Just In
- 34 min ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 1 hr ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 1 hr ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 3 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Movies Sivakarthikeyan: புல்லட்டைவிட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போதையில் வாகனம் ஓட்டினால் வேலை காலி: ஹைதராபாத்தின் அதிரடி...
தெலுங்கானா மாநில ஹைதராபாத்தில் அம்மாநகர போக்குவரத்து காவல்துரையினர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் பணிபுரியம் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்புகின்றனர்.இந்த நடவடிக்கை ஹைதராபாத் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் வாகன விபத்துக்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதி வேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்தி வாகனம் ஓட்டுதல் போன்ற பல்வேறு விதி மீறல்களால் சாலை விபத்துகளும், விபத்துகளில் உயிர் இழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனை தடுக்க அனைத்து மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக அளவு விபத்துகள் நடப்பதாக கருதப்படுகிறது, மேலும் இந்திய வாகன தடுப்பு பிரிவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மாபெரும் குற்றமென குறிப்பிட்டுள்ளனர். இந்திய போக்குவரத்து துறை சாலைகளில் எச்சரிக்கை பலகைகள் வைத்தும், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், விளம்பரங்கள் செய்தும் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை குறையவில்லை.
ஓட்டுநர் உரிமம் ரத்து, வாகன பறிமுதல் போன்ற பல்வேறு கடுமையான சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தியும் அதை சரியாக நடைமுறைப்படுத்தாத காரணத்தால் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
சமீபத்தில் பல்வேறு பிரபலங்கள் மது அருந்தி வாகனம் ஒட்டியது ஊடகங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.போக்குவரத்து காவலர்களின் மெத்தனம், லஞ்சம் போன்ற பல்வேறு முறைகேடுகளால் சாலை விபத்துக்கள் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது.
MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!
இந்நிலையில் தெலுங்கானா மாநில ஹைதராபாத்தில் அம்மாநகர போக்குவரத்து காவல்துரையினர் மது அருந்தி வாகனம் ஒட்பவர்களை கட்டுப்படுத்த அதிரடியான புது முயற்சியை எடுத்துள்ளது. ஹைதராபாத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டுபவர்களை பிடித்து அபராதம் விதிப்பதோடு விட்டுவிடாமல், அவர்கள் பணிபுரியும் நிறுவன முகவரியை வாங்கி, இவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினார் என குறிப்பிட்டு நிறுவனத்திற்கு கடிதம் அனுப்புகின்றனர். இந்த நடவடிக்கையால் அம்மாநகர மது பிரியர்கள் பீதியில் உள்ளனர்.
ஹைதராபாத் போலீசார் அனுப்பும் கடிதங்களில் நிறுவன பெயர் மட்டும் குறிப்பிடாமல் ஊழியர் மேலாண்மை அதிகாரிகளுக்கு நேரடியாக செல்லும் வகையில் கடிதங்களை அனுப்புகின்றனர். இதன்மூலம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் அல்லது அவர்கள் வேலை போவதற்கு கூட வாய்ப்புகள் அதிகம்.
ஹைதராபாத் போக்குவரத்து காவல்துரையினரின் இந்த கடிதம் அனுப்பும் திட்டத்திற்கு அங்கு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் மற்ற மாநில போலிசாரும் நடைமுறைபடுத்தினால் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தலாம் என கருதப்படுகிறது. இதை ஒரு சட்டமாக கொண்டு வரலாம் என மூத்த வல்லுனர்கள் கூறிவருகின்றனர்.
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!