10 மணிக்கு மேல எந்த ரூல்ஸும் இல்லையா?.. கட்டாயம் தெரிஞ்சிக்க வேண்டிய ரூல்கள்.. இவற்றை எப்போமே மாத்த மாட்டாங்க!
கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய போக்குவரத்து ரூல்களை பற்றிய இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

குறிப்பிட்ட சில போக்குவரத்து ரூல்கள் நடைமுறையில் இருப்பதே நம்மில் பலருக்கு தெரிவதில்லை. திடீரென ஒரு நாள் காவலரிடத்தில் சிக்கும்போதுதான் அப்படி ஒரு ரூல்ஸ் இருப்பதே நமக்கு தெரிய வரும். "ஐயா, இதுக்கு முன்னாடி வரைக்கும் இந்த மாதிரி ஒரு ரூல் இருப்பதே எனக்கு தெரியாது. அடுத்தமுறை நான் கட்டாயம் அதை கடைபிடிக்கிறேன்" என கதறினாலும் காவலர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.

"ரொம்ப நாளா இந்த ரூல் இருக்கு நீங்க தெரிஞ்சிக்காட்டி எங்களால ஒன்னும் பண்ண முடியாது. இந்தாங்க செல்லாண்" என அபராதத்திற்கான ரிசீப்டை நம்ம கையில வச்சிட்டு அவங்க போய்ட்டே இருப்பாங்க. இந்த மாதிரியான நேரத்தில்தான், இப்படி ஒரு ரூல் ரொம்ப காலமாக நடைமுறையில் இருந்தும் நமக்கு எப்படி தெரியாமபோச்சு என நாம் யோசப்போம்.

இதற்கு, நம்மில் பலர் முறையான டிரைவிங் ஸ்கூலுக்கு போகாததே காரணம் ஆகும். டிரைவிங் ஸ்கூல்கள் வாகனத்தை ஓட்ட மட்டுமல்ல, அனைத்து போக்குவரத்து ரூல்களையும் கற்றுத் தருவதும் அவர்களின் கடமை ஆகும். ஆனால், பெரும்பாலான டிரைவிங் ஸ்கூல்கள் வாகனத்தை ஓட்ட மட்டுமே கற்று தருகின்றன. இத்துடன், சில முக்கிய ரூல்களையும் அவர்கள் கற்பிப்பிக்கின்றார்கள்.

உதாரணமாக, சிக்னலை கடைப்பிடிப்பது, திரும்பும் செய்ய வேண்டிய சமிக்ஞைகள் உள்ளிட்ட மிகவும் முக்கியமான ரூல்களை பற்றி மட்டுமே அவர்கள் கற்றுத் தருகின்றனர். இன்னும் சிலவற்றை கற்பிக்க அவர்கள் தவறிவிடுகின்றனர். இதன் விளைவாக சில ரூல்கள் நமக்கு புதுமுகங்களாக தெரிகின்றன. அவற்றிற்காக காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டியிருக்கின்றது.
இத்தகைய சிக்கல்களை தவிர்க்கும் விதமாகவே கார் பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய சில கட்டாய ரூல்களை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

10 மணிக்கு அப்புறம் எந்த ரூல்ஸும் இல்லை?
நம்மில் பலர் இரவு பத்து மணிக்கு மேல் எந்த ரூல்ஸும் பொருந்தாது என நினைக்கின்றனர். ஆனால், அதுதான் கிடையாது. எந்த நேரமாக இருந்தாலும் போக்குவரத்து ரூல்ஸ் உண்டு. கட்டாயம் இரவு பத்து மணிக்கு மேல் அனைத்து சிக்னல்களையும் மதிக்க வேண்டும். இதுமட்டுமின்றி, ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது, ஸ்டாப் லைனுக்குள் நிற்பது என அனைத்து போக்குவரத்து ரூல்களையும் நாம் கடைபிடிக்க வேண்டும்.

நாட்டில் அரங்கேறும் பெரும்பாலான விபத்துகள் இரவு நேரங்களிலேயே அரங்கேறுகின்றன. இதற்கு இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதே முக்கிய காரணமாகும். குறிப்பாக, இரவு நேரங்களில் தவறான பாதையில் பயணிப்பது, சிக்னல்களை மீறுவது உள்ளிட்ட வீதிமீறல்களையே வாகன ஓட்டிகள் அதிகம் செய்கின்றனர். இந்த மாதிரியான நேரங்களிலேயே விபத்துகளும் அரங்கேறுகின்றன. ஆகையால், நேரம் எதுவாக இருந்தாலும் போக்குவரத்து ரூல்களை கட்டாயம் கடைபிடித்த ஆக வேண்டும்.

ஓவர் டேக்கிங்:
ஓவர் டேக்கிங் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், நம்மில் பலர் வலது பக்கத்தில் இருந்து ஓவர் டேக் அனுமதி இருக்கின்றது ஆகையால், எப்போது வேண்டுமானாலும் ஓவர் டேக் செய்துக்கொள்ளலாம் என நினைத்துக் கொண்ட கண்டமேனிக்கு ஓவர் டேக் செய்கின்றனர். வளைவுகள், திருப்பங்களைகூட அவர்கள் கண்டுக் கொள்வதில்லை. இதுபோன்று, வளைவுகள் மற்றும் திருப்பங்களில் ஓவர் டேக் செய்வது போக்குவரத்து விதிமீறல்கள் ஆகும்.

ஹைபீம் லைட்:
நம்மில் பலருக்கு ஹை பீம் லைட்டுகள் வாகனங்களில் ஏன் கொடுத்திருக்கின்றார்களே என்பது தெரிவதில்லை. சாலை தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக பலர் இந்த லைட்டுகளை பயன்படுத்துகின்றனர். நகர்புற சாலைகளில் பயணிக்கும்போதும்கூட அவற்றை பயன்படுத்துவது வேதனை அளிக்கும் செயலாக இருக்கின்றது.

வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஹை பீம் லைட்டுகளை மின் விளக்குகள் இல்லா சாலைகளைக் கருத்தில் கொண்டே வழங்கியிருக்கின்றன. அதிக இருள் சூழ்ந்திருக்கும் என்கின்ற காரணத்தினால் மிக தெளிவான பார்வையை வழங்க வேண்டும் என்பதற்காக இவை வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த லைட்டுகளால் எதிரில் வருபவர்களுக்கு தெளிவான பார்வை கிடைக்காது.

அதீத வெளிச்சத்தால் பார்வை குருட்டு தன்மை ஏற்படும். இதனால் விபத்தைச் சந்தித்தவர்கள் இங்கு பலர் இருக்கின்றனர். இருப்பினும், ஒரு சிலர் தேவையற்ற நேரங்களிலும் ஹை பீம் லைட்டுகளை பயன்படுத்துகின்றனர். இது ஓர் விதிமீறல் செயல் ஆகும். ஆம், தேவையற்ற நேரங்களில், குறிப்பாக, நகர்புற சாலைகளில் பயணிக்கும்போது ஹை பீம் லைட்டுகளை பயன்படுத்தக் கூடாது. இது பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் போலீஸார்கள் அபராதம் வழங்க வாய்ப்புகள் உள்ளன.

சீட் பெல்ட்:
சீட் பெல்ட் அணிவது கட்டாயம். இந்த விதியை மீறுபவர்களுக்கும் தற்போது அபராதம் வழங்கப்பட்டு வருகின்றது. முன்னதாக, சீட் பெல்ட் முன்பக்க பயணிகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. சைரஸ் மிஸ்திரியின் மரணம் இந்த விதியில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. தற்போது பின்னால் இருக்கும் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட்டை அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த விதியை மீறுபவர்களுக்கு அபராதத்தை வழங்க காவல்துறையினர் தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்துதல்:
வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும்போது செல்போன் பயன்படுத்துவது குற்றம் என போக்குவரத்து விதிமீறல்கள் கூறுகின்றன. அதேநேரத்தில், ஒரு சிலர் ப்ளூடூத் ஹெட்ஃபோன், இயர்ஃபோன்களை பயன்படுத்துவது குற்றமில்லை என கருதுகின்றனர். ஆனால், வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும்போது கவனத்தைச் சிதறடிக்கும் வகையில் எந்த செயலைச் செய்தாலும் அது போக்குவரத்து விதிமீறலே ஆகும். ஆம், செல்போன் மட்டுமல்ல ஹேண்ட்ஸ்ஃப்ரீ கருவிகள் எதை பயன்படுத்தினாலும் அது போக்குவரத்து விதிமீறலே ஆகும்.


Click it and Unblock the Notifications








