Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை வெளியிடும் முதல் நிறுவனம் இதுதான்: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
உலகிலேயே முதல் முறையாக புதிய சேவை ஒன்று நடைமுறைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தினால், கார்கள் உலகில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
தெற்கு சீனாவில் உள்ள ஷாங்காய் மாகாணத்தில் வாகனங்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 16ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி வருகின்ற 25ம் தேதி நடைபெற இருக்கின்றது.
இந்த கண்காட்சியில் அந்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஹூவாய் டெக்னாலஜிஸ் நிறுவனம், உலகின் முதல் 5ஜி சேவைக்கான ஹார்டுவேரை கடந்த திங்கள் கிழமை அன்று அறிமுகம் செய்தது. இந்த 5ஜி ஹார்டுவேர் ஆட்டோமோடிவ் துறைக்கு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்கு தேவையான சாதனங்களைத் தயாரிப்பதில் முன்னணி வகித்து வருகிறது. அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள தகவல் தொடர்பு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்குள், 5ஜி சேவையை யார் முதலில் அறிவிப்பது என்று மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில்தான், ஹூவாய் நிறுவனம், வாகனத்துறைக்கான 5ஜி மாடுலை கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், இந்த புதிய 5ஜி தொழில்நுட்ப ஹார்டுவேர், தானியங்கி கார்களில் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு பலாங் 5000 5ஜி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனைக் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த எம்எச் 5000 மாடுலை தழுவி தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உலகின் முதல் 5 ஜி மாடுலாக உருவாகியுள்ள இந்த பலாங் 5000 5ஜி மாடுல் மூலம் உயர்ந்த குவாலிட்டி மற்றும் அதிவேக இணைப்பைப் பெற முடியும் என்று ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஹூவாய் நிறுவனம் கூறியதாவது, "இந்த புத்தம் புதிய தொழில்நுட்பம் எதிர்கால தானியங்கி ஆட்டோ இன்டெலிஜன்ட் கார்களில் பொருத்தப்பட உள்ளன. இந்த தொழில்நுட்பமானது எதிர்கால தானியங்கி கார்கள் பயன்பாட்டில் மிகப்பெரிய பங்கினை அளிக்க உள்ளது. இதனால், வாகனத்துறை அதிநவீன யுகத்திற்கு மாறும் சூழல் உருவாகியுள்ளது" என தெரிவித்தது.
ஹூவாய் நிறுவனம் இந்த புதிய தொழில்நுட்பத்தை சீனாவில் உள்ள முக்கிய நகரங்களான ஷாங்காய், ஷென்சென் மற்றும் உக்ஸி ஆகிய பகுதிகளில் சோதனை செய்தது. அவ்வாறு, இந்த தொழில்நுட்பங்கை உள்நாட்டு தயாரிப்பான ஸ்வாத் மற்றும் எஃப்ஏடபிள்யூ, டாங்பெங்க் மற்றும் சங்கன் ஆகிய நிறுவனங்களின் கார்களில் வைத்து சோதனை செய்துள்ளது. இந்த சோதனையோட்டத்தை அடுத்து தற்போது புரொடக்ஷனில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.