நெடுஞ்சாலை & எக்ஸ்பிரஸ் சாலைகளில் வாகனங்களின் வேக வரம்பை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!
நெடுஞ்சாலை & எக்ஸ்பிரஸ் சாலைகளில் வாகனங்களின் வேக வரம்பை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டை அதிகரிக்க மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் அதிகப்பட்சம் மணிக்கு 80 கி.மீ வேகத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்த வேக வரம்பு விரைவில் அதிகரிக்கப்படுகின்றன.

அதன்படி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் கார்களின் வேகம் 80 கி.மீ-ல் இருந்து 120 கி.மீ-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இருசக்கர வாகனங்களுக்கு நடைமுறையில் உள்ள 60 கி.மீ அதிகப்பட்ச வேகத்தை மணிக்கு 80 கி.மீ-ஆக உயர்த்தப்படுகிறது.

அதை தொடர்ந்து லாரி, பேருந்து உட்பட கனரக வாகங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 80 கி.மீ வேகத்திலும், எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 90 கி.மீ வேகத்திலும் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ள மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகரங்களுக்குள் வாகனங்கள் பயணிப்பதற்கு, அந்தந்த மாநில அரசுகளே வேகக்கட்டுப்பாட்டை நிர்ணயம் செய்யும் என கூறப்பட்டுள்ளது.

இதுப்பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது, காரிகளில் பொருத்தப்படும் இசியூ யூனிட் என்ற சாதனம் வேகக்கட்டுப்பாட்டு வரம்பிற்கு சாதனமானதாக உள்ளது.

இதனை பயன்படுத்தி, சாலைகளில் செல்லும் எந்தவொரு வாகனத்தின் வேகத்தையும் அறியலாம். இதற்காக தனியாக உள்ள சாதனத்தின் பயன்பாடு தேவையற்றது என்றார் அவர்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுஸுகி, டொயோட்டா, ஹூண்டாய் ஆகியவை உருவாக்கும் கார்கள் இசியூ சார்ந்த வேக வரம்பிற்குள் வரும்.

நெடுஞ்சாலைகளில் செல்லும் கார்கள் 80 கி.மீ என்ற வேகக்கட்டுப்பாட்டை தாண்டும் போது, கார்களுக்கான எரிவாயு சப்ளை தானாக நின்றுவிடும். இதுதான் இ.சி.யூ-வின் பயன்பாடு.

தொடர்ந்து இந்த புதிய வேகக்கட்டுப்பாட்டு அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்த பின்பு, கார் நிறுவனங்கள் கார்களில் வேகக்கட்டுப்பாட்டை அதிகரித்து வழங்கும்.

வெறு கார்களுக்கு என்றில்லாமல், கனரக வாகனங்களுக்கும் இசியூ யூனிட்டை பொருத்தலாம். அதை ஏற்கனவே டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், மஹிந்திரா மற்றும் பாரத் பென்ஸ் போன்ற நிறுவனங்கள் செய்து வருகின்றன.
குறிப்பாக வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு நடைமுறைக்கு வரும் போது, அதிவேகத்தால் ஏற்படும் வாகன விபத்துகள் குறையும்.

கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை நாம் முறையாக கையாளும் போது, அதற்கான பராமரிப்பு செயல்பாடுகள் கட்டுக்குள் வரும். அதை தவிர்த்து முறையற்ற பயணத்தை தொடர்ந்தால் போக்குவரத்து விதியை மீறுவது மட்டுமின்றி, மோட்டார் வாகன சட்டத்தின் படி அது தண்டனைக்குரிய என்பதையும் நினைவில் கொள்க.


Click it and Unblock the Notifications








