Just In
- 46 min ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 2 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 3 hrs ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 3 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
Don't Miss!
- News உன் பிரச்சினையே லாரில அள்ளிட்டு போற அளவு இருக்கு.. இதுல நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ற!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதித்த 26 பெற்றோர்களுக்கு ஜெயில்..! போலீசார் அதிரடி நடவடிக்கை
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதித்த பெற்றோர்கள் 26 பேருக்கு ஐதராபாத் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதித்த பெற்றோர்கள் 26 பேருக்கு ஐதராபாத் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் சிறுவர் வாகனம் ஓட்டுவது என்பது சாதாரணமாக மாறிவிட்டது. பலர் பள்ளி சீருடைகளிலேயே பைக்குகளை ஓட்டி செல்வதை பார்க்க முடிகிறது.
லைசன்ஸ் பெற தகுதியே இல்லாத வயதில் இவர்கள் வாகனம் ஓட்டுவதில் விபத்துக்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இது இவர்களை மட்டுமல்லாமல் ரோட்டில் செல்லும் மற்றவர்களையும் இது பாதித்து வருகிறது.
இந்நிலையில் லைசன்ஸ் இல்லாத மைனர்கள பைக் ஓட்டினால் அவர்களை பைக் ஓட்ட அனுமதித்த பெற்றோர்களுக்கு தண்டனை வழங்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு அமலில் உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே தமிழ்நாட்டில் இது போன்ற இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளது. அதில் மைனர் பைக் ஓட்டியதால் அவர்களின் பெற்றோருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இச்சட்டம் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்., 23ம் தேதி வரையில் 273 வழக்குகள் மைனர்கள் பைக் ஓட்டியது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து ஐதராபாத் டிராபிக் போலீஸ் கூடுதல் கமிஷ்னர் அணில் குமார் இது குறித்து கூறுகையில் :"கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் மைனர்கள் பைக் ஓட்டியது தெடர்பாக 273 வழக்குகளை பதிவு செய்துள்ளளோம்.
அதில் மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பைக் ஓட்டிய மைனர்களின் பெற்றோர்கள் 20 பேருக்கும், ஏப்ரம் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 6 பேரின் பெற்றோர்களுக்கும் தண்டனை வழங்கியுள்ளோம். அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து மைனர் டிரைவிங் தொடர்பாக பல அதிரடி நடவடிக்களை எடுக்கவுள்ளோம். அதே நேரத்தில் மைனர் டிரைவிங் தொடர்பாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.
முறையான லைசன்ஸ் இல்லாமல் மைனர்கள் பைக் ஓட்டுவது அவர்களது உயிருக்கு மட்டுமல்ல மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இனி மைனர்கள பைக் ஒட்டினால் அதற்கு அவர்களின் பெற்றோர்கள் தான் பொறுப்பு " என கூறினார்.
போலீசாரின் இந்த கடுமையான நடவடிக்கை முற்றிலும் வரவேற்க்க கூடியதே பைக் மீது உள்ள மோகத்தால் சிறு வயதிலேயே முறையான பயிற்சியும், லைசன்ஸ்சும் இல்லாமல் பைக்குளை ரோட்டில் ஓட்டி வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
மைனர்கள் பைக் ஓட்டினால் போலீஸ் பிடிப்பார்கள் என தெரிந்த சிலர் மெயின் ரோட்டில் பைக் ஓட்டாமல் தெருக்கள் மற்றும் சந்துகள் வழியாக புகுந்து பைக்குளை ஓட்டி வருகின்றனர். இதனால் விபத்துக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது. இதை தடுக்க கடும் நடவடிக்கை தேவை தான்.
ஆனால் இந்த மாதிரியான கடும் நடவடிக்கைகள் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு இல்லை பலருக்கு மைனர்கள் பைக் ஓட்டுவதால் வரும் சிக்கல்கள் குறித்து தெரிவது இல்லை. இந்த விழிப்புணர்வை முதலில் பெற்றோர்கள மத்தியில் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
இதற்காக போலீசாார் சார்பில் பள்ளிகளில் பெற்றோர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி பெற்றோர்களையும் குழந்தைகளையும் ஒன்றாக வைத்து மைனர்கள் பைக் ஓட்டினால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றியும். அதற்கான தண்டனை பற்றியும் எடுத்துரைக்க வேண்டும்.
மைனர்கள் பைக் ஓட்டினால் பெற்றோர்களுக்கு தான் தண்டனை கிடைக்கும் என்ற சட்ட திருத்தம் குறித்த தகவல் பெற்றோர்களிடம் சென்றாலே மைனர்கள் பைக் ஓட்டுவது குறையும். மாறாக நேரடியாக பெற்றோர்களுக்கு தண்டனை வழங்குவது அவர்களுக்கு சங்கடத்தையும் மனவேதனையையுமே அதிகம் உருவாக்கும்.
வீட்டில் சிறுவர்கள் எவ்வளவு அடம் பிடித்தாலும் அவர்களை பைக் ஓட்ட அனுமதிப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் வேறு ஏதாவது ஒரு விதத்தில் பைக் டிரைவிங்கில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு தான்.
Note: Images are for symbolic/representative purpose only. Images via Bangalore Traffic Police.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!