163 கி.மீ., வேகத்தில் பறந்த காருக்கு ரூ 1.8 லட்சம் அபராதம்
ஐதராபாத் 8 வழி சாலையில் கடந்த ஒரு ஆண்டில் 127 முறை அதிவேகத்தில் பறந்த காருக்கு ரூ 1.8 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் 8 வழி சாலையில் கடந்த ஒரு ஆண்டில் 127 முறை அதிவேகத்தில் பறந்த காருக்கு ரூ 1.8 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள 8 வழிச்சாலையில் அதிகபட்ச வேகமாக 100 கி.மீ வேகத்தில் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய போக்குவரத்து அமைச்சகம் இதை 120 கி.மீ., ஆக உயர்த்தியுள்ளது.

இந்நிலையில் அந்த பகுதியில் சென்று வரும் ஹோண்டா ஜாஸ் கார் ஒன்று அதிக வேகத்தில் சென்றதற்காக ரூ 1.8 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள இ-செல்லான் போர்ட்டலில் இருந்து விதிக்கப்பட இந்த அபாரதங்களில் இந்த கார் 163 கி.மீ., வேகம் வரை சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி முதல் கடந்த 2018 மார்ச் 10ம் தேதி வரையில் இந்த கார் 127 முறை இப்பகுதியில் அதிகவேகமாக சென்றுள்ளது. ஒவ்வொரு முறைக்கும் ரூ 1,435 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ 1,82,245 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக ரோடுகளின் தரம் அதிகரித்து வருகிறது. இதற்காக டிரைவர்கள் தங்கள் காரின் அதிகபட்ச வேகத்தை கணக்கிடவோ, டிரைவரின் திறமை பரிசோதிக்கவோ, இந்த ரோடுகளை பயன்படுத்த கூடாது, இது பெரும் ஆபத்தில் சென்று முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications