Just In
- 4 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 6 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஸ்கூட்டர் ஓட்டதெரியாமல் லாரி அடியில் விழுந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்த பெண்கள்..!!
ஸ்கூட்டர் ஓட்டதெரியாமல் லாரி அடியில் விழுந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்த பெண்கள்..!!
Recommended Video
புதுக்கோட்டை பிரதான சாலை ஒன்றில் நிலைதடுமாறிய விதத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய இரு பெண்கள் விபத்தில் சிக்கி, லாரி ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்தனர்.
அந்த திக்... திக்.. நிமிடங்கள் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்போது அது வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சாலையில் இருந்த வாகனங்கள் மெல்ல நகர்ந்து கொண்டுயிருந்தன.
அப்போது சாலையோரமாக ஸ்கூட்டரில் வந்த இரு பெண்கள், சாலை நடுவே செல்ல முயன்றனர். அதுவரை அவர்கள் பின்னால் வந்த லாரி, ஸ்கூட்டரின் வலது பக்கத்தை நெருங்கியது.
ஸ்கூட்டரை ஓட்டிய பெண், லாரி அருகில் வருவது தெரியாமல், மேலும் ஸ்கூட்டரை சாலையின் நடுப்பகுதிக்கு கொண்டு செல்ல முயல லாரி ஓட்டுநரும் அப்பெண்களின் பக்கவாட்டு பகுதியை வந்தடைந்தார்.
Trending On DriveSpark Tamil:
அப்போது லாரியின் சைடு பகுதியில் மோதிய ஸ்கூட்டர் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையில் விழுந்தது. ஸ்கூட்டரில் இருந்த பெண்களும் இரு சக்கரங்களுக்கு நடுவே விழுந்தனர்.
லாரிக்கு அடியில் விழுந்த பெண்கள் மயிரிழையில் உயிர் தப்பும் வீடியோ:
லாரியின் பின் சக்கரம் ஒரு பெண்ணின் தலை மற்றும் நெஞ்சை நெருங்கும் வேளையில், ஓட்டுநர் சுதாரித்து பிரேக்கை அழுத்தினார்.
அப்பெண்ணின் உடம்பு மீது ஏற நெருங்கிக்கொண்டு இருந்த சக்கரங்கள், மயிரிழையில் நின்றது. இதனால் அப்பெண் உயிர் தப்பினார்.
குறிப்பாக ஓட்டுநர் இந்த இரு பெண்களும் வருவதை கவனித்திருக்கவில்லை என்றால், அந்த இரு பெண்கள் மீது லாரி சக்கரங்கள் ஏறி இறங்கியிருக்கும்.
மேலும் ஸ்கூட்டரும் இந்த விபத்தில் நசுங்கிபோயிருக்கும். லாரி ஓட்டுநர் சாதுர்யத்தால் நடக்கவிருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டு வாகன ஒட்டிகள் உயிர் பிழைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பிரதான சாலையில் நடைபெற்ற இந்த விபத்திற்கான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டு, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஹெல்மட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டி வந்த அந்த இரண்டு இளம் பெண்கள் மீதும் பல சமூக வலைதள வாசிகள் தங்களது கோபங்களையும் வருத்தங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு பரபரப்பான சாலையில் வாகனம் ஓட்டி செல்லும் போது, சாலையில் இருந்து மற்ற பகுதிக்கு செல்ல வேண்டும் என்றாலும் அல்லது சாலையை தாண்ட வேண்டும் என்றாலும் கவனத்துடன் செயல்படுவது ஒரு அடிப்படையான சிந்தனை.
இதற்கு தான் ஸ்கூட்டர் கண்ணாடிகளின் மேல் ஒரு கவனத்தை வைத்துக்கொள்ள வேண்டும். பின்னால் வரும் வாகனங்களை அவை தான் முன்யிருக்கும் நமக்கு காட்டும்.
Trending On DriveSpark Tamil:
இந்த விபத்தில் பெண்கள் ஓட்டி வரும் ஸ்கூட்டரின் இரு பக்கங்களில் கண்ணாடிகள் இல்லை என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் ஸ்கூட்டரை ஓட்டிய பெண் சாலையை கவனிக்கவுமில்லை என்பதை அவரது செய்கையின் மூலம் உணரலாம்.
இதன்காரணமாகவே அவர், ஸ்கூட்டரை லாரியின் பக்கவாட்டில் கொண்டு போய் மோதுகிறார். மேலும் இந்த சம்பவத்தை பொறுத்தவரை லாரி ஓட்டுநர் தான் நிலையறிந்து செயல்பட்டுள்ளார்.
லாரி ஓட்டுநர் அந்த இரு பெண்களும் மோத வாய்ப்புள்ளதை முன்பே எதிர்பார்த்து தான் அவர்களை கடக்க முயற்சித்துள்ளார்.
மேலும் நான்கு வழி கொண்ட அந்த சாலை மிக நெருக்கமாகவும் மக்கள் போக்குவரத்து அதிகமாகவும் காணப்படுகிறது.
இதன் காரணமாக ஸ்கூட்டரில் வந்த பெண்கள் லாரியை கவனிக்காமல், நெருங்கி வருவதை தெரிந்ததும், அவர் கண்ணாடியை பார்த்தவாரே லாரியை சாலையில் செலுத்தியுள்ளார்.
அந்த சமயோஜித சிந்தனை லாரி ஓட்டுநரிடம் இருந்துள்ளதால் தான், நடக்கவிருந்த பெரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது. அது ஸ்கூட்டரை ஓட்டி சென்ற பெண்களிடமில்லை என்பதால் தான் இப்படி ஒரு சம்பவத்தை அவர்கள் சந்திக்க நேர்ந்துள்ளது.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!