இத மட்டும் ஃபாலோ பண்ணீங்க தட்கல் டிக்கெட்டை கன்ஃபார்மாக்கலாம்... வெறும் நான்கே ஸ்டெப்கள்தான்!
தட்கல் டிக்கெட்டை கன்ஃபார்மாக்குவதற்கான சில டிப்ஸ்களை இந்த பதிவில் வழங்கயிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கு ரயில் போக்குவரத்தே மிக சிறந்தது. பட்ஜெட்டில் எந்த ஊருக்கும் போய்விட்டு வந்துவிடலாம். பேருந்தில் எல்லாம் பட்ஜெட் டிராவலை எதிர்பார்க்கவே முடியாது. ஆனை வில, குதிர விலையில் டிக்கெட் ரேட் சொல்லுவாங்க. அதிலும், அந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனங்கள பத்தி சொல்லவே வேண்டாம். பண்டிகை நாட்கள் வந்துவிட்டா போதும். அதுதான் நேரம்னு ஒட்டுமொத்த வருஷத்துக்குமான லாபத்தை அந்த ஓரிரு நாட்களிலேயே எடுத்திட பாப்பாங்க.

இதுபோன்ற பல காரணங்களினால்தான் பல பேர் ரயில் போக்குவரத்தை அதிகம் விரும்புகின்றார்கள். இதுமட்டுமில்லைங்க, தேவைப்பட்டா ரிலாக்ஸா ஒரு வால்க் மற்றும் அவசர நேரங்களில் கழிவறை போன்றவற்றையும் எந்த தடையும் இன்றி ரயில்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுவும் பலர் ரயில்களை அதிகம் பயன்படுத்த காரணமாக இருக்கின்றது.

ஆனால், ரயில்களுக்கான டிக்கெட்டுகளைக் கடைசி நேரத்தில் புக் செய்வதுதான் மிகுந்த சிரமமான ஒன்றாக உள்ளது. சில முக்கிய ரயில்களின் டிக்கெட்டுகள் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட ஒரு சில தினங்களிலேயே முழுமையாக விற்று தீர்ந்துவிடும் நிலை தென்படுகின்றது. இந்த மாதிரியான சூழலில் கடைசி நேரங்களில் ரயில் பயண பிளானை போட்டு, அதற்கான டிக்கெட்டுகளை வாங்குவது என்பது இயலாத ஒன்று.

இத்தகைய பயணிகளுக்கு உதவும் வகையிலேயே இந்தியன் ரயில்வே தட்கல் டிக்கெட் வசதியை நடைமுறையில் வைத்திருக்கின்றது. இது அவசர கால பயண திட்டங்களின்போது நமக்கான இருக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள உதவும். ஆனால், இதில் டிக்கெட்டுகளை பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

ஏனெனில், நம்மைப் போல் பலர் ஐஆர்டிசியின் தளத்தில் டிக்கெட்டை புக் செய்ய கழுகு போல் காத்துக் கொண்டிருப்பர். அவர்களுடன் போட்டி போட்டு நமக்கான டிக்கெட்டை செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும். 7 முதல் 10 சதவீதம் வரையிலான இருக்கைகள் ஐஆர்சிடிசி வாயிலாகவே முன்பதிவு செய்யப்படுகின்றது.

இருப்பினும், அவற்றை புக் செய்யும்போது மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. ஒரு சில நூறு இருக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் போட்டி போடுவதனால் பெரும்பாலும் பலர் எர்ரர்களையே சந்திக்கின்றனர். அந்தவகையில், அதிகப்படியானோர் 503 எர்ரரையேச் சந்திக்கின்றனர். இதுமாதிரியான எர்ரர்கள் இல்லாமல் நமக்கான இருக்கையை எப்படி கன்ஃபார்ம் செய்வது என்பதற்கான சில வழிமுறைகளையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

அனைத்து தகவல்களையும் தயாரா வச்சுக்கோங்க:
தட்கல்லில் டிக்கெட்டுகளை புக் செய்ய நேரம் மிக முக்கியம். நாம் வீணாக்கும் ஒவ்வொரு செகண்டுகளும் நம்முடைய டிக்கெட்டை இழப்பதற்கான வாய்ப்பை அதிகரித்துவிடும். எனவேதான் டிக்கெட் புக்கிங்கை ஆரம்பிக்கும் முன் அனைத்து தகவல்களையும் தயாரானதாக வைத்திருக்க வேண்டும். பயணிகள் பெயர், பயண தேதி என அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.

லிஸ்டை தயார் செய்துகொள்ளுங்கள்:
ஐஆர்சிடிசி-யில் தனி கணக்கை வைத்திருப்பவர்களால் தங்களுடைய சொந்த விபரங்கள் பலவற்றை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அவற்றில் ஒன்றே மாஸ்டர் லிஸ்ட். இதன் வாயிலாக நம்முடைய குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். உடனடியாக டிக்கெட்டை புக் செய்ய விரும்போது இது பயனாக இருக்கும். ஒரே க்ளிக்கில் பயணிகள் லிஸ்ட் நம்முடையன் வருபவர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.

ஸ்டேஷன் கோட்களை கை வசம் வைத்திருப்பதும் அவசியம்:
நம்மில் பலர் செய்யக் கூடிய மிக முக்கியமான தவறுகளில் இதுவும் ஒன்று. ஸ்டேஷன்களின் கோட்களை அறிந்துக் கொள்ளாமல், கடைசி நேரத்தில் இணையத்தில் சென்று அதை தேடும் வழக்கத்தை நாம் கொண்டிருக்கின்றோம். இதை தவிர்த்து டிக்கெட்டை புக் செய்யும் முன்னரே அனைத்து தகவல்களையும் ஓர் நோட் பேடில் ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும். இது வீணாக நேரம் விரையமாவதைத் தவிர்க்க உதவும்.

பெர்த்துக்காக நேரத்தை வீணாக்காதீங்க:
நாம புக் செய்யுறதே தட்கல் டிக்கெட் என்பதை மறந்து ஒரு சிலர் பர்த்தை தேர்வு செய்வதில் சில நேரங்களை எடுத்துக் கொள்கின்றனர். முக்கியமாக இதனை தவிர்ப்பது நல்லது. சில நேரங்களில் லோவர் பர்த் கிடைக்காமலும் போகலாம். எனவே இதற்காக நேரத்தை வீணாக்காமல், எந்த பர்த்தாக இருந்தாலும் ஓகே என்பதை தேர்வு செய்துவிடுவது மிக மிக சூப்பரானது.

மேலே பார்த்த வழிமுறைகளைப் பின் பற்றி தட்கல் டிக்கெட் புக் செய்தால் 99.99 சதவீதம் உங்களுக்கான டிக்கெட் கன்ஃபார்மாகும் வாய்ப்பு உண்டு. இதேபோல், ஆன்லைனில் பணத்தை செலுத்துபவர்கள் தங்களின் ஏடிஎம் கார்டின் தகவல்களையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, ஓடிபி வரும் செல்போனை டவர் கிடைக்கும் இடத்தில் வைத்துவிடுங்கள். பலர் இந்த விஷயத்தில்தான் பலர் தங்களுக்கான தட்கல் டிக்கெட்டை தவற விடுகின்றனர். இந்த விஷயங்களில் எல்லாம் சற்று முன்னெச்சரிக்கை செயல்பட்டால் உங்களுக்கான இருக்கையை கன்ஃபார்மாகுவது நிச்சயம்.


Click it and Unblock the Notifications