உலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை வெளியிடும் முதல் நிறுவனம் இதுதான்: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

உலகிலேயே முதல் முறையாக புதிய சேவை ஒன்று நடைமுறைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தினால், கார்கள் உலகில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை வெளியிடும் முதல் நிறுவனம் இதுதான்: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

தெற்கு சீனாவில் உள்ள ஷாங்காய் மாகாணத்தில் வாகனங்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 16ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி வருகின்ற 25ம் தேதி நடைபெற இருக்கின்றது.

உலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை வெளியிடும் முதல் நிறுவனம் இதுதான்: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த கண்காட்சியில் அந்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஹூவாய் டெக்னாலஜிஸ் நிறுவனம், உலகின் முதல் 5ஜி சேவைக்கான ஹார்டுவேரை கடந்த திங்கள் கிழமை அன்று அறிமுகம் செய்தது. இந்த 5ஜி ஹார்டுவேர் ஆட்டோமோடிவ் துறைக்கு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை வெளியிடும் முதல் நிறுவனம் இதுதான்: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஹூவாய் நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்கு தேவையான சாதனங்களைத் தயாரிப்பதில் முன்னணி வகித்து வருகிறது. அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள தகவல் தொடர்பு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்குள், 5ஜி சேவையை யார் முதலில் அறிவிப்பது என்று மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது.

உலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை வெளியிடும் முதல் நிறுவனம் இதுதான்: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்நிலையில்தான், ஹூவாய் நிறுவனம், வாகனத்துறைக்கான 5ஜி மாடுலை கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், இந்த புதிய 5ஜி தொழில்நுட்ப ஹார்டுவேர், தானியங்கி கார்களில் பயன்படுத்தப்பட உள்ளது.

உலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை வெளியிடும் முதல் நிறுவனம் இதுதான்: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு பலாங் 5000 5ஜி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனைக் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த எம்எச் 5000 மாடுலை தழுவி தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உலகின் முதல் 5 ஜி மாடுலாக உருவாகியுள்ள இந்த பலாங் 5000 5ஜி மாடுல் மூலம் உயர்ந்த குவாலிட்டி மற்றும் அதிவேக இணைப்பைப் பெற முடியும் என்று ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை வெளியிடும் முதல் நிறுவனம் இதுதான்: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மேலும், ஹூவாய் நிறுவனம் கூறியதாவது, "இந்த புத்தம் புதிய தொழில்நுட்பம் எதிர்கால தானியங்கி ஆட்டோ இன்டெலிஜன்ட் கார்களில் பொருத்தப்பட உள்ளன. இந்த தொழில்நுட்பமானது எதிர்கால தானியங்கி கார்கள் பயன்பாட்டில் மிகப்பெரிய பங்கினை அளிக்க உள்ளது. இதனால், வாகனத்துறை அதிநவீன யுகத்திற்கு மாறும் சூழல் உருவாகியுள்ளது" என தெரிவித்தது.

உலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை வெளியிடும் முதல் நிறுவனம் இதுதான்: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஹூவாய் நிறுவனம் இந்த புதிய தொழில்நுட்பத்தை சீனாவில் உள்ள முக்கிய நகரங்களான ஷாங்காய், ஷென்சென் மற்றும் உக்ஸி ஆகிய பகுதிகளில் சோதனை செய்தது. அவ்வாறு, இந்த தொழில்நுட்பங்கை உள்நாட்டு தயாரிப்பான ஸ்வாத் மற்றும் எஃப்ஏடபிள்யூ, டாங்பெங்க் மற்றும் சங்கன் ஆகிய நிறுவனங்களின் கார்களில் வைத்து சோதனை செய்துள்ளது. இந்த சோதனையோட்டத்தை அடுத்து தற்போது புரொடக்ஷனில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 23, 2019, 20:13 [IST]
English summary
Huawei launched 5G communincation module at Shanghai Autoshow 2019. Read In tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+