்து விதிமீறல்களே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதனால், போக்குவரத்துத்துறை காவலர்கள் இந்த விஷயத்தில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கின்றனர்.

அந்தவகையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம், சில நேரங்களில் சிறை தண்டை மற்றும் சில ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் அல்லது ஓட்டுநர் தகுதியிழப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதில், கடைசி இரண்டை காவல்துறையினர் கையிலெடுப்பது அரிதினும் அரிதாகவே இந்தியாவில் தென்படுகின்றது. குறிப்பாக, வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதத்துடன் தங்களின் நடவடிக்கை முடித்துக் கொள்கின்றனர்.

சில நேரங்களில் விபத்துகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த மாதிரியான நேரங்களிலேயே கைது மற்றும் சிறைத்தண்டன உள்ளிட்ட நடவடிக்கையை காவல்துறையினர் எடுப்பர். இதுபோன்ற நேரங்களிலேயே அரிதாக ஓட்டுநர் உரிமம் ரத்து அல்லது ஓட்டுநர் தகுதியிழப்பு போன்ற நடவடிக்கைகளையும் காவல்துறையினர். இந்த இரு நடவடிக்கைகளைக்கு இடையே இருக்கும் வித்தியாசங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் மற்றும் ஓட்டுநர் தகுதியிழப்பு இவற்றிற்க்கு இடையே இருக்கும் வித்தியாசம் என்ன ?
உங்கள் உரிமம் இடைநீக்கம் செய்யப்படுகிறது என்றால், உங்களுடைய டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக செல்லாது என அர்த்தம். அதை வைத்துக் கொண்டு வாகனத்தை ஓட்ட முடியாது.
ஓட்டுநர் தகுதியிழப்பு என்பது ஓட்டுநர் என்கிற தகுதியை இழக்க செய்தல். டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தாலும் வாகனத்தை உங்களால் இயக்க முடியாது.
இந்த தண்டனைக் காலம் நாட்கள், வாரம், மாதம் ஏன் சில நேரங்களில் ஆண்டுக் கணக்கில்கூட வழங்கப்படலாம்.

என்னென்ன காரணங்களுக்காக ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றது?
இந்தியாவில் ஒரு சில குறிப்பிட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கே ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகின்றது. குறிப்பாக திரும்ப திரும்ப ஒரே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும்பட்சத்தில் போக்குவரத்து காவலர்கள் பாராபட்சமின்றி ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்கின்றனர்.

அதேவேலையில் உரிய ஓட்டுநர் உரிமம் இன்றி தொடர் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் வாகனத்தை முடக்குதல் மற்றும் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அது, மிக அதிகபட்ச அபராதம் அல்லது சிறைக் கடுங்காவலாகக்கூட இருக்கலாம் என கூறப்படுகின்றது. எனவேதான் போக்குவரத்து ஈடுபட வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

என்னென்ன காரணங்களுக்காக ஓட்டுநர் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றது.
- கவனக்குறைவு அல்லது கவனமில்லாமல் வாகனம் ஓட்டுதல்,
- விபத்தைப் புகாரளிக்கத் தவறுதல் அல்லது விபத்துக்குப் பிறகு நிறுத்தாமல் வாகனத்தை இயக்குதல்,
- ஒழுங்கற்ற முறையில் வாகனத்தை இயக்குதல்,
- காப்பீடு இல்லாது வாகனத்தை இயக்குதல்,
- அதீத வேகத்தில் வாகனத்தை இயக்குதல்,
- போக்குவரத்து விதமீறலில் தொடர்ச்சியாக ஈடுபடுதல்

மேலே பார்த்த காரணங்களுக்காக ஓட்டுநர் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். இதுமட்டுமின்றி, மருத்துவ காரணங்களுக்காகவும் சிலர் வாகனத்தை இயக்கும் தகுதி பறிக்கப்படுகின்றது. இத்தகைய நடவடிக்கைக்கு பின்னர் வாகனம் இயக்குவது மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகின்றது. இதை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் வாகனத்துறை வல்லுநர்கள்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட காலம் முடிவிற்கு வந்த பின்னர் நீங்கள் உங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை உரிய போக்குவரத்து காவலர் அல்லது ஆர்டிஓ-வை நாடி பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான விண்ணப்பத்தை உரிய நேரத்தில் கொடுத்துப் பெற்றுக் கொள்வது நல்லது. உங்களுடைய புதிய ஓட்டுநர் உரிமம் வருவதற்கு சில காலம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற உரிய அனுமதி சான்றை பெற்றிருக்க வேண்டும்.

இதன் வாயிலாக டிரைவிங் லைசென்ஸ் கிடைக்கும் முன்னரே வாகனத்தை இயக்க முடியும். இதுபோலவே ஓட்டுநர் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் தண்டனைக் காலம் முடிந்த பின்னர், உரிய ஆவணத்தைச் செலுத்தி தான் வாகனத்தை ஓட்ட தகுதியானவர் என்பதை உறுதி செய்த பின்னர் வாகனத்தை இயக்க தொடங்கலாம்.


Click it and Unblock the Notifications








